search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow"

    • சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் காலநிலை பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் குருவரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், கோனார்பாளையம், மூங்கில்பாளையம், ஜி.ஜி.நகர், குரும்பபாளையம்.

    இதேபோல் 30-ந் தேதி (சனிக்கிழமை) ஜர்த்தல் சித்த கவுண்டனூர், கண்ணாமூச்சி, பாப்பாத்திக்காட்டு புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் பொறுப்பு மா.பொன்னுவேல் தெரிவித்துள்ளார்.


    • மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

    மதுரை

    மதுரை முடக்குச் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே 1,190 மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

    இதில் தற்போது முடக்குச் சாலை சந்திப்பில் கான்கிரீட் பில்லர்களில் உத்திரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக முடக்குச் சாலை சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை போக்கு வரத்து ேபாலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு வழியாக வெளியூர் செல்லும் பஸ்கள், கனரக, இலகுரக வாக னங்கள், இருசக்கரம், ஆட்டோ, 4 சக்கர வாகனங்களுக்கு நாளை (25-ந்தேதி) முதல் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படு கிறது.

    அதன்படி மதுரை நகரில் இருந்து ேமற்கு நோக்கி செல்லும் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் முடக்குச்சாலை சந்திப்பில் உள்ள ஓட்டல் முன்பு பில்லர்-3, 4-க்கு இடையில் வலதுபுறமாக திரும்பி மேலக்கால் சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் சாலை வழியாக செல்ல வேண்டும்.

    மதுரை நகரில் இருந்து வெளியூர் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட அரசு நகர் பஸ்கள் (பஸ் ரூட் நம்பர்.21) மட்டும் காளவாசல் சந்திப்பு, சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ் காலனி பிரதான வீதி

    எச்.எம்.எஸ் காலனி சந்திப்பு, விராட்டி பத்து, அச்சம்பத்து வழியாக செல்ல வேண்டும்.

    நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து, விராட்டிபத்து, டோக் நகர், முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர லாம்.

    நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக பஸ்கள், கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி, பின்னர் துவரிமான், கோச்சடை, முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,

    பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை செயற்பொ றியாளர் வெங்க டேஸ்வரன் தெரி வித்துள்ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி மின்கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    நாகமலை புதுக்கோ ட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேல குயில்குடி, கீழமாத்தூர், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூர், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். இந்த தகவலை செயற்பொ றியாளர் வெங்க டேஸ்வரன் தெரி வித்துள்ளார்.

    • லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை காட்டேரிகுப்பம் ஒரு பகுதி, புது நகர், ராசன்குளம், லட்சுமி நகர், தேத்தாம்பாக்கம், மயிலம் பாதை, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    • புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற உள்ளது.
    • நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிமுதல் மதியம் 2 மணிவரை வம்பா கீரப்பாளையம், திப்புராயப்பேட்டை கோவிந்த சாலை, மற்றும் அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரையும், நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதுபோல் தொண்டமாநத்தம்- தேத்தாம்பாக்கம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு கிராமம் உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.

    • ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் குடிநீர் பிரிவு ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (23-ந் தேதி) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆரிய பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம் செல்கிறார்.
    • தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்குகிறார்.

    இதனைதொடர்ந்து திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்கிறார்.

    10-ந் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அவர் விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் மக்களிடையே பேசுகிறார். பின்னர் மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அவர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்வார்.

    இந்த தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.

    • மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.
    • பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர்:

    கடலூர் பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் நாளை (18 ந்தேதி) ஆய்வு கூட்டம் மற்றும் மீனவர்களிடையே உள்ள குறை கேட்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஏ.டி.ஜி.பி.சந்திப் மிட்டல் கலந்து கொண்டு ஆய்வு செய்து , மீனவர்களிடையே குறை களைக் கேட்டறிந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறார்.

    இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநி லத்திலிருந்து கடலோர காவல் படை அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், மீன்வளத்துறை அதிகாரி கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கிராமத்தில் அதன் முக்கியஸ்தர்கள் மற்றும் மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவ கிராமங்களில் நடைபெறும் பிரச்சினைகள், அவர்களுக்கான குறைகள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அதிகாரி கள் எடுத்துள்ள நட வடிக்கை களும் பொது மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு தொடர்பாக ஆய்வு நடை பெற உள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம், கீழக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருஉத்தரகோசமங்கை பீடரில் நாளை (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டினம்காத்தான், உச்சிப்புளி, பனைக்குளம், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டினம்காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான் குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர். எஸ். மடை, ஆதம் நகர், திருஉத்தரகோசமங்கை, களரி, வெள்ளா, வேளானூர், குளபதம், மோர்க் குளம், நல்லாங்குடி, எக்ககுடி, மேலச்சீத்தை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமண விழா நடக்கிறது.
    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி சோலைமலையான் வீட்டை சேர்ந்த சோ.கரு.துரைராஜ்-சுசீலா தம்பதியரின் இளைய மகனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர், தொழிலபதிபர் து.பாண்டித்துரையின் சகோதரருமான சோ.கரு.து.கார்த்திகேயன் மணமகனுக்கும், பள்ளத்தூர் கோடியான் வீடு கோ.வெ.சபாரெத்தினம்-சாந்தி தம்பதியரின் மகளுமான ச.தாரணி மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செய லாளர்கள் அ.பி.முருகா னந்தம், ராம சீனிவாசன், எம்.முருகானந்தம், பொன்.வி.பாலகணபதி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    திருமண விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரும ணத்திற்கான ஏற்பாடுகளை து.பாண்டித்துரை, கோட்டையூர் பேரூராட்சி கவன்சிலர் பா.திவ்யா தம்பதியினர் மற்றும் பள்ளத்தூர் சபா ரெத்தினம்-சாந்தி தம்பதி யினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×