search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild fire"

    • தேளி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
    • சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ பரவி வருகிறது

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பற்றி எரியும் காடடுத்தீயால் வனப்பகுதி அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த மலைத்தொடரில் எரசக்கநாயக்கனூர் பெருமாள்மலை அமைந்துள்ளது. தவிர சிறிய அளவில் ஏராளமான மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. இந்த மலைக்குன்றுகளில் பெய்யும் மழைநீர் அங்குள்ள மஞ்சள் நதி நீர்த்தேக்கத்தில் தேங்கும்.

    45 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் சுற்றியுள்ள எரசக்கநாயக்கனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தவிர விவசாய நிலங்களிலுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

    இந்நிலையில் மஞ்சள் நதி அணைக்கு நீர் வரத்து கடந்த சில ஆண்டுகளாக குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் பெருமாள்மலை, ஹைவேவிஸ் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழைநீரின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் அணையில் நீர் தேங்கு பகுதிகள் தென்னந்தோப்புகளாக மாறிவிட்டன.

    இதற்கிடையே இந்த வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயால் வனப்பகுதியில் மழைப் பொழிவை ஏற்படுத்தும் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து, கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருகிறது.

    இதனால் இந்த நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், கால்நடைகளை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    எனவே மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வேண்டும்.

    மழைநீர் செல்லும் வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மஞ்சள் நதி நீர்த்தேக்க அணையில் மழைநீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே இக்கலூர் வனம் உள்ளது.

    இந்த பகுதி மலை உச்சியில் உள்ளது. அடர்ந்த மரங்களால் நிறைந்த இந்த பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

    தற்போது கோடை வெயில் தொடங்கியதையொட்டியும் மழை பொழிவு இல்லாததாலும் வனப்பகுதி காயத்தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் இக்கலூர் காட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் தீ மரங்களில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. மலை உச்சியில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க வனத்துறையினரால் முடியவில்லை.

    இன்று (திங்கட்கிழமை) ஆசனூர் இக்கலூர் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.

    மலை உச்சியில் தீ பிடித்து எரிவதால் மேலே செல்லவும் வழியில்லை.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, “வனப்பகுதியில் பிடிக்கும் தீயை தண்ணீர் ஊற்றியும் செடி, கொடி தழைகளை வெட்டி போட்டும் அணைப்போம். ஆனால் இக்கலூர் பகுதி மலை உச்சியில் இருப்பதால் எப்படி அங்கு போய் தீயை அணைப்பது? என்று தெரியவில்லை” என்று கூறினர்.

    போக முடியாத பகுதியில் தீ பிடித்தால் அந்த காட்டுத்தீ தானாகவே அணைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

    இக்கலூர் பகுதியில் பிடித்த காட்டுத்தீயால் பல பறவைகள், குரங்குகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் பலியாகி விட்டன. மேலும் பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதாகவும் வன ஊழியர்கள் கூறினர்.

    இதேபோல தாளவாடி வனப்பகுதி ஜீரேகள்ளி வனத்திலும் நேற்று இரவு தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த பகுதிக்கு வனஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ×