search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voter ID"

    • நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.
    • பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    வாக்காளர் அடையாள அட்டை...

    இது சாத்தியமா...

    அதுவும் அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது என்பது எப்படி முடியும் என்று நினைத்திருந்த ஒரு காலம் உண்டு.

    ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1993-ம் ஆண்டு, நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இது உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்தது.

    இமாலய சாதனை

    இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிவிட்டது. அதிலும் 94 கோடியே 50 லட்சத்து, 25 ஆயிரத்து 694 கோடி பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக உள்ளனர். உலக அளவில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியாதான்.

    இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், அனைவருக்கும் வாக்களிக்க அடையாள அட்டை வழங்கி இருப்பது இமாலய சாதனைதான்.

    நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை உருவான வரலாறு பற்றி பார்ப்போம்.

    சுகுமார் சென்

    நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவருக்கும், இவர் தான் வாக்காளர் என்று அறிவதற்கும், வாக்குப்பதிவில் முறைகேட்டை தவிர்ப்பதற்கும் ஒரு அடையாள ஆவணம் வேண்டும் என்று முடிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 1957-ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தது.

    இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்தான், வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்ற விதையை போட்டவர்.

    அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அதாவது 1958-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அறிமுகம் செய்தவர் அப்போதைய சட்ட மந்திரியாக இருந்த அசோக் குமார் சென். இவர், சுகுமார் சென்னின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் 1958-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையாளராக கே.வி.கே.சுந்தரம் பதவி ஏற்றார். அடுத்த சில நாட்களில் அடையாள அட்டை வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியது.

    கொல்கத்தா இடைத்தேர்தலில் அறிமுகம்

    வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டபோதும், ஏனோ தாமதாமாகிக் கொண்டே சென்றது.

    இருப்பினும் 1960-ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா தென்மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக கொண்டு வந்தது.

    பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக பெண்கள் தங்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தனர். இடைத்தேர்தல் நடைபெற்ற அந்த ஒரு தொகுதிக்கே ரூ.25 லட்சம் வரை தேவைப்பட்டது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும்.

    தேர்தல் நடத்தும் செலவைவிட, வாக்காளர் அடையாள அட்டைக்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    உயிர் பெற்ற திட்டம்

    19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.

    ஆம்!... 1979-ம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இது ஓரளவு சாத்தியமானதால், அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியே 1993-ம் ஆண்டு அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாத்தியமானது.

    டி.என்.சேஷன்

    இதை செய்து காட்டியவர், அப்போது தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன். அவரது காலத்தில்தான், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

    பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை என்பது கறுப்பு நிறத்தில் இருந்தது. அதன் முதல் பக்கத்தில் வாக்காளரின் புகைப்படம், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    பின்பக்கத்தில் வீட்டு முகவரி, தொகுதி, பாகம் (வாக்குச்சாவடி எண்) ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்ப காலங்களில், வாக்காளர் அடையாள அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அந்த அட்டையில் இடம்பெறும்போது தெளிவற்றதாகவும், கேலிக்குரியதாகவும் இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.

    மின்னணு வாக்காளர் அட்டை

    பின்னர் அந்த தவறுகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலும் புகைப்படத்துடன் வந்தது. தற்போது அழகிய வண்ணப்புகைப்படத்துடன், பிளாஸ்டிக் அட்டையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இந்த வளர்ச்சியின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்துவிட்டது.

    மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பது, வாக்காளர் அடையாள அட்டையின் திருத்தமுடியாத, பாதுகாப்பான 'பி.டி.எப்' பதிப்பாகும். மேலும் இதில் வரிசை எண், பகுதி எண் மற்றும் பிற புள்ளிவிவரங்களுடன், பாதுகாப்பான 'கியூ-ஆர்' குறியீடும் உள்ளது.

    இதனை செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைக்கலாம்.


    வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?

    இந்தியாவில் பிறந்த 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    18 வயது நிறைவடைந்தவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 6-ஐ நிரப்பி, அதனை உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

    இது தவிர தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடத்தும் சிறப்பு முகாம்களில், வாக்காளர் அட்டையில் உள்ள முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்யலாம்.

    மனநோயாளிகள், கடன் வாங்கி திவால் ஆனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது.

    • வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள்.
    • வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

    இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 2023 வாக்காளர் பட்டியல் இன்று (31.05.2023) வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,23,064 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. 51,295 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,01,18,904; பெண் வாக்காளர்கள் 3,11,09,813, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், 31.05.2023 அன்று வெளியிடப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

    இத்தொகுதியில் மொத்தம் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,26,253; பெண்கள் 3,24,713; மூன்றாம் பாலினத்தவர் 111).

    வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள். மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612.

    வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.04.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது.

    இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது .
    • பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது . இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியினரின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.  

    • ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது.
    • சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

    சென்னை :

    வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் இதுவரை 2 கோடி பேர் அதாவது 32 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

    மாவட்டந்தோறும் கலெக்டர்கள், ஆதார் சிறப்பு இணைப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதுதவிர, சில மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    • சுரண்டை நகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சிக்குட்பட்ட சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்திலும், சுரண்டை நகராட்சி அலுவலகத்திலும், சுரண்டை ராஜம் தொடக்கப்பள்ளி வளாகத்திலும், கீழ சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபத்திலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    மேலும் தொடர்ந்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி தலைவர் வள்ளி முருகனிடம் பொதுமக்கள் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் சுரண்டை வருவாய் ஆய்வாளர் கண்ணன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகணேஷ் சங்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையமானது 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தம் செய்யப்பட்டு 17-6-2022 அரசிதழ் பிரசுரிப்பின்படி எதிர்வரும் 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் விவரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1-8-2022 முதல் 31-3-2023-க்குள் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் என்பது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மைபடுத்துவதற்கும், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்காவும் ஆகும். வாக்காளர்கள் இணையதளத்தில் என்.வி.எஸ்.பி. போர்டல் மற்றும் வோடர் போர்டல் மூலமாகவும், வோடர் ஹெல்ப் லைன் ஆப் செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6பி என்ற விண்ணப்பத்தினை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட தனி அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றியை சமர்ப்பிக்கலாம்.

    எனவே வருகிற 31-3-2023க்குள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இணைக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, தெற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் தாசில்தார் கலைவாணி மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர்.
    • ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர்.

    திருப்பூர் :

    கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியான வாக்காளர் பட்டியல் விவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர். ஆண்கள் - 11,76, 924, பெண்கள் -12, 12, 381, திருநங்கைகள்- 309 பேர் உள்ளனர்.ஏறத்தாழ 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் நிறைந்த மாவட்டம் என்பதால் அடிக்கடி குடிபெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். வாடகை வீடு என்பதால் மாறிக்கொண்டே இருக்கின்றனர். அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர். தாங்களாக முன்வந்து பெயர் நீக்க விண்ணப்பித்தும் பெயர் நீக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைக்கப்பட்டதும் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டன.

    அதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைத்தால் மட்டுமே செம்மையான பட்டியல் தயாரிக்க முடியும். தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதமும், துல்லியமாக இருக்கும்.ஒருவழியாக, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க இந்திய தேர்தல் கமிஷன் தயாராகிவிட்டது. இன்று முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இப்பணி தொடர்ச்சியாக டிசம்பர் மாத இறுதி வரை நடக்க உள்ளது. அடுத்து வெளியாகும் வாக்காளர் இறுதி பட்டியல், ஆதார் விவரத்துடன் இணைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முறையாக அறிவிப்பு வெளியிட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், படிவம் -6 பி பூர்த்தி செய்து, ஆதார் விவரங்களை இணைக்கலாம். ஆன்லைனில் இணைக்க முடியாதவர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் அறிவிப்பு செய்யும் என்றனர்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க தேர்தல் கமிஷன் வசதி செய்துள்ளது. 'ஆன்லைன்' மூலமாக படிவம் - 6பி' யை பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலே போதும். https://www.nvsp.in, voterhelpline - மொபைல் ஆப் வழியாக படிவம் - 6பி'யை பூர்த்தி செய்து எளிய முறையில் ஆதார் விவரத்தை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க 1.8.2022 முதல் பணி நடைபெறவுள்ளது
    • இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலிலுள்ள வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ளதா அல்லது ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதா என்பதையும் கண்டறியவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது 1.8.2022 முதல் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண் விபரங்களை தன்விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis) தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் தன்விருப்பத்தின் அடிப்படையில் பயன்பாட்டு இணைய தளங்களான www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்கள் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் அல்லது வாக்குச்சவாடி நிலை அலுவலர்கள் இப்பணிக்கு வரும்போது தன்விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6B - யினை பூர்த்தி செய்து சமர்ப்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர்களுக்கு ஆதார் எண் இல்லை என்ற அடிப்படையில், ஆதார் எண் தெரிவிக்க இயலாத இனங்களுக்கு படிவம் -6B -ல் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து அதன் நகலினை படிவம் 6B உடன் அளிக்கலாம்.

    1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை 2. வங்கி-அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குபுத்தகம் 3. தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை 4. ஓட்டுநர் உரிமம் 5. நிரந்தர கணக்கு அட்டை (Pan Card) 6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாள சான்று 7. இந்திய கடவுச்சீட்டு 8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் 9. மத்திய, மாநில அரசு,பொதுத்துறை நிறுவனங்கள்,வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை 10. நாடாளுமன்ற,சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்அலுவலக அடையாள அட்டை 11. இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால்வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை (UDID).

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலினை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர்கள் அனைவரும் தன்விருப்பத்தின் அடிப்டையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை என்றும், வெடிகுண்டைவிட அது மிகவும் சக்திவாய்ந்தது என்றும் வாக்களித்தபின் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #Modi
    அகமதாபாத்:

    பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    என் தாய் வீடான குஜராத்தில் எனது கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்ததன்மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். கும்ப மேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப்போல, ஜனநாயக திருவிழாவில் வாக்கை பதிவு செய்தபின் வாக்காளர் தூய்மையானவராக உணரலாம். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.



    பயங்கரவாதத்தின் ஆயுதம் ஐஇடி(வெடிகுண்டு), ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது ஓட்டர் ஐடி (வாக்காளர் அடையாள அட்டை). ஐஇடி-யை விட மிகவும் சக்தி வாய்ந்தது ஓட்டர் ஐடி. எனவே நாம் நமது ஓட்டர் ஐடியின் வலிமையை புரிந்துகொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Modi

    வெள்ளக்கோவிலில் இளைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வெள்ளக்கோவில்:

    தமிழகத்தில் அவ்வப் போது அரசின் ரே‌ஷன் ஸ்மார்ட் கார்டில் நடிகையின் படம், விநாயகர் படம், செருப்பு உள்பட பல படங்கள் இடம் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஒரு வாலிபரின் வாக்காளர் அடையாள அட்டையில், பெண்ணின் புகைப்படம் வெளியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட, உப்புப்பாளையம் ரோடு வார்டு 5-ல் வசிக்கும் பெரியசாமி(19) என்ற ஆண் வாக்காளர் அடையாள அட்டையில் பெண்ணின் படம் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.

    இது குறித்து வெள்ள கோவிலில் நடந்த சிறப்பு முகாமில் இந்த அடையாள அட்டையை திருத்துவதற்காக பெரியசாமி கொடுத்தார். தேர்தலில் வாக்குப்பதிவுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் அடையாள சான்றுக்கும் வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் இதுபோன்ற குளறுபடியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்ற பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Rohingyas #Hyderabad
    ஐதராபாத்:

    மியான்மர் நாட்டின் உள்நாட்டு போர் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக ரோஹிங்கியா மக்கள் குடியேறினர். அவர்கள் அகதிகளாக மட்டுமே வாழ இயலுமே தவிர எந்த நாட்டிலும் குடிமக்களாக உரிமை பெற முடியாது.

    இந்தியாவில் ஐதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சில அகதிகள் குடியுரிமை போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை அகதிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், ஐதராபாத் நகரில் ஒரு பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வாழும் இருவரது உதவியுடன் இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, போலி ஆவணங்களை பெற உதவியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவர்களிடம் இருந்து ஆதார் போன்ற அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். #Rohingyas #Hyderabad
    ×