search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist"

    • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

    • நண்டு உணவுக்கு 56 ஆயிரம் ரூபாய் பில் போட்டதால் அதிர்ச்சி
    • பேச்சுவார்த்தைக்கு பிறகு 6479 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது

    ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு (Crab Dish) பிரமாதமாக இருக்கும். அதன்விலை 20 டாலர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நண்டை அவர்களது மேஜையில் வைத்து இதை சமைக்க சொல்லலாமா? எனக் கேட்டுள்ளார். இவர்களும் ஓ.கே. சொல்லியுள்ளனர்.

    ஜுன்கோ தனது நண்பர்களுடன் நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார். அப்போது நண்டு உணவுக்கு 56 ஆயிரம் (680 டாலர்) பில் போட்டிருப்பதை கண்டு வாயடைத்துப் போனார். அவருடன் வந்தவர்களில் ஒருவர், ''ஓட்டலில் உள்ள அனைத்தையும் எங்களுக்காக சமைப்பார்கள் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. மற்ற ரெஸ்டாரன்ட்களில் அவற்றில் ஒரு பகுதியைத்தான் சமைப்பாளர்கள்'' என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்க, அவர்கள் 100 கிராம் நண்டு டிஷ் 20 டாலர். உங்களுக்கு 3,500 கிராம் நண்டு டிஷ் பரிமாறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. சப்ளை செய்த நபர் அவ்வாறு தெரிவிக்கவில்லையே, நாங்களும் மொத்தத்தையும் ஆர்டர் செய்யவில்லையே, என்று ஜுன்கோ தெரிவித்து, போலீஸை அழைக்க கேட்டுக்கொண்டார்.

    அதன்படி போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது ஜுன்கோ நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார். அதற்கு ரெஸ்டாரன்ட் தரப்பிலும், தங்களது சப்ளையர் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துரைத்தார் என்று விளக்கம் அளித்தனர்.

    இறுதியாக ரெஸ்டாரன்ட் 78 டாலர் (6,479 ரூபாய்) தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்பின் ஜுன்கோ மீதி பணத்தை செலுத்தினார்.

    • குன்னூர்-டால்பின்ஹவுஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல்
    • கேத்தரின் நீர்வீழ்ச்சி, அரிய வகை வனவிலங்குகளை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதனால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் குன்னூரில் இருந்து டால்பின் ஹவுஸ் செல்லும் சாலையில் தற்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஊட்டியில் தற்போது குவிந்து வருகின்றனர். அங்கு அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகின்றனர்.

    குறிப்பாக குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அங்கு அவர்கள் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    டால்பின்நோஸ் பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சியளிக்கும் கேத்தரின் நீர்வீழ்ச்சி, பழங்குடியினர் குடியிருப்பு, அரிய வகை வனவிலங்குகள் ஆகியவற்றை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

    குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் ஹோம் மேட் சாக்லேட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் ஆற்றில் மூழ்கி மாயமானார்.
    • அம்பை தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு மாதத்தில் 6 பேர் இறந்துள்ளனர்.

    சிங்கை:

    சங்கரன்கோவிலை சேர்ந்த தொழிலாளி கோமதிநாயகம் (வயது 40) என்பவர் தனது உறவினர்கள் சுமார் 40 பேருடன் நேற்று அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் திடீரென ஆற்றில் மூழ்கி மாயமானார்.

    இது குறித்து தகவலறிந்ததும் தீயணை ப்புத்துறையினர் விரைந்து சென்று நேற்று இரவு வரை அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணியை தொடங்கினர்.

    அப்போது கோமதி நாயகம் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய அம்பை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, அம்பை தாமிரபரணி ஆற்றில் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் இளம்பெண்கள், இளைஞர்கள் உள்பட கோமதிநாயகத்துடன் சேர்த்து 6 பேர் இறந்துள்ளனர். தாமிர பரணி ஆற்றுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.

    கொல்லிமலை:

    ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கொண்டை ஊசி வளைவு

    சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

    சிகிச்சை

    விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ

    சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.   

    • கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது
    • பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணி கள் வந்து செல்கிறார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் குடு ம்பத்துடன் வந்து தடுப்ப ணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை விடப்பட்டதால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து சென்றனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொடி வேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடுவதும், குறைவ துமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். நேற்று முன்தினம் சனக்கிழ மை பொதுமக்களின் கூட்டம் குறைந்த அளவே இருந்தனர். இதே போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்ப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காண ப்பட்டது.

    இதற்கிடையே கொடி வேரிக்கு வரும் பொதுமக்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதியில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்கள் பிளாஸ்க் பொருட்கள் எடுத்து செல் கிறார்களா? என்றும் மது மற்றும் தடை செய்ய்ப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா? என சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மேலும் போலீசார் சுற்றுலா பயணி கள் கொண்டு சென்ற பிளா ஸ்டிக் மற்றும் தடை செய்ய ப்பட்ட பொருட்களை பறி முதல் செய்த பிறகே அனு ப்பி வைத்தனர்.

    • அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.
    • அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.

    நீர் தேக்கத்தில் குளிப்பதற்கு, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து, எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். அணையில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்த விபரீதம் தெரியாமல், சுற்றுலாப்பயணிகள் அணையில் அத்துமீறுகின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி, ஆழமான பகுதியில் குளித்து வருகின்றனர். அதே போல் அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்.எச்சரிக்கை பலகை அருகிலேயே அத்துமீறி இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.

    பொதுப்பணித்துறையினர் கண்காணித்து, அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சம் பேரும், ஏப்ரல், மே என கோடை சீசனில் மொத்தம் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். பின்னல் பெரிய புல்வெளி மைதானத்தை குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்ற படி ஊட்டி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்தனர்.

    • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

    தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
    • சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், நீராறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை மற்றும் பாலாஜி கோவில் என அனைத்து பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்த தால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வால் பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மே மாத இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என சுற்றுலாத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல வசதியாக 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளில் தனியார் ரிசார்டுகளும் உள்ளன.

    இதில் பல தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-

    வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது. சுற்றுலாத்துறையிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். மே மாதம் இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.

    அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×