search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers dead"

    • இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.

    இன்று காலை திருமங்கலம் அருகே ராயபாளையம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருமங்கலம் பகுதியில் நள்ளிரவில் நடந்த 2 வெவ்வேறு சாலை விபத்துகளில் மேலும் 2 பேர் பலியானார்கள்.

    • மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம், சந்திரபுரம், குருசிலாப்பட்டு அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் மேளம் அடிக்கும் தொழிலாளிகள் உள்ளனர்.

    இந்த பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு 10.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதியில் மேளம் அடிக்க புறப்பட்டனர். 10 பேரும் மேள வாத்தியங்களுடன் ஒரே ஆட்டோவில் சென்றனர்.

    கந்திலி சந்தைமேடு அருகே சென்ற போது ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியது.

    இதில் திருப்பத்தூர் கசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாரதி (வயது 20), சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18), சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    7 பேர் படுகாயமடைந்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டனர்.

    இதில் ஈசன் (20) அரவிந்தன் (20) என்ற தொழிலாளர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரவிந்தன் இன்று காலை இறந்தார்.

    மேலும் சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், குரிசிலா பட்டு அஜித், பெரியகரம் ஈஸ்வரன், அச்சமங்கலம் சஞ்சய், புத்தகரம் வேலு ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • படுகாயம் அடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டத்தில் உள்ள லிங்கபாலம் அடுத்த போகலுவ் கிராமத்தில் ஜமாயில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சீமை கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளன.

    இதனை வெட்ட காக்கிநாடா மாவட்டம், அன்னவரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்தனர்.

    அனைவரும் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இரவு வேலை செய்த களைப்பில் அனைவரும் காத்தோட்டமாக வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே கொண்டபாபு(35), ராஜூ (28), தர்மராஜு(25), வேணு (19) ஆகிய 4 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது.
    • உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது கவுல்பாளையம் கிராமம். பெரம்பலூர் நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள், தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகளுக்கு அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்காக ஆண், பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக கல் குவாரியில் பாறைகளை உடைத்து ஜல்லி கற்களாக மாற்றும் பணியில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே கவுல்பாளையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான பணிகள் தொடங்கின. இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இதில் சில பொக்லைன் எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    அப்போது வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அதன் அருகிலேயே தொழிலாளர்களும் பணியில் இருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.

    உடனடியாக அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த குவாரி ஊழியர்கள், தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மேலும் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதற்குள் இந்த கோர விபத்தில் கவுல்பாளையம் காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (வயது 30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.

    தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதே விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து குவாரிக்கு வந்தனர். அவர்கள் பலியான இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

    ×