search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay antony"

    • இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.
    • பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நான் படத்திற்கு பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்தார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மக்களிடையே கொண்டாடபட்டது.

    விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் பிச்சைக்காரன். அதற்கடுத்து கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி.

    இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது
    • இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்

    தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

    அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.

     இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மன்னிப்பு கேட்காவிட்டால் விஜய் ஆண்டனி வீட்டிற்கு முன்னால் ஆர்பாட்டம் நட்த்துவோம் என அறிக்கை வெளியிட்டனர்.

    இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அன்பார்ந்த கிறிஸ்துவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே. திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான்.தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார். என்று கூறி இருந்தேன்.

    ஒரு பத்திரிக்கயாளர் நண்பர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதை , நான் பேசியதை இணைத்து தவராக அர்த்தப்படுத்தியதால் அது தவறாக எண்ணி உங்களைப் போல சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு, அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என மனமார்ந்த மன்னிப்பை தெரிவித்து இருக்கிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார், மிருணாளினி கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
    • ஆதாரம் இல்லாமல் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை போதை வஸ்த்துவிற்காக பயன்படுத்தினார் என்று எப்படி கூறலாம்

    இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், , பாடலாசிரியரென பன்முகத்தன்மையுடைவர் விஜய் ஆண்டனி. 'நான்' என்ற படத்தில் கதாநாயகனாக திரையுலகப் பயணத்தை துவக்கினார். 'நான்' படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும் , புகழையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

    2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் 'பிச்சைக்காரன்' படத்தில் நடித்தார். இத்திரைபடம் வசூலில் மிரட்டியது. பட்டித்தொட்டி எங்கும் 'பிச்சைக்காரன்' படம் சேர்ந்தது. விஜய் ஆண்டனி திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக பிச்சைக்காரன் இருக்கும் எனலாம். 

    தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார்/ மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

    அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.

    புராணத்தில் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜ ராஜ சோழன் காலத்தில் சோமபானம் குடித்து கொண்டு இருந்தார்கள் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இயேசு கிறிஸ்துவையும், கிறிஸ்துவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார். அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரின் வீட்டிற்கு முன்பு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கை விட்டுள்ளனர்.



     




     


    • திரைப்படம் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.
    • முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன்.

    விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்று இருக்கிறது. 'ரோமியோ' திரைப்படம் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி பேசும் போது, "விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை."

    "முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்," என்று தெரிவித்தார்.

    • 'ரோமியோ' படத்தின் முதல் சிங்கிள் செல்லக்கிளி பாடல் வெளியானது.
    • இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' படத்தின் முதல் சிங்கிள் 'செல்லக்கிளி' பாடல் வெளியானது.

    நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

    இந்நிலையில், ரோமியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'செல்ல கிளி' என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    • ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

    நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

     


    இந்த நிலையில், ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'செல்ல கிளி' என்ற பாடல் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 



    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரோமியோ’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

    நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.


    ரோமியோ போஸ்டர்

    இந்நிலையில், 'ரோமியோ' திரைப்படம் வருகிற கோடையில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 'மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி'என்று குறிப்பிட்டு பால் செம்புடன் விஜய் ஆண்டனியும் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினியும் இருக்கும் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

    நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் இந்த ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவு பெற்றது.


    ரோமியோ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'.
    • இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.


    ஹிட்லர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஹிட்லர்' படத்தின் முதல் பாடலான 'டப்பாசு' பாடல் நாளை (ஜனவரி 25) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    • நடிகர் விஜய் ஆண்டனி 'ஹிட்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.


    'ஹிட்லர்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, இயக்குனர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார்.


    ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கவுதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துகள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் இயக்குனர் முரளி அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என்றார்.

    • நடிகர் விஜகாந்த் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், குஷ்பு என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள. தொடர்ந்து இவரது உடல் மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.


    இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கிக் கொண்ட விஜய் ஆண்டனி தடுப்புகளில் ஏறி குதித்து வந்தார். விஜய்காந்தின் உடலை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி அவருக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார். அனைவரும் மாலை அணிவித்து, தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்திய நிலையில் விஜய் ஆண்டனி முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    • விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்'என்ற குறிப்புடன் தொடங்கும் இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    ×