search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Supreme Court"

    • ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்
    • வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 2023ல் இருந்தே அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மும்முரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    2021 ஜனவரி 6 அன்று, அப்போதைய அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபடும்படி தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கொலராடோ மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், தேர்தல் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19 அன்று உத்தரவிட்டிருந்தது.

    இதனால் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருந்ததுடன், அவருக்கு இது பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள், கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

    அதிபர் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்த கூடாது என்றும் மத்திய அரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராகவும் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதில் தடை ஏதுமில்லை எனும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள கணக்கில், "அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி" என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    • புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிந்தைய கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
    • டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்,

    டெக்சாஸ்:

    அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்திய 1973 ஆம் ஆண்டின் முக்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.

    இது தொடர்பாக கடந்த 24ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமெரிக்கா மாகாணங்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல், 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

    இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த தீர்ப்பு வந்த சில நாட்களுக்கு பின்பு டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது,

    எனினும் அந்த மாகாண ஒரு நீதிபதி, இந்த தீர்ப்பு மாநில அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி அடுத்த வாரம் சட்டத்தை தற்காலிகமாகத் தடுக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கர்ப்பமாகி ஆறு வாரங்கள் வரை கருக்கலைப்புகளை தற்காலிகமாக மீண்டும் தொடங்கலாம் என்று கடந்த செவ்வாயன்று ஹூஸ்டன் நீதிமன்ற நீதிபதி, அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கும் உத்தரவை டெக்சாஸ் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
    • நீதிமன்றம், அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 50 ஆண்டுகாலம் அமலில் உள்ள கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டப்பூர்வ உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. கருகலைப்பு நடைமுறையை அமெரிக்க மாகாணங்களே கட்டுப்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது தம்மை திகைக்க வைப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஒரு சோகமாக நாள் என்றும் தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பு இறுதியானதாக இருக்க கூடாது என்றும், கருக்கலைப்புக்கான உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், நீதிமன்றம் உண்மையில் அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

    முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்தார். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபரும் (49) இடம் பிடித்து இருந்தார்.



    அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் கடந்த 2-ந் தேதி டிரம்ப் நேர்காணல் நடத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் அவர் நேர்காணல் நடத்தினார்.

    இப்போது 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளதாக தேசிய பொது வானொலி செய்தி கூறுகிறது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமுல் தாபர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கான தேர்வில் வாய்ப்பை நழுவ விட்டிருப்பது இது 2-வது முறை ஆகும். ஆன்டனின் ஸ்கேலியா என்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி 2016-ம் ஆண்டு இறந்தபோது, முதல் கட்ட பரிசீலனை பெயரில் அமுல் தாபர் பெயர் இடம் பெற்றிருந்தது. அப்போது நீல் கோர்சச் என்பவரை டிரம்ப் நியமனம் செய்து விட்டார். #DonaldTrump #AmulThapar #Tamilnews 
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

    இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.



    இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

    மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

    அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்த நேர்முக தேர்வு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ந் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவுகூரத்தக்கது.   #DonaldTrump #AmulThapar #tamilnews
    குஜராத் அனல் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் புதா இஸ்மாயில் ஜாம் என்பவரது தலைமையில் குஜராத் விவசாயிகளும், மீனவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர். #USSupremeCourt #PowerPlant #Gujarat
    வாஷிங்டன்:

    குஜராத் மாநிலம், துண்டா கிராமத்தில் டாடா முந்த்ரா மின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு வாஷிங்டனில் அமைந்து உள்ள உலக வங்கியின் நிதிப்பிரிவான சர்வதேச நிதிக்கழகம் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரத்து 60 கோடி) நிதி உதவி அளித்து உள்ளது.

    இந்த அனல் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் புதா இஸ்மாயில் ஜாம் என்பவரது தலைமையில் குஜராத் விவசாயிகளும், மீனவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.

    அந்த வழக்கில், டாடா முந்த்ரா மின் உற்பத்தி ஆலையால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மின் உற்பத்தி ஆலையில், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல்தரம் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே பல்வேறு கோர்ட்டுகளை வழக்குதாரர்கள் நாடினர். ஆனால் அங்கெல்லாம் சர்வதேச நிதிக்கழகம், 1945-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள் விலக்கு உரிமை சட்டத்தின்கீழ், வழக்குகளில் இருந்து விலக்கு உரிமை பெற்று உள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.

    அதைத் தொடர்ந்தே இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை அந்த கோர்ட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுபற்றி அந்தக் கோர்ட்டு குறிப்பிடுகையில், 1945-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள் விலக்கு உரிமை சட்டத்தின்கீழ், சர்வதேச நிதிக்கழகம் வழக்கு தொடரப்படுவதில் இருந்து விலக்கு உரிமை பெற்று உள்ளதா என்பது ஆராயப்படும் என கூறியது.

    இந்த வழக்கின் மீது அக்டோபர் மாதம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.  #USSupremeCourt #PowerPlant #Gujarat
    ×