search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West"

    • சில நாடுகளுக்கு இந்தியா தன் கதவுகளை திறந்து வைத்துள்ளது
    • ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கியம்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர்.

    இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 'பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023' எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது இந்தியாவுடனான உறவுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஹினா கூறியதாவது:-

    இந்தியா மேற்கத்திய நாடுகளின் டார்லிங். ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்தியா தங்கள் கதவுகளை முழுவதும் திறந்து வைத்துள்ளது. ஆனால் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகள் சிலவற்றுக்கும், அங்கேயே வாழும் ஒரு சிலருக்கும் இறுக்கமான மன நிலையை காட்டி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஏசியன் போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளை காணும்போது, ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு காரணங்களால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளில் தற்போது ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவிற்கு நட்பு வளர்ந்து வருகிறது.

    இந்த ஈடுபாட்டை மறைமுகமாக கேலி செய்யும் விதமாக ஹினாவின் கருத்துக்கள் அமைந்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
    • இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.

    தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .

    ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.

    இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    ×