search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadai"

    • மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
    • இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்

    முட்டை - 1

    உருளைக்கிழங்கு - 100 கிராம்

    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    பச்சைமிளகாய் - 3

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

    பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.

    ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான டீ, காபியுடன் சாப்பிட இந்த வடை சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    காலிஃபிளவர் - ஒரு கப்

    கடலை பருப்பு - அரை கப்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    கசகசா - கால் டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவைகேற்ப

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒன்று

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் துருவிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரை வடிகட்டிய காலிஃபிளவர், அரைத்த கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
    •  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய கொள்ளு - 1 கப்,

    வெங்காயம் - 4,

    பச்சைமிளகாய் - 2,

    உப்பு, எண்ணெய்-தேவைக்கு,

    பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளு பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கொள்ளு வடை தயார்.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மெல்லிய அவல் - 2 கப்,

    அரிசி மாவு - 1/4 கப்,

    ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - 1.

    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

    • இன்று அனுமனுக்கு படைக்க நைவேத்தியத்தை செய்யலாம்.
    • இந்த வடை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    முழு கருப்பு உளுந்து - 1 கப்

    மிளகு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை

    முழு உளுந்தை நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைத்து , தோலுடன் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை மெல்லிய வடைகளாக, வாழை இலையில் தட்டிப் போட்டு போடவும்.

    நன்றாக வெந்து பொன்னிறமாக முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

    இப்போது சுவையான ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடை ரெடி.

    • இன்று உருளைக்கிழங்கு பிரட் சேர்த்து வடை செய்யலாம்.
    • இந்த வடை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 2

    பிரெட் துண்டுகள் - 10

    வறுத்த ரவை - அரை கப்

    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் - 2

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிது

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    • குழந்தைகளுக்கு அடிக்கடி கருப்பு உளுந்து உணவுகளை கொடுத்தால் ரத்த சோகை வராது.
    • கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கருப்பு உளுந்து - 1 கப்

    வெண்ணெய், மிளகு - 2 ஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை :

    கருப்பு உளுந்தை வெறும் கடாயில் வாசனை வரும் வரையில் வறுக்க வேண்டும். அதன் பிறகு மிக்ஸியில் ரவை போன்று கரகரப்பாக பொடியாக்க வேண்டும்.

    அதோடு கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மிளகுப் பொடி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    இதையடுத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து வடையாக தட்டி, கடாயில் சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான கருப்பு உளுந்து வடை ரெடி.

    • இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வடை.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 6,

    உளுத்தம் பருப்பு - 100 கிராம்,

    வெங்காயம் - 2,

    இஞ்சி - சிறு துண்டு,

    பச்சை மிளகாய் - 1,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.

    • ரவையில் உப்புமா, கிச்சடி செய்து இருப்பீங்க.
    • இன்று ரவையில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    கொத்தமல்லி - 1/2 கப்

    கறிவேப்பிலை - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 6

    வெங்காயம் - 2

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பௌலில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, பின் 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, வடை பதத்திற்கு கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனெனில் ரவை ஊறும் போது இன்றும் திக்கான பதத்தில் வரும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    பின் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான ரவா வடை ரெடி!

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
    • கோதுமை மாவில் இன்று வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்,

    ரவை - அரை கப்,

    பச்சரிசி மாவு - 3 ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    தயிர் - அரை கப்,

    தண்ணீர் - ஒன்றரை கப்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    மிளகு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்த மல்லித்தழை,

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    சமையல் சோடா - கால் டீஸ்பூன்.

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த கலவையுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள்.

    அதனுடன் சீரகத்தை தாளித்து சேருங்கள்.

    இவற்றுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

    விருப்பம் இல்லை என்றால் இவற்றை தவிர்த்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தண்ணீர் இதற்கு மேல் அதிகம் எதுவும் சேர்க்க கூடாது. பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும்,

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுடும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள்.

    அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்து டீயுடன் அல்லது சாப்பாட்டுடன் கூட வைத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    சூப்பரான கோதுமை வடை ரெடி.

    • தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கீரை - 1 கட்டு

    உளுந்து - 200 கிராம்

    கடலை பருப்பு - 50 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 1 துண்டு

    சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.

    பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் கீரை வடை தயார்.

    இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.

    பாஸ்தாவை வைத்து பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - அரை கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் தூள் - மரை டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவில் சிறிது உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்.

    குளிர்ந்த நீரில் போட்ட பாஸ்தாவை தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பெருஞ்சீரகம் தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து ( வடை மாவு பதத்தில்) கொள்ளவும்.

    உப்பு சரிபார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ்  பாஸ்தா  வடை ரெடி.

    ×