search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tower"

    • திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
    • ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கண்காணிப்பு கோபுரத்தில் குடிநீர், சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
    • காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் எல்லையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் மாவோயிஸ்டு அச்சுறுத்தல் உள்ள போலீஸ் நிலையங்களை சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் தேவர் சோலை அருகே வாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் வனவிலங்கு வேட்டை கும்பல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு கோபுரத்தில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி பணியாற்றும் வகையில் குடிநீர், சமையலறை மற்றும் சூரிய மின்சக்தியில் செயல்படும் வகையில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர் பகுதியில் பல மாதங்கள் தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

    இதனால் வாச்சிக்கொல்லி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதில் இரவு, பகலாக வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள் என்றனர்.

    • அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது
    • பொதுமக்கள் போராட்டத்தால் அதிகாரிகள் நடவடிக்கை

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதியின் மையப்பகுதியில் அமைக்கப்படும் இந்த செல்போன் கோபுரத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் சிறிது காலம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    • பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வைத்தார். செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார் .கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பொத்தனூர் பேரூராட்சியில் 2015 -2016 -ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ. 6.41 கோடியில் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பேரூராட்சி பங்கு தொகை ரூ. 1 கோடியில் பயன்படுத்தாத தொகை ரூ.35 லட்சத்தை தற்போது பொத்தனூர் பேரூராட்சி 9-வது வார்டில் உள்ள புதுத் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்ட அறிவுரைகளைத் தொடர்ந்து சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுபடி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ,சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பொதுநிதியில் மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி பெறுதல், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    வழிகாட்டு நிதிமுறைகளின்படி பேரூராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்காக கள ஆய்வு செய்து செயல் அலுவலரின் குறிப்பாணை பரிந்துரையுடன் அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்தனர். மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

    • ஆண்டாங்கோவிலில் உள்ள சிவகேசரி அம்பாள் சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் அப்பர் சாமிகளால் பாடல் பெற்ற தலம்.
    • கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத்தில் ஸ்ரீசிவகேசரி அம்பாள் சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற திருத்தலம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

    தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்துள்ளது. எனவே உடனடியாக கோவிலை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
    • இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).

    இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.

    ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    ×