search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaithilingam mp"

    • வைத்திலிங்கம் எம்.பி.குற்றச்சாட்டு
    • நாராய ணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரிசி வழங்கப்பட்டது. கவர்னர் அரிசி வழங்குவதை தடுத்ததால் பணமாக வழங்கினோம்.

    புதுச்சேரி:

    பாகூர் வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் பேசியதாவது:-

    பாகூர் தொகுதி காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதி. கடந்த எம்.பி. தேர்தலில் மிகப்பெரும் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தீர்கள். நீங்கள் ராகுல்காந்திக்காக ஓட்டு போட்டீர்கள். மோடி வேண்டாம் என நினைத்து ராகுல் காந்திக்கு ஓட்டு போட்டீர்கள். அதேபோல வரும் தேர்தலிலும் மோடியை ஒழித்துக்கட்ட வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

    அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரிசி வழங்கப்பட்டது. கவர்னர் அரிசி வழங்குவதை தடுத்ததால் பணமாக வழங்கினோம்.

    தற்போது இத்திட்டத்தை யேநிறுத்திவிட்டனர். அதற்கான பணத்தையும் வழங்கவில்லை. இதனால் முதியோர் அவதிப்பட்டு வருகின்றனர். கியாஸ் வாங்கினால் ரூ.300 வழங்குவோம் என்றனர்.

    ஆனால் அதையும் தரவில்லை. பெண்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றனர். அதையும் வழங்கவில்லை. பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் ரங்கசாமியும் புதுவை மக்களை ஏமாற்றுகின்றனர்.

    ரங்கசாமி ஆட்சியில் தெருவுக்கு தெரு சாராயம், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும். இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ், ரூ.2 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்ப டுகிறது. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்க ப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மோடி யிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தி வெற்றி பெற கை சின்னத்து க்கு வாக்க ளிக்க வேண்டு ம். இவ்வாறு அவர் பேசினார்.

    • வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
    • அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறிய தாவது:-

    புதுவை முதல்- அமைச்ச ருக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் எந்த அக்கறையும் இல்லை. சமூக தலைவர்களிடம் பேசும்போது மாநில அந்தஸ்தை முன்னாள் முதல்- அமைச்சர்கள் எதிர்க்கின்ற னர் என கூறியுள்ளார். நானோ, நாராயணசாமியோ மாநில அந்தஸ்தை எதிர்க்க வில்லை.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்-அமைச்சர் நிலைப்பாடு என்ன? என தெரியவில்லை. புதுவை அரசு சார்பில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர் டெல்லிக்கு செல்லவில்லை?

    தற்போது மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வில்லை என கூறிய பிறகு டெல்லிக்கு செல்வோம் என்கின்றனர். இன்னும் 2 ஆண்டிலாவது மாநில அந்தஸ்து பெறுவார்களா? இல்லையா? என தெரிவிக்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி யில் ஒரு பெண் அமைச்சரை நீக்குகின்றனர்.

    இந்த பதவிநீக்கம் ஆணாதிக்கத்தின் செயல்பாடு. ஆணாதிக்க ஆட்சியாகவே இதை பார்க்கிறோம். பா.ஜனதா 33 சதவீதம் என சொல்வதே ஏமாற்று வேலை என்பதற்கு இது உதாரணம்.

    பெண்களையும், மக்களையும் திசை திருப்பி பழி வாங்கும் வகையில் புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதிகாரம் இல்லை என கூறும் முதல்-அமைச்சர், தனது அதிகாரத்தை பகிர்ந்து தர மறுக்கிறார். எந்த அமைச்சர்களுக்கும் அதிகாரம் தருவது கிடையாது.

    இவர் மட்டுமே முதல்-அமைச்சராக முழு அதிகா ரத்தையும் வைத்துக் கொண்டுள்ளார். அதுவும் போதாது என மாநில அந்தஸ்து அதிகாரம் வேண்டும் என கேட்கிறார். பெண் அமைச்சரிடம் பதவியை பறித்து பண முதலாளிக்கு தர முதல்-அமைச்சர் நினைக்கிறார்.

    இந்த வியாபாரத்தின் மூலம் தனது வசதியை பெருக்கிக்கொள்ள நினைக்கிறார். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.

    பெண் உரிமை பேசும் பெண் கவர்னர், ஒரு பெண்ணின் பதவியை பறிப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பதவிநீக்கம் குறித்த காரணத்தை முதல்-அமைச்சர் வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும். அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்-அமைச்சர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?

    முதல்-அமைச்சர் ஆண் ஆதிக்கம் செலுத்துபவர். பெண்களுக்கு சம உரிமை தருவதில் அவருக்கு எந்த ஒப்புதலும் கிடையாது.

    மாநில அந்தஸ்து வேண்டுமென்றால் புதுவை அரசிடம் இருந்து கோரிக்கைகள் மத்திய அரசுக்கு செல்ல வேண்டும். எம்.பி.க்கள் தானாக கேட்க முடியாது. புதுவை அரசிடம் இருந்து கோரிக்கைகள் அனுப்பினால்தான் மத்தியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தி பெற முடியும்.

    புதுவையில் முழுமையாக பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது. அமைச்சர் ஒரு பெண் என்பதால் அவரின் உரிமைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
    • போலீஸ் நிலையத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், கட்சி நிர்வாகிகள் காலாப்பட்டில் தீக்குளித்த இறந்த பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:

    காவல்துறையினரின் அலட்சிய போக்கால் கலைச்செல்வி இறந்துள்ளார். காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

    ஆனால் பொறுப்பை தட்டிகழித்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காவல்துறை சரியாக செயல்படாததே காரணம்.

    புதுவை அரசு கலைச்செல்வியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவு.
    • இ.பி.எஸ். 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-

    இ.பி.எஸ். 95 ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள் 70 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவு. சராசரியாக ரூ.ஆயிரத்து 174 வழங்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு எந்த உதவியும் வழங்குவதில்லை.

    இதனால் வயதான காலத்தில் ஆதரவின்றி தவிக்கின்றனர். இதை கருத்தில்கொண்டு இ.பி.எஸ். 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச மருத்துவ உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வைத்திலிங்கம் எம்.பி. கடும் தாக்கு
    • அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

    புதுச்சேரி:

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதுதான் மிக பெரிய வருத்தம். கவர்னர் தமிழிசை பேசிய ஆடியோகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தக்காளி விலை உயர்வு சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. எல்லா காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. மட்டனை விட காய்கறி விலை அதிகமாக உள்ளது. காய்கறி இல்லாமல் எப்படி சமைக்க முடியும்?

    இந்த அரசு இதுகுறித்து எதுவும் பேசவில்லை. நிர்மலா சீதாராமன் எதுவும் பேசவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய நிதி அமைச்சரிடம் புதுவைக்கு எந்த திட்டத்தையும் கேட்கவில்லை.

    காலாப்பட்டு மீனவர்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஏதாவது நிதி கேட்பார் என நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. கடல் அரிப்புக்கு எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை. பொதுப்பணித்துறையில் வரைபடம் போட கூட ஆள் இல்லை. புதுவையில் மின் வெட்டு இல்லாத நாளே இல்லை. இது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. ஏ.சி. காரிலேயே ஆட்சியாளர்கள் செல்வதால் மக்கள் கஷ்டம் அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் மிக பெரிய கார் வைத்துள்ளார்கள். அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

    முதல அமைச்சர், அமைச்சர்கள் கார் கண்ணாடிகை கூட கீழே இறக்குவது இல்லை. இதனால் மக்கள் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களை விட கவர்னர் மோசம். மதுகடைகள் சாராயக்கடைகளை மட்டுமே திறந்து வருகிறார். மக்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்தினால்தான் இதற்கு விடியல் வரும் என்ற காரணத்தினால் தான் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. மாநில அரசாங்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் தொடரும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் வளர்ச்சி நிலை குறித்தும், கட்சி வளர்ச்சிக்கான வழிகள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.
    • காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. பொறுப்பேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவல கத்தில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    முதல்கட்டமாக மாநில தலைவர் வைத்திலிங்கம், 3 தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம் தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அவர்களிடம் காங்கிரஸ் வளர்ச்சி நிலை குறித்தும், கட்சி வளர்ச்சிக்கான வழிகள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

    தொடர்ந்து இன்றும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    • வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
    • பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நில அபகரிப்பை தடுக்க கோவில் சொத்துக்களுக்கு பூஜ்ய மதிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் கோவில் சொத்து அபகரிப்பை தடுக்க முடியும்.

    காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை தடுக்க அப்பகு தியில் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வைத்திலிங்கம் எம்.பி பேட்டி
    • ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும். புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாரையும் எப்போது மதிக்காத மத்திய அரசு தீர்ப்பின் உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    ஆனால் எப்போதும்போல, பா.ஜனதா மத்திய அரசின் கைப்பாவையான கவர்னர் தமிழிசை, தீர்ப்பினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறியுள்ளார். புதுவை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். இவை அனைத்தும் ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும்.

    புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார். இதிலிருந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பாக இருந்தாலும் அதை மதிக்கமாட்டேன் என்று தடுப்பு பேசுவதை அறிய முடிகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தோர் இப்படிதான் செய்வார்கள் என்பதற்கு இந்த வார்த்தைகளே உதாரணம். தனது அதிகாரம் பறிபோகக்கூடாது என்பதற்கான நடவடிக்கை எடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுவையில் ஆளும் கூட்டணிமியிலுள்ள பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை தட்டிக்கேட்காதது வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மக்களுக்கு உரிய பணி செய்வதற்கான அதிகாரத்தை ஆளும் கட்சிகள் பெறாதது ஏன்.?

    புதுவை காமராஜர் என தன்னை அழைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதுபானக்கடைகளை ஊக்குவிப்பதால் காமேராஜர் பெயரை பயன்படுத்த கூடாது. கமிஷன் ஆட்சியாக கர்நாடகத்தில் பா.ஜனதா மாறியதால் தூக்கியெறியப்பட்டது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மதுபானக் கொள்ளை கமிஷனில் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் தூக்கியெறிவார்கள்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி கூறினார்.

    • வைத்திலிங்கம் எம்.பி தொடங்கி வைத்தார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி முதலியார்பேட்டை வேல்ராம் பட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையேற்று வைத்திலிங்கம் எம்.பி பரிந்துரையின் பேரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை  நடந்தது. வைத்திலிங்கம் எம்.பி. முதலியார்பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித் துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, துணை ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
    • மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். பாராளு மன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. பிரதமர் மோடியும், பா.ஜனதாவினரும் ராகுலின் கேள்விக்கு பயந்து தப்பியோடி ஒளிந்து கொண்டனர்.

    புதுவையிலும் அதானி குழுமம் கால் பதித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்துறை தனியார்மயத்தில் அதானி, டாடா, வெளிநாட்டு நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இதுபற்றி அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

    மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார். செல்போன் நிறுவனங்கள் போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு என 2 வழிமுறைகளை தருகிறது. விருப்பமான வழிமுறையை நாம் தேர்வு செய்ய முடியும். அதேபோல மின்துறையில் இத்திட்டத்துக்கு அரசால் விண்ணப்பம் கோர முடியுமா?

    தனியாரிடம் மின்துறையை தாரை வார்க்கும்நேரத்தில் எதற்கு பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கொண்டுவர வேண்டும்? 1991 முதல் கூட்டுறவு நிறுவனங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் கூட்டுறவு நிறுவனம் அனைத்தும் நலிவடைந்து, சீர்குலைந்து போயுள்ளது. பாண்லே கூட்டுறவு பால் நிறுவனத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பால் கிடைப்பதை விட மது அதிகமாக தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. புதுவையில் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் உற்பத்தியாளர்கள் பாலை தர முன்வருவதில்லை.

    அதேநேரத்தில் பால் விற்பனை விலை தமிழகத்தைவிட புதுவையில் அதிகமாக உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு, சங்கங்களுக்கு பல ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்களை சீரமைக்கக்கோரி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்.

    வருமானத்தை பெருக்கவே ரெஸ்டோ பார் வழங்குவதாக முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். ரெஸ்டோ பார்களில் விற்கப்படும் மதுக்களுக்கு கலால்வரி செலுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ரெஸ்டோ பார்களுக்கு விற்பனை வரி விதிக்க வேண்டும்.

    வருமானத்தை பெருக்க வேண்டும் என கூறும் முதல்-அமைச்சர் மது கடைகளையும் சாராயம், கள்ளுக்கடைகள் போல ஏலம் விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்தில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது புதுவை ரெயில் நிலையத்திற்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், வளர்ச்சிப்பணிகள், புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதன் காரணமாக தற்போது புதுவையில் இருந்து மங்களூர், தாதர், டெல்லி, ஹவுரா, புவனேஸ்வர், யஷ்வந்த்பூர், கன்னியாகுமாரி ஆகிய ஊர்களுக்கு ரெயில் சேவை உள்ளது.

    இதனால் புதுவைக்கு பயணிகள் வருகை ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் தரம் உயர்த்தவும், மேலும் பல முக்கிய ஊர்களுக்கு புதுவையில் இருந்து ரெயில் வசதி ஏற் படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

    ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். புதுவை ரெயில் நிலையத்தில் ெரயில்களை பராமரிக்க கூடுதல் லைன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. புதுவையில் ரூ.72 கோடியில் ரெயில் நிலையம் விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இந்த பணியை திட்டமிட்ட காலத்தில் முடிக்கவேண்டும். சென்னையிலிருந்து புதுவை-கடலூர் ரெயில் பாதை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டியுள்ளது. வருகிற மார்ச் 6-ந் தேதி திருச்சியில் தெற்கு ரெயில்வே கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதுவைக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
    • இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏனாமில் சில பணிகளுக்கு நிதி ஒதுக்கி கொடுத்திருந்தார். அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்ட நிதியை சரியாக செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், திட்ட ங்களுக்கு தேவைப்படும் நிதியை தர தயாராக இருப்ப தாகவும் உறுதியளித்தார்.

    இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பின்னர் ஏனாமில் கட்டப்பட்டுவரும் 100 படுக்கைகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை கிளை யையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×