search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virtual Reality"

    • "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
    • மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்

    சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.

    வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.

    மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.

    மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.

    சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.

    "வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.

    வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த சாதனத்தின் உற்பத்தி பணிகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் காப்புரிமைகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்சசுவல் ரியாலிட்டி சாதனம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. ஆப்பிளின் ஏ.ஆர். கண்ணாடிகள் கம்ப்யூட்டிங், ரென்டரிங், இண்டர்நெட் கனெக்டிவிட்டி மற்றும் லொகேஷன் சேவைளை பயனர் ஐபோனில் இருந்து டிஸ்ப்ளே செய்யும் என மிங் சி கியோ தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், ஆப்பிளின் ஏ.ஆர். சார்ந்த ஹெட்செட் ஐபோனுடன் இணைந்து பயனர்களுக்கு கம்ப்யூட்டர் புகைப்படங்களை நிஜ உலகின் மேல் பிரதிபலிக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஹெட்செட் ஆப்பிள் உருவாக்கும் பிரத்யேக சிப் கொண்ட மற்ற சாதனத்துடன் வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.



    இதுதவிர ஹெட்செட்டில் டச்-சென்சிட்டிவ் பகுதி இடம்பெற செய்ய ஆப்பிள் விரும்புவதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் சூழலுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் வெற்றி பெறச் செய்வதில் ஆப்பிள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    புதிய ஏ.ஆர். ஹெட்செட்களின் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவுறும் பட்சத்தில் இந்த சாதனம் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஹாலோ லென்ஸ் 2 எனும் சாதனத்தை அறிமுகம் செய்தது.

    இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாண்டு பழைய சாதனத்தின் மேம்பட்ட புதுய வெர்ஷன் ஆகும். இந்த சாதனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 3500 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக் தளத்தின் நியூஸ் ஃபீடில் வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் புதுவிதமாக போஸ்ட் பதிவிட வழி செய்துள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.

    பயனர்கள் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம்.

    நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும். எனினும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் 360 தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும்.



    புகைப்படத்தை போர்டிரெயிட் மோடில் எடுத்து, அதனை 3டி போட்டோவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும். இனி படத்தை ஸ்கிரால், பேன் அல்லது டில்ட் செய்து படத்தை உண்மையான 3டி-யில் பார்க்க முடியும். ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ்-இல் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்கலாம். 

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த கருத்துக்களை பயனரிடம் கேட்டறிந்து வருகிறோம், தொடர்ந்து இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கி வருகிறோம் என ஃபேஸ்புக் 360 பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த அம்சம் மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது.
    ×