search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man suicide"

    • இவர் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வந்துள்ளார்.
    • திடீரென வீட்டில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தேனி:

    தேனி அருகே கருவேல நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 23). இவர் போடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வந்துள்ளார். நேற்று திடீரென வீட்டில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தாய் ஒச்சம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • படிப்பில் நாட்டம் இல்லாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே கண்டமனூரை சேர்ந்தவர் மணி மகன் அபினேஷ்(20). இவர் சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

    அவரது பெற்றோர் படிக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் படிப்பில் நாட்டம் இல்லாததால் விஷம் குடித்து மயங்கினார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சடலமாக மிதந்தார்.
    • வாலிபர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பாலமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் கோபால்(24).

    இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று மாலை வீட்டைவிட்டு சென்றவர் மாயமானார். இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ேகாபால் உடலை மீட்டனர். மேலும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள குரும்பபட்டி இந்திராநகரை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துச்செல்வன்(24).

    இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    அவரை அழைத்தும் வராததால் வேதனையில் இருந்த முத்துச்செல்வன் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்ெகாம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வேடசந்தூர் அருகே மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருேக கருக்காம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார். ஈரோடு மாவட்டம் முத்தூரில் உள்ள தனியார் மில்லில் கேசியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கினார். அவரை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஜெயராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தற்கொலை செய்த வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
    • தற்கொலை தொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் முகேஷ்ராஜ்(வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ்ராஜிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் தேடி வந்துள்ளனர்.

    சமீபத்தில் அவருக்கு பார்த்த பெண், முகேஷ் ராஜை பிடிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
    • மேலும் தனக்கு கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்தார்

    தேனி:

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சசிக்குமார் (வயது31). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வில்லை என்றும், இன்னும் திருமணமாகவில்லை என்றும் தனது வீட்டில் புலம்பி வந்துள்ளார்.

    இதனால் மனவேதனையடைந்த சசிக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • போதை தலைக்கேறிய நிலையில் வாலிபர் திடீரென மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்டார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கலையரங்கம் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. இந்த பாரில் தேனியை சேர்நத திப்புசுல்தான் என்பவர் மதுகுடிக்க வந்தார். நேரம் செல்ல செல்ல போதை தலைக்கேறிய நிலையில் அவர் திடீரென மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்டார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக கொடைக்கானல் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் கூக்கால் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வேலைபார்த்து வந்தது தெரியவந்தது.

    எதற்காக அவர் தற்கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காதலை பெண் ஏற்காததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    சீர்காழி திருநன்னியூரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு பிஸ்கெட் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை செய்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் தனது காதலை இளம்பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் வாலிபரின் காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் கம்பெனியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதகடிப்பட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு கோகு நகரை சேர்ந்தவர் அரிதாஸ். கொத்தனார். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு மதியழகன் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மதியழகன் இ.இ.இ. டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மதியழகனை அரிதாஸ் கொத்தனார் வேலைக்கு அழைத்து சென்றார்.

    மதியழகன் வேலைக்கு சென்றதில் இருந்தே படித்து விட்டு இந்த வேலைக்கு வந்து விட்டோம் என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் கமலா மாடு மேய்க்க சென்றார். வீட்டில் தனியாக இருந்த மதியழகன் மின் விசிறி கொக்கியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அரிதாஸ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி அருகே மாடு மேய்த்து கம்யூட்டர் படிக்க வைத்த மனைவி விவாகரத்து கேட்ட வேதனையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தர்மோனா பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 32). மாடு வளர்த்து வருகிறார். இவருக்கும் மந்தாடா பகுதியை சேர்ந்த ‌ஷர்மிளா (27) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

    இந்நிலையில் டேனியல் மாடு வளர்த்து பால் கறந்து மனைவியை கம்ப்பூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தார். கம்ப்யூட்டர் படிப்பு முடிந்ததும் நீங்கள் மாடு மேய்க்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்து விட்டேன். எப்படி பொருந்தும் என்று ‌ஷர்மிளா கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ‌ஷர்மிளா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இது குறித்தான வழக்கு விசாரணை கோத்தகிரி கோர்ட்டில் கடந்த மாதம் தொடங்கியது. இன்று (5-ந்தேதி) மீண்டும் விசாரிக்க இருந்தது.

    இந்நிலையில் மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்த டேனியல் நேற்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். வெகுநேரம் ஆன பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது டேனியல் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வீராம்பட்டினத்தில் முதல் மனைவி இறந்த நினைவில் 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் வாலிபர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    வீராம்பட்டினம் நாகூ ரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்ற கத்திரிமுத்து (வயது 30). ரவுடியான இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

    இதற்கிடையே இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து போனதால் 2-வதாக ஒரு பெண்ணை கார்த்தி திருமணம் செய்தார். அந்த பெண்ணும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கார்த்தி விரக்தியுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி படுகாயம் அடைந்தார்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×