search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weavers"

    • காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
    • விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    விவசாயத்திற்கு அடுத்து அதிகப்படியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடியதாக விசைத்தறி ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 15 மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடை பெற்றாலும் அதிக அளவில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதியிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ளது. நூல் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து போனது. இதனால் விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசைத்தறி தொழிலுக்கு தேவையான பஞ்சு நூல் விலை உயர்வுக்கு தீர்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல், விசைத்தறிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்கனவே வழங்கி உள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சார்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. இதனால் ஏமாற்ற மடைந்துள்ளோம்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும்தான் பல்லடம் செயல்வீரர் கூட்டத்தில், விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக பேசியுள்ளார். அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்று வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சக மும், தமிழ்நாடு அரசு கைத் தறி துறையும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கண் காட்சியை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    கைத்தறி கண்காட்சி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதன் நோக்கம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே ஆகும். இந்த கண்காட்சி யில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

    இதில் பல்வேறு ஊர்க ளில் சிறப்பு வாய்ந்த கைத்தறி ரகங்கள் கிடைக் கும். மேலும் தமிழக அரசு வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு ஆடை ஒன்று 30சதவீதமும், பட்டு ரகங்களுக்கு ரூ. 300 வரை தள்ளுபடியும் வழங்கப்படு கிறது. சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படு கின்றது. மேலும் இந்த சிறப்பு கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப் படுகிறது

    கடந்த ஆண்டு நடத்தப் பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. பண்டிகைகளுக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் ரகுநாத், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரபாகரன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேஷய்யன், கோதண்ட ராமன், கைத்தறித்துறை ஆய்வு அலுவலர் ரத்தின பாண்டி, கைத்தறி அலுவலர் லட்சுமி வெங்கட சுப்பிர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இதன் மூலம் 741 நெசவாளர்கள் வரை பயன டைந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ராஜபாளை யத்தில் உள்ள தெற்கு வைத்தியநாதபுரம் தெரு சாலியர் சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, ராஜபாளையம் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மற்றும் மணிகண்டராஜா, சுகாதாரத்துறை சார்பில் ஜமீன் கொல்லங் கொண்டான், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து ஆகியோர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த மருத்துவ முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை அலுவ லர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இ.சி.ஜி.இ. எக்ஸ்ரே, ரத்த அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 741 நெசவா ளர்கள் வரை பயன டைந்தனர்.

    மேலும் இம்முகாமில் நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடும் விழா, கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், முத்ரா கடன் மேளா, கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம், தொழில்முனைவோர் வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகிய வையும் நடைபெற்றது.

    • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டுகள் மிகவும் பிரபலமானவை. இதனை பயன்படுத்தி சிலர் காஞ்சிபுரம் பட்டு என்று போலியான பட்டுக்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சிலமா தங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் போலிபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை பரிசோதனைக்காக அனுப்பி இருந்தனர். மேலும் விசைத்தறிகளில் தயார் செய்யப்பட்ட சேலைகளை கைத்தறி சேலை எனக் கூறி விற்பனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் பட்டுச்சேலை பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை என்று இதனை உடனடியாக வெளியிட வேண்டும் கைத்தறி சேலை நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து கைத்தறித்துறை இயக்குனரிடம் கேட்டபோது பட்டுச் சேலை பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் வெளியிடப்படும் என்றார்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • சுமார் 823 நெசவாளர்கள் வரை பயனடைந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி துறையின் கீழ் 52 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இச்சங்கங்கள் மூலமாக 6000 நெசவாளர்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இச்சங்கங்களில் பருத்தி ரக சேலைகள், செயற்கைப் பட்டு சேலைகள், லுங்கிகள், வேட்டிகள், அரசின் விலையில்லா சேலை, விலையில்லா காடா துணி இரகங்கள் நெசவு செய்யப்பட்டு வருகிறது.

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சுந்தர பாண்டி யத்தில் உள்ள சாலியர் சமுதாய திருமண மண்ட பத்தில் நெசவாளர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதனை கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, சுந்தர பாண்டியம் பேரூராட்சி சேர்மன் ராஜம்மாள், வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெய ராமன், ஊர் தலைவர் சடையாண்டி, சுந்தர பாண்டியம் தி.மு.க. நகர செயலளர் காளிமுத்து, சுந்தர பாண்டியம் அ.தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.

    இம்மருத்துவ முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை அலு வலர்கள். செவிலியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இ.சி.ஜி. எக்ஸ்ரே, ரத்தஅழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 823 நெசவாளர்கள் வரை பயனடைந்தனர்.

    மேலும் இம்முகாமில் கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம். முத்ரா கடன் மேளா, கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம், தொழில்முனைவோர் வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியனவும் நடைபெற்றது.

    • தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்டது.
    • நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறிதுறை சார்பில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறிநெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோர காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்ப த்துடனும், தனித்துவத்துடனும் உற்பத்தி செய்யப்படு கின்றது.

    மேற்படி கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ரகங்களை பெருமளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடவும் வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறையின்சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 4 நெசவாளர்களுக்கும் , தலா ரூ.50,000 வீதம் 6 நெசவாளர்களுக்கு என மொத்தம் 10 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காசோலையையும், 15 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளர் கூட்டுறவு சங்க 45 நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

    முன்னதாக நெசவாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பொன்கோவில் நகரில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    • தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன், மாவட்ட அமைப்பாளராக எல்கில் ரவி, துணை அமைப்பாளர்களாக தியாகராஜன், பௌ்ளன், பிரபுதாஸ், மகேந்திரன், ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்ைகை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன் தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, ராஜா, அன்வர் அப்துல்லா, விவேகானந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பத்மநாபன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன், மன்சூர், அப்துல் காதர், பந்தலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் ஞானசேகர், சுபாசினி, மகளிர் அணி நிர்வாகிகள் மைமூனா, ஜெயந்தி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    • அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    அவினாசி:

    அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-

    சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நெசவுத் தொழில் மூலப்பொருட்களான பட்டு நூல் மற்றும் ஜரிகை போன்றவை விலை நிலையாக இல்லாமல் அதிக ஏற்றம் இறக்கமாக இருக்கிறது.
    • கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தில் கைத்தறி நெசவாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க கோரி விநாயகர் கோயில் முன்பு ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது;- தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பாரம்பரிய தொழிலாக கைத்தறி நெசவுவு தொழில் உள்ளது. இந்த தொழிலை நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது நெசவுத் தொழில் மூலப்பொருட்களான பாட்டு நூல் மற்றும் ஜரிகை போன்றவை விலை நிலையாக இல்லாமல் அதிக ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும் விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது. இதனால் கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மிக வறுமை நிலையில் இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இருந்து அவர்களை மீட்க வலியறுத்தி ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நெசவாளர்களுக்கு என தாலுகா வாரியாக தனி வங்கி ஏற்படுத்த வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறியீடுடன் 11 விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது.பார்டர் டிசைன் உடன் கூடிய பருத்திச் சேலை, பட்டுச்சேலை, கோராப்பட்டு வேட்டி, துண்டு, லுங்கி, ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது. 2007ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை நடைமுறையில் இருந்து வந்த கைத்தறி நெசவாளர் நலன் காப்பீடு திட்டம், மருத்துவ அட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்றனர். இதில் குரல்குட்டை வாளவாடி, இராமே கவுண்டன்புதூர் , மலையாண்டிபட்டினம், பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
    • இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    திருப்பூர் :

    சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொட ரில் கைத்தறி, துணிநூல் துறை மானிய கோரிக்கை யில் அமைச்சர் காந்தி, புதிய திட்டங்களை அறி வித்துள்ளார்.

    இதுகுறித்து கோவை, திருப்பூர், மாவட்டநெச வாளர் கூட்டுறவு சங்கங்க ளின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் கூறியதாவது:- இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம், 140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். இதனால், இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அது போல் கூட்டுறவு சங்கங்க ளில் உள்ள கைத்தறிநெச வாளர்களுக்கு 10 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதும் வர வேற்க வேண்டிய அம்சம்.பட்டின் விலை அதிகமாக உள்ளது. கூட்டு றவு சங்கம் சார்பில், பட்டுச்சேலை நெய்வதற்கு பட்டு, சரிகை,நூல் ஆகியவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை.மிக குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, வாரத்திற்கு இரண்டு சேலைதான் நெய்ய முடியும். இது வாழ்வாதா ரத்துக்கு போது மானதல்ல.

    வாரத்திற்கு 4 முதல் 5 சேலைகள் நெய்யும் அளவிற்கு மூலப்பொரு ட்கள் வழங்க வேண்டும். கைத்தறி ரகங்க ளை சந்தை படுத்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அது பெயரளவிற்கு இல்லாமல் முறையாக நடத்தினால் நன்றாக இருக்கும்.நெச வாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை மத்திய அரசு சார்பில், வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், மருத்துவமனை சென்றாலும் சிகிச்சை பெறமுடியவில்லை.

    எனவே மாநில அரசு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பின்னர் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கண்காட்சிகள் மூலம் மக்களிடம் கைத்தறி ஆடைகளுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. அதே போல் தற்பொழுது கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இக்கண்காட்சி நடைபெறுகின்றன.

    இக்கண்காட்சி அதிகளவு பொதுமக்கள் அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் வருகை தந்து கடந்த ஆண்டைவிட அதிகளவு விற்பனை பெருகின்ற வகையில் கைத்தறி ஆடைகள் வாங்கி ' எனது கைத்தறி எனது பெருமை " என்ற நிலையை உருவாக்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கைத்தறித் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், மேகனா, கைத்தறி துறை ஆய்வாளர் ரத்தின பாண்டியன், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் அய்யான், சங்கீதா மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு-தீபாவளி போனஸ் வழங்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.
    • அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை டவுன், மதுரை புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர். பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகங்களான வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் (மாஸ்டர் வீவர்) பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர். தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக அவர்கள் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    மாற்று வேலை வாய்ப்பின்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 30 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் 20 சதவீமும் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து ஐக்கிய குழு நிர்வாகிகளான ஐ.என்.டி.யு.சி. தலைவர் கோபிநாத், பி.எம்.எஸ்.செயலாளர் சுதர்சன், ஜனதாதளம் பொருளாளர் ரவீந்திரன், ஏ.டி.பி. இணைச் செயலாளர் பத்மநாபன், சி.ஐ.டி.யு. ஈஸ்வரன்,

    எல்.பி.எப்.துணைத் தலைவர் ஜெகநாதன், துணைச் செயலாளர் தாமோதரன் ஆகியோருக்கும், நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளான மோதிலால், ராமபிரமம், கோவர்த்தனன், சுந்தர கோபால், சுப்பிரமணியன், சுரேஷ்பாபு, சிவநாத், பரமேசுவரன். சரவணன் ஆகியோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகத்தீர்வு ஏற்பட்டது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு அடுத்த ஆண்டு (2023) தீபாவளி வரை அமலில் இருக்கும் என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

    ×