search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman committed Suicide"

    • சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்தவர் அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார்.
    • கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டிைய சேர்ந்தவர் நாகராஜ் மனைவி செல்வி(48). இவர்கள் 2 பேரும் அதேபகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்து வந்தனர். செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

    சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த செல்வி அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி வ.உ.சி. நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி முத்துமணி (வயது 42). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் மனோஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் முருகேஸ்வரியை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
    • மனவேதனையில் இருந்தவர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனி 5-வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி முருகேஸ்வரி (வயது 38). இவர் சீப்பாலக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் சந்துரு (19) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறி விட்டார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பாண்டி, அவரது மனைவி ஆகியோர் முருகேஸ்வரியை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.

    இது குறித்து கோவையில் இருந்த தனது மகனிடம் முருகேஸ்வரி கூறி அழுதார். அவர் சமாதானப்படுத்திய நிலையில் மனவேதனை யில் இருந்த முருகேஸ்வரி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்துரு சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தாயை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலக்குறைவு காரணமாக மனமுடைந்த பெண் அரளிவிதையை அரைத்துகுடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகில் உள்ள முடக்குபட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி பாக்கியலெட்சுமி(30).

    இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய்குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இவருக்கு வெங்கடேஷ்(12), கவின்(9), கீர்த்தனா(3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி சாந்தா(53). கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சாந்தா சம்பவத்தன்று தான் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    ராஜஸ்தான்:

    ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் திருமணமான 45 வயது பெண், ஸ்ரீதுங்கர்கர் பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

    அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் பெண்ணின் கணவர் தான், காதலனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்தனர்.

    தனது காதலனை கணவர் கொலை செய்ததை அறிந்த அந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்த பெண்ணின் உடல் பிகானேரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்விற்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.



    ×