search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vvs laxman"

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
    • தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க டிராவிட் விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இந்தியாவில நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றால், ராகுல் டிராவிட் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    தோல்வியடைந்ததால் எதிர்காலம் குறித்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அதுகுறித்து யோசிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராகலாம் எனத் தெரிகிறது.

    ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை. குறிப்பாக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் விவிஎஸ் லட்சுமண் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் அணியுடன் பயணம் செய்ய முடியாத நிலையில், விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார்.

    ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை (2023) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய போதிலும், சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ரிஷப் பண்ட் இந்தியாவின் முக்கியமான வீரர்.
    • டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டுள்ள ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் சதம் விளாசி பெரிய சாதனை படைத்திருக்கிறார். எனினும் ரிஷப் பண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை, ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஏற்படுத்த முடியவில்லை.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் 6, 11, 15, 10 ஆகிய ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ரெக்கார்ட் மோசமாக உள்ளது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் ஆறு ரன்கள் மட்டுமே ரிஷப் பண்ட் அடித்திருக்கிறார்.

    இது குறித்து பயிற்சியாளர் லட்சுமணன் கூறியதாவது:-

    நாங்கள் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறோம் .அதே சமயம் யாரெல்லாம் அணியில் தேர்வு செய்யப்படவில்லையோ அதற்கான காரணத்தையும் கூறி விடுகிறோம். மிகவும் முக்கியம் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் விளாசி ரொம்ப நாள் கூட ஆகவில்லை. எனவே அவருக்குப் போதிய ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம். ரிஷப் பண்ட் இந்தியாவில் முக்கியமான வீரர். ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை பேட்ஸ்மேன்கள் வேண்டும் எத்தனை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று யுத்திகளுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து அணியை களம் இருக்கிறோம்.

    இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். இதேபோன்று டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பெரிய ஷாட்கள் அடித்து ரன்கள் குவிக்க முடியும். பயிற்சியாளராக நான் திருப்திகரமாக செயல்படுகிறேன் என்று நினைக்கிறேன்.

    ஆனால் நியூசிலாந்து தொடர் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏனென்றால் வானிலை காரணமாக எங்களுக்கு முழு போட்டியும் கிடைக்கவில்லை. மழை நிற்பதும் தொடங்குவதும் என போட்டி சென்றது. இளம் வீரர்களுடன் பயிற்சியாளராக செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், லஷ்மண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    நாளை டி20 கிரிக்கெட் தொடங்குகிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் பலர் களம் காண்க இருக்கிறார்கள்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். அதுவும் குறிப்பாக பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

    இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணி தனது அணுகுமுறையை மாற்றலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த நிலையில் பயிற்சியாளரான லஷ்மண் பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என இளம் வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

    இது குறித்து லஷ்மண் கூறுகையில் டி20 கிரிக்கெட்டில் நாம் சுதந்திரமாக, பயமின்றி விளையாடுவது அவசியம். இந்த எண்ணத்துடன் களத்தில் சென்று விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தகவல் கேப்டன் மற்றும் நிர்வாகம் மூலம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவேளையில், சீதோஷண நிலை, அப்போதைய போட்டியின் சூழ்நிலை ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் டி20 விளையாட்டிற்கு தேவை. ஏராளமான அணிகள் இந்த முறையை கொண்டு வர முயற்சிக்கும் வகையில் அப்படிபட்ட வீரர்களை அடையாளம் காணும் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும்.

    ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். அவரது இருப்பும் பணி நெறியும் முன்னுதாரணமானது. அவர் ஒரு வீரர்களின் கேப்டன் மற்றும் அணுகக்கூடியவர். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 -வரை நடைபெறுகிறது.
    • நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

    நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை.
    • இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது

    புதுடெல்லி:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை. அந்த தொடரிலும் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றினார். ராகுல் டிராவிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டால், ஆசிய கோப்பை தொடரில் அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பையில் இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.
    • ஆசிய கோப்பை போட்டிக்காக ராகுல் டிராவிட் வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லட்சுமண் கவனிப்பார். இதனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. அவர் ஆசிய கோப்பை போட்டிக்காக வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.

    இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே இருப்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம். லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா இருவரும் ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் ஹராரேயில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்து ஆசிய கோப்பை அணியினருடன் இணைந்து கொள்வார்கள்' என்றார்.

    • ஜோ ரூட் சதம் அடித்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 141 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.

    9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின் சதம் அடித்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கேப்டனாக இருந்த அலஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆவார்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த ஜோ ரூட்டிற்கு, இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பையுடன் முடிந்தது.

    இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.) தலைவராக இருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளரானதால் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரோடு என்.சி.ஏ. தலைமை நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் டிராவிட்டும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்தால் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைப்பார்கள். வலுவான தளம் அமைக்கப்படும். இதனால் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் லட்சுமணுக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதால் இந்த பதவியை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். ஆனாலும் அவரை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. லட்சுமணும் ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் என்.சி.ஏ.வின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ். லட்சுமண்-ராகுல் டிராவிட் ஜோடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நிலையில் பயிற்சியாளர் தளத்திலும் இருவரும் சேர உள்ளனர்.

    விவிஎஸ் லட்சுமண் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் சிறப்பாக ஆடி இருக்காவிட்டால் எனது கேப்டன் பதவி பறிபோய் இருக்கும் என கங்குலி கூறியுள்ளார். #Ganguly #VVSLaxman
    கொல்கத்தா:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதிய டெஸ்ட் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

    இந்த டெஸ்டில் ‘பாலோ’ ஆன் ஆகி கங்குலி தலைமையிலான இந்திய அணி 171 ரன் விததியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு வி.வி.எஸ். லட்சுமண் முக்கிய பங்கு வகித்தார். அவர் 631 நிமிடங்கள் களத்தில் நின்று 452 பந்துகளை சந்தித்து 281 ரன் (44 பவுண்டரி) குவித்தார்.



    ராகுல் டிராவிட் 446 நிமிடம் களத்தில் நின்று 353 பற்துகளை சந்தித்து 180 ரன் (20 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 376 ரன் எடுத்து அணியை தோல்வியில் இருந்து தவிர்த்து வெற்றி பெற வைத்தனர்.

    281 ரன் குவித்த இந்த டெஸ்ட் குறித்து லட்சுமண் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வெளியிட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, ஜாகீர்கான் பங்கேற்றனர்.

    வி.வி.எஸ்.லட்சுமண் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் சிறப்பாக ஆடி இருக்காவிட்டால் நாங்கள் தொடரை இழந்து இருப்போம்.



    எனது கேப்டன் பதவியும் பறிபோய் இருக்கும். லட்சுமண் 281 ரன் குவித்தது எனது கேப்டன் பதவியை காப்பாற்றினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2001-ம் ஆண்டு நடந்த இந்த தொடரில் இந்திய அணி மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோற்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டிலும், சென்னையில் நடந்த 3-வது டெஸ்டிலும் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. #Ganguly #VVSLaxman
    பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்வதாக கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார். #BCCI #Ganguly
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தை வினோத்ராய் தலைமையிலான குழு நடத்தி வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த குழு கடந்த ஜனவரி மாதம் முதல் நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த குழு இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.,இ.ஓ.) ராகுல் ஜோரி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ராகுல் ஜோரியும் விடுப்பில் சென்று விட்டார்.

    இந்த நிலையில் பி.சி.சி.ஐ.யின் தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக குழுவால் பி.சி.சி.ஐ.யின் பெயர் சரிந்து வருகிறது. ராகுல்ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டால் பி.சி.சி.ஐ.யின் நன்மதிப்பு மீது கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை நிர்வாகக்குழு கையாண்ட விதம் வேதனை அளிக்கிறது.

    நிர்வாக குழுவில் முதலில் 4 பேர் இருந்தனர். தற்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொழில்நுட்ப குழுவை (கங்குலி, தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன்) மீறி நிர்வாகக்குழு எடுக்கிறது.



    தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விதிகளை நிர்வாகக்குழு மாற்றி வருகிறது. பல்வேறு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட முடிவுகளை மாற்றி உள்ளனர்.

    பயிற்சியாளர் நியமனம் போன்ற நிர்வாக முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுகிறது. பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பி.சி.சி.ஐ. நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. நீண்ட நாட்கள் விளையாடியவன் என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டின் நிலை முக்கியமாகும். பாரம்பரிய மிக்க இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுக்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். #BCCI #Ganguly
    ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். #VVSLaxman #ShoaibMalik #AsiaCup
    ஐதராபாத்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் இந்தப்போட்டி நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் 4 அணிகளும் ஒன்றுடன் ஒன்று ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரு அணிகளும் மோதுகின்றன.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் சோயிப் மாலிக் முக்கிய பங்கு வகிப்பார். இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடுவார். இதனால் தான் அப்படி கூறுகிறேன். அவர் அனுபவம் வாய்ந்தவர். சுழற்பந்தை எதிர்கொள்வதில் சோயிப் மாலிக் சிறந்த பேட்ஸ்மேன். மிடில் ஓவரில் நன்றாக ஆடக்கூடியவர்.

    மேலும் பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்களான பகர் ஜமான், பாபர் ஆசம் ஆகியோரை அதிகமாக சார்ந்து இருக்கும்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சஹாலும், குல்தீப் யாதவும் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு வி.வி.எஸ். லட்சுமண் கூறியுள்ளார். #VVSLaxman #ShoaibMalik #AsiaCup
    இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் அணி வீரரான விவிஎஸ் லட்சுமணன், கடந்த 25 ஆண்டு கால இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் விவிஎஸ் லட்சுமண். இவர் கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு காலங்களில் விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்து 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியை வடிவமைத்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை இந்திய கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே அதாவது, கங்குலி தலைமையில் இருந்து இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாகத் தோல்வியை சந்திக்காமல் பயணித்து வந்த நிலையில், அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கங்குலி தலைமையிலான இந்திய அணிதான்.

    அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்துக்கும் இந்திய அணி முன்னேறியது. கங்குலி தலைமைக்குப்பின் வந்த தோனி தலைமையிலும், தற்போது விராட் கோலி தலைமையிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

    இந்த 25 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, விராட் கோலி, தோனி என எண்ணற்ற பேட்ஸ்மேன்கள், ஸ்ரீநாத், ஜாகீர்கான், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்கள் வந்து சென்றுள்ளனர். விவிஎஸ் லட்சுமண் இவர்களில் இருந்து சிறந்த 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளார்.



    இதில் வீரேந்திர சேவாக், முரளி விஜய் ஆகியோரைச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்துள்ளார். 3-வது வீரராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த வீரர் என்று அழைக்கப்படக்கூடியவர். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 13, ஆயிரத்து 288 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 52.31 ரன்களாகும்.

    4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் வழக்கம்போல் களமிறங்க லட்சுமண் ஆசைப்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்தவர். நடுவரிசையில் கங்குலி, விராட் கோலி, விக்கெட் கீப்பராக மகேந்திரசிங் தோனி ஆகிய சிறந்த வீரர்களை தேர்வுசெய்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரை மட்டுமே தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

    அணி வீரர்கள் விவரம்:-

    வீரேந்திர சேவாக், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி (கேப்டன்), எம்எஸ் டோனி, விராட் கோலி, அனில் கும்ப்ளே, புவனேஸ்வர் குமார், ஸ்ரீநாத், ஜாகீர்கான்.
    ×