search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ThiruVilakku"

    • சோழவந்தான் அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
    • பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி வைகையாற்று கரையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் நேற்று கோவில் பூசாரி ராமசாமி தலைமையில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

    இரவு 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் கமிட்டினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே! ஜோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே!
    • அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா! வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா!

    வீட்டில் தீபம் ஏற்றி வணங்கும் பெண்கள் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு கீழ்க்காணும் பாடல் வரிகளை, படிக்கவேண்டும். மகாலட்சுமியின் அருள் பூரணமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒரு மலராகத் தூவி வழிபடலாம்.

    அகவல்

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே!

    ஜோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே!

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே!

    காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே!

    பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு

    குளம்போல எண்ணெய்விட்டுக் கோலமுடன் ஏற்றிவைத்தேன்;

    ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளங்க

    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான்விளங்க

    மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்

    தரணியிலே ஜோதியுள்ள தாயாரைக் கண்டுவந்தேன்

    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!

    சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!

    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா!

    பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா!

    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!

    புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா!

    அல்லும்பகலுமென்றன் அண்டையிலே நில்லுமம்மா!

    சேவித் தொழுந்திருந்தேன்; தேவி வடிவம்கண்டேன்

    வச்சிரக் கிரீடங்கண்டேன்; வைடூர்ய மேனி கண்டேன்

    முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சை மாலை கண்டேன்

    சவுரி முடிகண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்

    பின்னழகு கண்டேன்; பிறைபோல நெற்றி கண்டேன்

    சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவங்கண்டேன்

    குறுக்கிடும் நெற்றிகண்டேன்; கோவைக்கனி வாயும் கண்டேன்

    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுங் கண்டேன்

    மார்பில் பதக்கம் மின்ன மாலையனசயக் கண்டேன்

    கைவளையல் கலகலஎனக் கணையாழி மின்னக் கண்டேன்

    தங்க ஒட்டியாணம் தகதகஎன ஜொலிக்கக் கண்டேன்

    காலில் சிலம்புகண்டேன்; காலணி பீலி கண்டேன்

    மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்

    அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா!

    வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா!

    தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

    மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.

    இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் பதினாறு தடவை கும்பிட வேண்டும். அதன்பின்னர் தீப லட்சுமியிடமிருந்து வேண்டிய வரங்களைத் தந்தருளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

    • பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு 31-ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    அந்தியூர் பிராமணர்கள் சங்கம் சார்பில் ஓம் சக்தி என்ற 108 பிரணவ தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினி தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    • கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு அம்மனுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக மும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பூச்சொரிதல் விழா அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை பால்குடம், காவடி, அக்னி சட்டி, இரவு முளைப்பாரி அம்மன் கோவில் வந்தடை கிறது. மறுநாள் (புதன்கிழமை) காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    முளைப்பாரி திருவிழா பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல் மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.

    • தேவகோட்டை புவனேசுவரி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.
    • வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.

    தேவகோட்டை

    தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள புவனேசுவரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வழிபாடு செய்தனர். அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.

    • காளையார்கோவில் அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிரமம் கிராமத்தில் பழமையான கொங்கேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இங்குள்ள ஏழுமுக காளியம்மன் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமி அன்று உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்த ஆண்டு நாடு தனது 75-வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாட உள்ள நிலையில் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நல்லுறவை பேணி வாழவும் உலக நண்மை வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

    • சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

    சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • தொண்டி அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
    • இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக அமைதிக்காகவும், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நிறுவன தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது.

    சாராதா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுந்தரி விளக்கு பூஜையை தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவிகள் மந்திரங்கள் ஓதினர்.பா.ஜ.க.மாவட்ட தலைவர் கதிரவன், மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டி, இந்து ஜனநாயகப் பேரவை நிறுவன தலைவர் அண்ணாத்துரை, மணிகண்ட குருக்கள், முன்னிலை வகித்தனர்.

    பாகம்பிரியாள் அம்மன் கோவில் முன்பு நடந்த இந்த திருவிளக்கு வழிபாட்டில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
    • கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பாரதி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்யப்பட்டு, பாதபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    பெண்கள் பக்தி பாடல்கள் பாடியவாறும், கும்மியடித்து ஆடியவாறும் கன்னிமார் சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×