search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupti"

    • நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.
    • இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.

    வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி.
    • வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
    • 2-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார்.

    அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட சேவை, 2-ந் தேதி தங்க தேரோட்டம், 4-ந்தேதி தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளே நடந்தது.

    மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

    இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கருட சேவை புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கருட சேவை அன்று பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அரசு பஸ்களில் திருமலைக்கு வரலாம்.

    கருட சேவைக்கு முன்தினமும், கருட சேவை அன்றும் கருட சேவைக்கு மறுநாளும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. மற்ற நாட்களில் 50 சதவீத அறைகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேலரியில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவ கவுண்டர்கள் அமைத்து 3 வேளை உணவு, குடிநீர், மோர் ஆகியவை விநியோகம் செய்யப்படும்.

    திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்ணாடி அல்லது தாமிரம் அல்லது ஸ்டீல் குடிநீர் பாட்டில்களை கொண்டுவர வேண்டும்.

    இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் 9 நாட்களும் திருமலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தி சேனல் மூலம் அனைத்து வாகன சேவைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பதியில் தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
    • பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் வார விடுமுறை இறுதிநாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஓரளவு பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.

    பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் வைகுண்டம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பி பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயலும் போது அடிக்கடி பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூடுதல் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் சார்பில் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    பக்தர்களுக்கு அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி ஏழுமலையானை தரிசித்து செல்ல முடியும் என்றனர்.

    திருப்பதியில் நேற்று 87,698 பேர் தரிசனம் செய்தனர். 48,804 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

    கடந்த வாரம் வரலாறு காணாத அளவிற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் சாமானிய பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

    பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×