search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Assistance"

    • பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினாா்.
    • ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது 159 பயனாளிகளுக்கு ரூ. 97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதன்ஒருபகுதியாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சார்பில் 9 பேருக்கு ரூ.44.58 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 2 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.8 ஆயிரம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை பத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 9 பேருக்கு ஓட்டுநா் உரிமம், பிற்பட்டோா்-சிறுபான்மை நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 26,340 மதிப்பில் தையல் எந்திரங்கள், ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    மனுநீதிநாள் முகாமில் தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி செந்தில்குமாா், சுகாதாரபணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கீா்த்தனா, தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ்பாபு, ஸ்ரீமதுரை ஊராட்சித்தலைவா் சுனில், மாவட்ட சமூகநல அலுவலா் பிரவீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஷோபனா, கூடலூா் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது
    • 26 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் தெய்வாங்கப் பெருமாள் திருக்கோயில் திடலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எம்.பி பழனிமாணிக்கம் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 34 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் உதவி தொகையும் வேளாண்மை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செங்கமங்கலம் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 15 லட்சம், தோட்டக்கலை துறை மூலம் மானியம் பெறும் மூன்று பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரத்து 625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வருவாய் துறை சார்பில் 26 பேருக்கு பட்டா மாறுதல் ( உட்பிரிவு) இம்முகாமில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முன்னதாக தோட்டக்கலை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர் அலி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உ.துரை மாணிக்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜரத்தினம், செங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்வம், காலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் ரா.தெய்வானை நன்றி கூறினார்.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகர திமுக சார்பில் முத்து விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஜீவரேகா விஜயராஜ், குட்டி புகழேந்தி, நகரமன்ற உறுப்பினர் ராணி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ. ஆறுமுகம், இரா.கார்த்திகேயன், சர்தார், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிரிக்கெட் ரவி, சமயராஜ், ராயல் தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 2,394 பயனாளிகளுக்கு ரூ.20.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
    • கிராமங்களை பொறுத்தவரை வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பாக இருந்து வருகின்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் ராஜகண்ணப் பன் கொடி ஏற்றி வைத்து சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் கலைஞர். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் தான் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டு தற்பொழுது சிறந்து விளங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி பெண்களுக்கு சொத்து உரிமை பெற்று தந்தவர் கலைஞர். தற்பொழுது பெண்களுக்கு சம உரிமை தந்து சாதனை படைத்தவர் முதல்-அமைச்சர் தான்.

    மேலும் பெண்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான அரசு நலத்திட்ட உதவிகள், மாதாந்திர உதவித் தொகை, கட்டணமில்லா பஸ் வசதி என எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். கிராமங்களை பொறுத்தவரை வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பாக இருந்து வருகின்றது. இத்தகைய துறையே மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக இத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் 184 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான விவசாய கடன், தொழில் கடன், நகை கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்ட உதவிகள் வழங்கி வருவதுடன், மாவட்டத்தில் 745 நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு தேவை யான உணவு பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டுறவு வார விழா தொடர்பான உறுதிமொழி அமைச்சர் ராஜகண்ணப்பன் தலை மையில் மேற்கொள்ளப் பட்டது. அதனை தொடர்ந்து 2,394 பயனாளிகளுக்கு ரூ.20.70 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மனோ கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • பெரும்பாலான மனுக்கள் விவசாய கடன் தள்ளுபடிக்காக கொடுக்கப்பட்டிருந்தது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரூ.37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    40 அரசு துறைகள் இருந்தும் கூட்டுறவு துறையில் மட்டும் தான் கூட்டுறவு வாரம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு துறை வளர்ச்சி பெற நாணயம் என்ற மையப்புள்ளி தேவை.

    திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கூட்டுறவுத் துறை வளர்ச்சி பெறுகிறது. இந்த துறையை அண்ணா வானவில்லோடு ஒப்பிடுகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மேகம்போல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 கூட்டுறவு வங்கிகள் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து ஆயிரத்து 546 கோடி ரூபாய் வைப்பு தொகையாக பெறப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் விவசாய கடன் தள்ளுபடிக்காக கொடுக்கப்பட்டிருந்தது.

    திராவிட மாடல் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் 125 கோடி ரூபாய் நகை கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 34 ஆயிரத்து 127 பேர் பயன்பெற்றனர்.

    திமுக ஆட்சியில் தான் ஜவ்வாது மலைக்கு சாலைகள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றுகள் வழங்கப்பட்டன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லோரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கா.ஜெயம், சார்பதிவாளர் சுரேஷ்குமார், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் 2-வது கட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேட்டவலம் சாலையில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் குட்டி புகழேந்தி, சீனுவாசன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் ஹேமா சசிகுமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பிற்கு வரும் போதெல்லாம் திருவண்ணா மலை மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மாவட்டத்திற்கு பல வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தன.

    குறிப்பாகச் சொல்லப்போனால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, போக்குவரத்து மண்டலம் ஆகியவை அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி.

    தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொது மக்களுக்கு நன்மை விளைவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கான புதுமைப்பெண்கள் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தொமுச மாநில செயலாளர் சௌந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், வக்கீல் முரளி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சமயராஜ், ராயல் தியாகு, வட்ட செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட பிரதிநிதி வெங்கட் நன்றி கூறினார்.

    • ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது

     உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம், ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு போர்வை மற்றும் தலையணை , இனிப்புகள் , அன்னதானம் வழங்கப்பட்டது.

    அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் ,மாநிலத் தலைவர் தாமோதரன் ,மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், உடுமலை நகரத்தலைவர் முருகவேல் ,உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் ஊராட்சியில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கீதா பாரி (ஆலங்காயம்), சுரேஷ் குமார் (மாதனூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி சப் - கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.

    முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித் தொகை, களை எடுக்கும் கருவி, உளுந்து விதை, ஊட்டசத்து பெட்டகம், வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 578 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா (இளையநகரம், காந்திமதி (மேல்குப்பம்), ஒன்றிய குழு உறுப்பினர் சம்பங்கி, கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.

    • அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிஅருகே அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் வழங்கினார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது,

    அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

    பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் ஆரம்ப கல்வி, உயர்கல்வி, மேல்நிலை கல்வி பயில்வதில் உறுதியாக இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் ஆரம்ப கல்வி முறையினை கற்பதற்கும், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதற்காகவும் அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும்.

    குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறுவயதில் கர்ப்பம் அடைதல், குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் ஆகியவற்றை தவிர்க்க குறிப்பிட்டுள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும்.

    பல்வேறு தொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வங்கிகளின் மூலம் பெற்றவர்கள் அதனை முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. முடிந்தவரை பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

    • தமிழ்நாடு பால் விற்பனைத்துறை ஊழியர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
    • மாற்றுத்திறனாளிகள் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம், வீல் சேர், புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் தமிழ்நாடு பால் விற்பனைத்துறை ஊழியர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு பால் முகவர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, ஆவாரம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம், வீல் சேர், புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினார். விழாவில் சங்க மாநில பொருளாளர் நாசர், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×