search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varadaraja perumal"

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

    இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவில் கும்பா பிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி நாளை(23-ந்தேதி) காலையில் சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. 24-ந்தேதி காலையில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன.

    காலை 10.30 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன. வருகிற 25-ந்தேதி காலையில் கோபூஜை, பூர்ணாகுதி, சங்கல்ப பூஜை நடக்கிறது.

    யாகசாலை பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்க பாண்டி யன், அசோகன், ரகுராமன், மான்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் அன்னதானத்தை ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விழாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கே.வி.கே.ஆர்.பிரபாகரன் மற்றும் செட்டிகுறிச்சி கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம்நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 6 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    பின்னர் 26-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சேஷ வாகனம், தங்க கருட சேவை, ஹனுமந்த வாகனம், யானை வாகனம், புண்ணிய கோடி விமானம், குதிரை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், 2-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு கோபுர வாசலில் தீர்த்தவாரி நடக்கிறது. இதையடுத்து 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
    • 5, 6, 7 ஆகிய தேதிகளில் தசாவதார சேவை நடைபெறுகிறது.

    பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்திமான பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். கடந்த 23-ந் தேதி முதல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு மண்டகப் படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 4-ந் தேதி காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேலச்சத்திரம் வழியாக பெரிய கடை பஜார் உள்பட முக்கிய பகுதிகளுக்கு சென்று வண்டியூர் சென்றடைவார்.

    5, 6, 7 ஆகிய தேதிகளில் வைகை ஆற்றில் தசாவதார சேவை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு வைகை ஆற்றில் இருந்து எழுந்தருளி விதிஉலா வந்து 9-ந் தேதி காலை கோவிலுக்கு சென்றடைவார். இரவு கண்ணாடி சேவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், எமனேசுவரம் சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் செய்து வருகின்றனர்.

    • விழா நாட்களில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது.
    • 26-ந்தேதி கருட சேவை நடக்கிறது.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 98-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மகா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

    அதன்பின் மங்கள வாத்தியங்களுடன், சிறப்பு மங்கள வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    பின்னர் சுவாமி மாட வீதியின் வழியாக நாதஸ்வர வாத்தியங்களுடன் புறப்பாடும் இரவில் அன்னவாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகளுடன் காலை சாமி திருவீதி உலாவும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கருட சேவை உற்சவமும், 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகா தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழா குழு தலைவர் வக்கீல் சி.எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆய்வாளர் முத்துசாமி, உபயதாரர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ----------

    • பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று.
    • 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதவிழா 8 நாட்கள் நடைபெறும். பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. தற்போது தொடங்கியுள்ள இந்த உற்சவத்தில் நாளை பல்லவ உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள்.

    பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெருமாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப்பாடும் உண்டு.

    வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சீபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் நன்மைகளைப் பெறுவார்கள். வருகிற 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    • கடந்த 45 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
    • தேரின் மொத்த உயரம் 33 அடி ஆகும்.

    பண்ருட்டி காந்தி ரோட்டில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுவது சிறப்பாகும்.

    ஆனால் தேர், சிதலமடைந்ததால் கடந்த 45 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. எனவே புதிய தேர் செய்து, தேரோட்டம் நடத்த வேண்டும் என்று பக்தர்களின் குரல் ஓங்கி ஒலித்தது.

    இதையடுத்து புதிய தேர் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ரூ.10 லட்சம் ஒதுக்கியது. மேலும் நன்கொடையாக ரூ.10 லட்சம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.20 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது புதிய தேர் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. தேரின் மொத்த உயரம் 33 அடி ஆகும்.

    இந்த புதிய தேர் வெள்ளோட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. கோவிலில் இருந்து தொடங்கும் தேர் வெள்ளோட்டம், காந்தி ரோடு, ராஜாஜி ரோட்டில் நடக்கிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணியை பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலைவாணி மதியழகன், கிருஷ்ணராஜ், பிரபு, லோகநாதன், செல்வகுமார், கோபி, சுரேஷ், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா மற்றும் கோவில் குருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வரலட்சுமி விரத பூஜையில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.
    • நோன்பு கயிறுகளை பெண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த வரலட்சுமி விரத பூஜையில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் வரலட்சுமி விரத பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வரதராஜபெருமாள் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மண்டபத்தில் கலசம் வைத்து, சிறப்புப்பூஜைகள் செய்தனர். வேத பண்டிதர்கள் வரலட்சுமி விரத கதையை படிக்க பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கதையைக் கேட்ட பின் வரலட்சுமியை வழிப்பட்டனர்.

    இதையடுத்து நோன்பு கயிறுகளை பெண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர். தங்களின் கணவர்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும், தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வரம் வேண்டி வரலட்சுமி விரத பூஜையை மேற்கொண்டனர்.

    விரத பூஜையில் காலை முதல் மாலை வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்று வழிபட்ட பெண் பக்தர்களுக்கு சிவன் கோவில் சார்பில் தாம்பூலம் வழங்கப்பட்டது.

    • வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஆகியோருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, இரட்டைக் குடையுடன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • உற்சவமூர்த்திகளை வைத்து யாகசாலையில் 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்து வைத்தனர்.
    • இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார், அனுமன் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    பின்னர் யாகசாலை மண்டபத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவமூர்த்திகளை வைத்து யாகசாலையில் 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்து வைத்தனர். 108 கலசம் வைத்து ஸ்ரீரங்க சடகோப கைங்கரியசபா நிர்வாகி பாலாஜி பட்டர், திருவேங்கடநாதன் பட்டர் தலைமையில் 21 பட்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு மூலிகையை கொண்டு உலக நன்மைக்காக சுவாதி நட்சத்திர மகா யாகம் நடத்தப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. கோவில் சார்பாக சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிறந்த குழந்தையை வைத்து அதற்கு நிகராக காசுகளை வைத்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினார்கள். மேலும் காலையில் இருந்தே பக்தர்கள் கார், வேன் மூலமாக சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், ஆற்காடு , சேலம், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.

    • சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர்.

    மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலையின் அடிவாரத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் செல்வவிநாயகர், வீரியாயி, கருப்பசாமி, கன்னிமார், ஆஞ்சநேயர், பட்டவன் ஆகிய சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் புதிதாக உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை விழா மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யான உற்சவ விழா நேற்று நடைபெற்றது.

    காலையில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து வீரமலைப்பாளைத்தில் உள்ள வீரியாயி கோவிலில் இருந்து அரிசி, பழம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, அதிரசம், தேங்காய், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய 120 சீர்வரிசை தட்டுகளை பொதுமக்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர். பக்தர்களுக்கு ஆன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தொப்பம்பட்டி, வீரப்பூர், வீரமலைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் அமைந்துள்ளது, வரதராஜப்பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
    ராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத்தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர். இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.

    ராமானுஜரின் அவதார தலம் ஸ்ரீபெரும்புதூர். அங்கு அவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்போது, பூந்தமல்லி வரதராஜர் ஆலயத்தில் இருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டு செல்லப்படும். அதே போல் இங்கு திருக்கச்சி நம்பிக்கு திருநட்சத்திர விழா நடை பெறுகையில், அங்கிருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டுவரப்படும்.

    புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகிறார்கள். இந்த அன்னைக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, புஷ்ப யாகம் நடக்கிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும். திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார்.

    அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லிவிட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ , தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.

    பூந்தமல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளுக்கு விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவம் அமைத்து மலர்களை தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் செல்வார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப்பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சென்னையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வரதராஜ பெருமாள் மேல் பல்லக்கில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து மீண்டும் கோவிலை அடைந்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி கண்டார். அப்போது குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்
    ×