search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vermicompost"

    • பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
    • மண்புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    அவிநாசி :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் கடந்த மே மாதம் துவங்கப்பட்டது.அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அவிநாசி பேரூராட்சி சார்பில் தினமும் 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. மண் புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம், கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டன் கணக்கில் வாங்குவோருக்கு விலையில் சலுகையும் வழங்கப்படுகிறது.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை மற்றும் மண்புழு உரத்தில் கலந்துள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சான்று பெறப்பட்டுள்ளது. பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் ஒரு டன் உரம் விற்பனையாகியுள்ளது. அரசின், தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடாக இப்பணி அமைந்துள்ளது என்றனர்.

    • வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
    • வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்மங்குடியில் வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கா.ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோ. பார்கவி வரவேற்றார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன் மதிப்பு கூட்டுதல் பற்றியும் அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக பயிற்சி அளித்தனர். தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம், விதைச்சான்று அலுவலர் கனகம், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

    வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன், சவுந்தரராஜன் மேற்கொண்டனர். இறுதியில் உதவி வேளாண்மை அலுவலர்.ராமன் நன்றி கூறினார்.

    ×