என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vellore old bus stand"
- பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் சில பணியை செய்ய உள்ளனர்.
- பொதுமக்கள் அங்கு சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூரில் புதிதாக கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததால் திருப்பதி சித்தூர் செல்லும் பஸ்கள் ஆட்டு தொட்டி பஸ் நிலையத்தில் இருந்தும் மற்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் இன்னும் சில பணிகள் செய்ய வேண்டிய உள்ளது. பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் சில பணியை செய்ய உள்ளனர்.
இந்த பணிகள் முடிவடைந்த பிறகு தான் புதிய பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதுவரை பழைய பஸ் நிலையம் மற்றும் ஆட்டு தொட்டி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபாலன் (வயது 42). துப்புரவு தொழிலாளி. இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று திடீரென கத்தியால் வேணுகோபாலனை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த வேணுகோபாலனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலனை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்மகும்பலை தேடி வருகின்றனர். ‘வேணுகோபாலனுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே குடும்பதகராறு இருந்து வருவதாகவும், அதனால் மர்ம கும்பலை ஏவி அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்