search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruthani Murugan temple"

    • மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

    தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் அமைந்துள்ளது. விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    • 2-ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரமோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அந்த வகையில், இந்த ஆண்டின் சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் விநாயகர் உலாவுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மரதேர் திருவிழா அடுத்த மாதம் 1-ம் தேதியும், 2-ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 4-ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.

    திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மாசி மாத பருவ காலத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி செடி, கொடிகள், புல், பூண்டுகளுக்கு அருளாசி வழங்குவதும், தவனக்கொழுந்து எனப்படும் மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.

    அவ்வகையில் இந்தாண்டு மாசி மாத தவன உற்சவம் நேற்று முருகன் கோவில் வெகு விமரிசையாக தொடங்கியது. சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பிறகு வள்ளி தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தவன உற்சவத்தையொட்டி கோவில் முழுவதும் கண்னை கவரும் வகையில் வண்ண வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது.
    • தினமும் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து இன்று 10-வது நாள் விழாவாக முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. அ காலை 4.30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.
    • கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

    அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

    சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர், கேடயம் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற சேவா கட்டணம் செலுத்துவது வழக்கம்.

    அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் கடந்த, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.

    அரசு வழிகாட்டுதலுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இருமுறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் மட்டும் செலுத்தி வந்தனர்.

    தற்போது கோவில் நிர்வாகம் கியூ ஆர்கோடு ஸ்கேன் மூலம் நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மலைக்கோவிலில், தேர்வீதியில் நான்கு இடங்களில் கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

    இனிவரும் நாட்களில் பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலம் கியூ ஆர்கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள். நன்கொடைகள் செலுத்தலாம். இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் ஆன்லைன் மூலம் தரிசனம் டிக்கெட் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
    • பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    முருகன்கோவில்களில் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது.

    சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

    ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போதும், கோவில் நடை திறந்து பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி முருகன் கோவிலில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    கிரகணத்தை யொட்டி, பரிகார பூஜைகள் முன் கூட்டியே நடத்தப்படுவதால் சூரிய, சந்திர கிரகணத்தின் போது, நடை அடைக்கப்படுவதில்லை என்று கோவில் நிா்வாகத்தினர் தெரிவித்தனர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய ‌‌வீரராகவ பெருமாள் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிற்பகல் 12 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    பின்னர் மீண்டும் நாளை (9-ந்தேதி) காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது.
    • வாருங்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

    உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சூரசம்ஹாரம் நடைபெறுவது முக்கிய நிகழ்வு. ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது. வாருங்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

    தேவர்களையும் முனிவர்களையும் சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் கொடுமைப்படுத்தினான். ஈசனிடம் பல அற்புத வரங்களை பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. ஈசன் தன் நெற்றிக்கண் சுடர் மூலம் முருகனை அவதரிக்க செய்து சூரபத்மனின் அழிவிற்கு வித்திட்டார்.

    சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் சீற்றம் முழுவதும் தணிந்த பின் அமர்ந்த மலையே திருத்தணி என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் மற்ற கோவிலில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றாலும் இங்கு முருகனின் சீற்றத்தை தணிக்க புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.

    சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோவில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. தேவர்களின் துயர் துடைத்ததோடு அடியவர்களின் கவலையையும், துன்பத்தையும் தணிக்கும் தலம் இது என்பதால் திருத்தணி என்று பெயர் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது.

    திருத்தணி மலை நோக்கி சென்றாலோ, திருத்தணி முருகனை நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வாங்கினாலோ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்கிறது தணிகை புராணம்.

    • கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது.
    • திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் மூலவர் முருகப்பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 30-ந்தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழா நடை பெறும் நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தேவாரபாராயணம் நடைபெறுகிறது.

    • மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

    திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார்களில் படையெடுத்து வந்ததால் திருத்தணி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மங்கல பொருட்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.
    • பட்டு வஸ்திரங்கள், மங்கல பொருட்களை திருத்தணி கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகையான நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி திருத்தணியில் நடந்தது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சகிதமாக வந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு, பழம், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்களை மூங்கில் தட்டுகளில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.

    பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை திருத்தணி முருகன் கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார். அந்தப் பட்டு வஸ்திரங்கள் உற்சவர்களான வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசாமிக்கு அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அறங்காவலர் குழு தலைவரும், அவருடைய மனைவியும் மூலவர் மற்றும் உற்சவர்களை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருத்தணி முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தனர். முன்னதாக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

    • உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.
    • 20 நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 73 லட்சத்து 63 ஆயிரத்து 674 வருவாயாக கிடைத்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன்கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வைகாசி விசாகம், கிருத்திகை மற்றும் முகூர்த்த காலங்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது.

    பக்தர்களின் காணிக்கையால் கோவிலில் இருந்த உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.

    கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா தலைமையில் உண்டியல் எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இதில் 20 நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 73 லட்சத்து 63 ஆயிரத்து 674 வருவாயாக கிடைத்தது.

    மேலும் தங்கம் 3/4 கிலோ தங்கம், வெள்ளி 5கிேலாபும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×