search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wages"

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது.
    • இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலிதொழிலாளி.

    விபத்தில் பலி

    இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையை கடந்த போது நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது. இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் ஓட்டம்

    விபத்து ஏற்பட்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்து டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.

    • விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம்
    • கூட்டத்தில் கிராம சங்க நிர்வாகிகள் ஏம்பலம் தொகுதி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் கரிக்கலாம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஏகாம்பரம் தலைமை வகித்தார். ஜி.சுகுணா, எம்.சுகுணா முன்னிலை வகித்தனர்.

    வேலை அறிக்கையை நாகராஜ் சமர்பித்தார். சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராம மூர்த்தி, பொதுச்செயலாளர் விஜயபாலன், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தொகுதி செயலாளர் பெருமாள், மாநில தலைவர் ராஜா, பாகூர் தொகுதி நாராயணன் ஆகியோர் உரையாற்றினர்.

    கூட்டத்தில் கிராம சங்க நிர்வாகிகள் ஏம்பலம் தொகுதி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் வழங்கி, நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்தி நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். பணியில் இறக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும். நத்தமேடு கிராமத்துக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். ஏம்பலத்தில் நவீன திருமண மண்டபம் கட்ட வேண்டும். தார்சாலை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    • 100 நாள் வேலையின்போது இறக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை விவசாய தொழிலாளர் சங்க பேரவைக்கூட்டம் பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்தது.

    மகேஷ்வரி தலைமை வகித்தார். சுதா, ரெஜினா முன்னிலை வகித்தனர். வேலை அறிக்கையை பழனிவேல் தாக்கல் செய்தார். விவசாய தொழிலாளர் சங்க தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில துணை செயலளார் சேதுசெல்வம், பொதுச்செயலாளர் விஜயபாலன், பாகூர் தொகுதி நாராயணன், தொகுதிக்குழு உறுப்பினர் கங்காதரன், அகில இந்திய தலித் உரிமை இயக்கம் ஓம்பிரகாஷ் மற்றும் கிராம சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ஊரக வேலை திட்டத்தை ஆண்டு முழுவதும் வழங்கி நாட்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தி உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும். 100 நாள் வேலையின்போது இறக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். பனையடிகுப்பம் கிராமத்துக்கு இலவச மனைப்பட்டா என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சந்திரகாந்தா வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக தூய்மைப் பணியா ளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.

    தமிழ் மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழ்நாடு அரசுப்பணிகளில் 100 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்
    • நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.

    அவிநாசி :

    அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் குறைவான ஊதியம் வழங்குவதுடன், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    இது குறித்து தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:- தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக தெக்கலூா் ஊராட்சியில் வழங்கப்பட்டு வருகிறது.அதிலும் மாத ஊதியத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்து வழங்குகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    இது குறித்து அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமாரிடம் கேட்டபோது, தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களில் விடுப்பு எடுத்தவா்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறேன். தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
    • லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ 5.50 காசு வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்க்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று டாஸ்மாக் குடோன் முன்பு சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சுமை பணி செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். மாநில குழு உறுப்பினர் மோகன் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். மாவட்ட சுமை பணி தலைவர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 36 டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவே இல்லை. எனவே உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ 5.50 காசு வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாற்றி ஒரு பெட்டிக்கு ரூ.8 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். குடோன் சுமை பணி தலைவர் முருகன் நன்றி கூறினார்.

    • 100 நாள் வேலை செய்யும் பொதுமக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரிவர வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை
    • திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் தாலுக்கா வீரபாண்டி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் பொது மக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரி வர வங்கி கணக்கில் வரவு வைக்காததை கண்டித்தும், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 20 கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டித்தும் 300-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் மற்றும் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுதன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்தை கடுமையாக குற்றம் சாட்டியதுடன், பொது மக்களின் வங்கி கணக்குகளில் ஆதார் அட்டை முறையாக இணைக்கப் படவில்லை எனக் கூறும் தனியார் வங்கியின் அலட்சிய போக்கை கடுமையாக கண்டித்து பேசினார்கள். மேலும் வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனியார் வங்கியின் சேவை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளையை வீர பாண்டி கிராமத்தில் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அதிகாரிகள் குழுவினர் வருகின்ற 24-ந்தேதி முதல் வீரபாண்டி புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம் கல்லந்தல் மற்றும் தண்டரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கூலித் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கும் பொழுது கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டிக்க வேண்டும் என்றும் தனியார் வங்கி நிர்வாகத்திடம் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஷஇந்த சாலை மறியல் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தால் வீரபாண்டி கிராமத்தில் 2 மணி நேரம் பதட்டமான நிலை காணப்பட்டது. தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
    • காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல் காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயசூரியன், மனைவியை தேடினார். எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.

    • சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). கூலி தொழிலாளி.
    • சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஏகாம்பரம் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சாரம் கூட்ரோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஏகாம்பரம் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏகாம்பரம் உயிரிழந்தார். விபத்து குறித்து ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தள்ளுபடி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பரதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

    அப்போது எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும், தள்ளுபடி தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும், நகை கடன் ஏலத்தில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களை பழி வாங்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கோபிநாதன், இணை செயலாளர்கள் அரபுபுனிசாபேகம், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ. 600-ஆக உயர்த்த வேண்டும்.
    • திருவாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் பேராட்டம் நடைபெற உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ. 600-ஆக உயர்த்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாளை (7-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் பேராட்டம் நடைபெற உள்ளது.

    நீடாமங்கலத்தில் நடைபெறும் போராட்டத்தில் செல்வராசு எம்.பி.யும், திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் போராட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ.வும் பங்கேற்கின்றனர்.

    மற்ற மையங்களில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.

    இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×