என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "WIvsNZ"
- நியூசிலாந்து அணியில் நான்கு வீரர்கள் அரை சதம் அடித்து அசத்தினர்
- முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2-வது போட்டி யில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 51 ரன் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மேயர்ஸ் சதம் அடித்தார்.
அவர் 110 பந்தில் 105 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் கேப்டன் பூரன் அதிரடியாக விளையாட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பூரன் 55 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 9 சிக்சர்கள் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன் எடுத்தது.
அதன் பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் பின் ஆலன் 3 ரன்னில் வெளியேறினார். மார்டன் குப்தில் 57 ரன்னிலும், டேவன் கன்வே 56 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன் பின் டாம் லாதம் (69 ரன்), மிட்செல் (63 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இருவரும் அவுட் ஆன பிறகு ஜேம்ஸ் நீசம் 11 பந்தில் 34 ரன் எடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார். நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2-வது போட்டி யில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.
- நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது.
- 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கிங்ஸ்டன்:
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 146 ரன் இலக்காக இருந்தது.
பிலிப்ஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 41 ரன்னும் ( 4 பவுண்டரி , 2 சிக்சர் ), கேப்டன் வில்லியம்சன் 24 ரன்னும் ( 2 பவுண்டரி ) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட்டும் , அகீல் ஹூசைன் 2 விக்கெட்டும் , டொமினிக் டிரேக்ஸ், ஹைடன் வால்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார் கள்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புரூக்ஸ் 56 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), பிரண்டன் கிங் 35 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி , 3 சிக்சர்) போவெல் 15 பந்தில் 27 (2 பவுண்டரி , 2 சிக்சர் எடுத்தனர். சவுத்தி, சோதிக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந்தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்