search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare"

    • அரியலூர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி தொடங்கப்பட்டு 1,51,038 எண்ணிக்கையிலான மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகின்றனர்.

    இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 51,893 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 53,726 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 22,484 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 22,935 மகளிரும் பயன்பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வாலாஜாநகரம் ஊராட்சி, அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 6,217 மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 1,830 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 2,279 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 1,059 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 1,049 மகளிரும் பயன்பெற உள்ளனர்.

    இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குறுகிய நேரத்தில் விடுக்க நடவடிக்கை
    • நீலகிரி எம்.பி ராசா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டார் அப்போது நடுஹட்டி பகுதியில் பஸ்வசதி, பள்ளியில் ஆங்கில வழி கல்வி, நடமாடும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறுகிய காலத்தில் நிறைவேற்றி தந்து உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நீலகிரி எம்.பி ராசா கலந்துகொண்டு ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பொதுகுழு உறுப்பினர் கே.எம்.ராஜிசெல்வம், காளிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
    • நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நகரத்துடன் நல வாழ்வு மையத்தை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துநிஷா சலீம், நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்துக்கு, கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பெற்ற 434 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக அவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,900 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,552 மதிப்பில் பித்தளை சலவைப் பெட்டி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.24,904 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து 2022-2023-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய தேர்வில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று கேடயம் பெற்ற மாணவி நித்யா மற்றும் மாணவர் சந்தோஷ் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், அவர், ஆட்சியரக அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட கூவத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, தனித் துணை ஆட்சியர் இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தேசிய தகவலியல் மையத்தின் மாவட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் 2 வது வார்டு பகுதியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான செ.ராஜசேகரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவியாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் பல்லடம் நகர திமுக., செயலாளர் ராஜேந்திர குமார்,வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் குமார்,மற்றும் லாரி முருகசாமி, பரமசிவம், சிலம்பரசன், மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை

    மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் புதிய பாதை-360, வெல்பேர் கிளப் இணைந்து "கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் உதவிகள் மூலம் உணர்வுகளை பெறுவோம் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது, இந்நிகழ்ச்சிக்கு தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத் தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசி னார். முன்னதாக புதிய பாதை வாசகன் வர வேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக தேசிய மனிதவள உதவும் கரங்கள் நிறுவனர் டாக்டர் முகமது பக்ஸ், தென் மாவட்ட திரைப்பட கலை ஞர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் எம்.மணி கண்டன், ஆலோசகர் செல்வவேல் பாண்டி, நடிகர் சங்க நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, பிரகாஷ் , மாநகர் காவல் உதவி ஆணையர் (கோவில் சரகம்) பா.காமாட்சி, கோல்டன் சினிமா நிர்வாக இயக்குனர் டி.ஆர்.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் புதிய பாதை சிமியோன் நன்றி கூறினார்.

    • மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
    • விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.

    தாராபுரம்:

    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில் இதுவரை, மாநில அரசு நலத்திட்டங்களுக்கும், சான்றிதழ்கள் பெறவும் மட்டுமே விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    தற்போது நாடு முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய அரசின் பொது சேவை மையத்தின் லாகின் அனுமதி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இ-சேவை மையங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.இது மட்டுமின்றி, தொடக்க கூட்டுறவு வங்கிகள், சமையல் கியாஸ் வினியோக உரிமை, பெட்ரோல், டீசல் வினியோக உரிமை உட்பட, 25 விதமான வணிக செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

    வரும் நாட்களில் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சேவை தொடங்கும் என்று பொது சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.
    • பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முருகன் நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.

    கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 4.85 கோடி மதிப்பிலான 9 சாலை பணிகளை துவக்கி வைத்தார். பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ரூ.31.21 லட்சம் மதிப்பில் 5 சாலை பணிகளை துவக்கினார். ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நில மட்ட நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

    பல்லடம் வட்டார பகுதிகளில் குடிநீர் தேவைக்காக பில்லூர் அணையிலிருந்து சூலூர் பேரூராட்சி வழியாக பல்லடம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும்திட்டத்தினை முதலமைச்சர் முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து போது கொண்டு வந்தார்கள். தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பில்லூர் 3-ம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணி நடைபெற்று வருவதால், மீண்டும் இத்திட்டத்தினை பல்லடம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும். இதன் மூலம் பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம்,பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிர மணியம்,ஊராட்சி மன்ற தலைவர்கள் புனிதா சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
    • தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, அஸ்காட் திட்டத்தின்கீழ் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் - 9, கால்நடை மருந்தகங்கள் - 149, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் - 6, கால்நடை மருத்துவமனைகள் - 7, கால்நடை பன்முக மருத்துவமனை- 1, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு-1 ஆகியவை உள்ளன.

    விவசாயிகளால் 6 லட்சத்து 11 ஆயிரத்து 161 பசுக்கள், 46 ஆயிரத்து 420 எருமைகள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 733- செம்மறி ஆடுகள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 541 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நாடு முழுவதும் கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நேற்று என்.ஏ.என்.டி.ஐ. (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு அமைப்பின் சுகம் ஆகியவை இந்த இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படை த்தன்மை யுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என அவர் கூறினார்.

    இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வழங்கினார்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்ட மன்ற பேரவையின் உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குழு தலைவர் வேல்முருகன் பேசியதா வது:-ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணியை முழுமையாக முடிப்பது என்பது கஷ்டமாகும். அதனால் கூடுதல் செலவினம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.

    அரசின் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 35 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற் கான முகாம் வாழப்பாடி அருகே உள்ள அத்த னுார்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடை பெற்றது. முகாமிற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.

    முகாமை முன்னிட்டு துணை கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயரதி காரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்திடவும், அந்தந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தர விட்டார். இதனையடுத்து மக்களை சந்தித்து, குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயார் செய்த குழுவினர்,

    அந்தந்த பகுதிக்கு தேவை யான அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங் களை செய்து கொடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மென அரசுத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் மக்கள் நலத்

    திட்டங்கள் குறித்த குடில் களை பார்வையிட்டார்.

    முன்னதாக, அத்த னுார்பட்டி கூட்டுறவு கடன் சங்கம், பொது வின்யோக் ககடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வற்றை ஆய்வு மேற்கொண்ட தோடு, அத்தனுார்பட்டி புதுார் கிராம மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட்டம், தோட்டக் கலைத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முகாமில், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதன், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டு றவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ரவிக்குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணி கள்) ஜெமினி, வாழப்பாடி தாசில்தார் கோபால கிருஷ்ணன், அட்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி, அத்தனூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    பேருந்து நிறுத்தம் கேட்டு மனு

    தொடர்ந்து கலெக்டர் கார்மேகத்தை பா.ம.க. பிரமுகர் சத்தியராஜ், மருத்துவர் பிரேம்குமார் உள்பட பொதுமக்கள், மாணவ–மாணவியர் சந்தித்து புளிந்தோப்பு பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதி காரிகளுடன் கலந்தாய்வு செய்து, சாத்தியமும், தேவையும் இருப்பின் பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    தென்திருப்பேரை:

    வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வெள்ளூர் கஸ்பா, வரதராஜபுரம், வாழவல்லான், கொட்டாரகுறிச்சி, பழையகாயல் ஆகிய கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தொடக்க விழா முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து சாகுபடி நிலமாக மாற்றுதல் மற்றும் அதற்கான நீர்வள ஆதாரங்களை அமைத்தல் போன்ற திட்டங்களை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறைகள் இணைந்து இத்திட்டத்தில் அனைத்து பண்ணை குடும்பங்களும் பயன் பெறும் நோக்கில் தொடங்கப்பட்டது. 

    இத்திட்டத்தின்படி தென்னை கன்றுகள், கைத்தெளிப்பான், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, வீட்டு காய்கறி விதை, மண்புழு உரம் போன்ற இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வனஜா தேவி 5 பஞ்சாயத்துகளிலும் நிகழ்ச்சி நடைபெற தேவையான ஏற்பாடுகள் மற்றும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். 

    நிகழ்ச்சியில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.
    ×