search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Collector"

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மஞ்சள் வளாகத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் மற்றும் வில்லரசம்பட்டி ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில்,

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது 15200 மெ.டன் அளவுள்ள 5 கிட்டங்கிகள், 2 பரிவர்த்தனைக்கூடங்கள், 1 சூரிய உலர்களம் மற்றும் 4 உலர்களங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையான அளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகள் பார்வையி டப்பட்டது. யு.எம்.பி. மென்பொருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் முறை பார்வையிடப்பட்டது.

    விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் மறைமுக மஞ்சள் ஏலம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள 10000 மெ.டன் ஊறுர் கிட்டங்கியில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள மஞ்சள் மூட்டைகள் பார்வையிடப்பட்டது.

    யு.எம்.பி. மென்பாருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பார்வையிடப்பட்டன.

    மேலும் விற்பனைக்கூட வளாகத்தினுள் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைத்திட அறிவுறுத்தப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தினுள் உள்ள அக்மார்க் ஆய்வகம் பார்வையிடப்பட்டு அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கிடும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை தொகை ரூ.4249 லட்சம் மதிப்புள்ள 5761 மெ.டன் மஞ்சள் விளைபெருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 2440 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மஞ்சள் வளாகத்தில் ஏலத்தி ற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.

    மேலும் ஆல்பா சாப்ட்வோ மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடப்பட்டது.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை ரூ.131.27 கோடி மதிப்புள்ள 20830மெ.டன் மஞ்சள் விளைபொருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 25,945 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    இந்த ஆய்வின்போது, செயலாளர், துணை இயக்குநர் ஈரோடு விற்பனைக்குழு சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சுரேஸ், மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 75-வது சுதந்திரதினவிழாவையொட்டி ஈரோட்டில் கலெக்டர் தேசியகொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாலமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் ஆரஞ்ச், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண பலூனை பறக்க விட்டார். பின்னர் கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 பேர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 பேர், துணை இயக்குனர் குடும்ப நலப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றி 15 பேர், இணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 313 பேருக்கு

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்ரமணியம், ஏ.டி.எஸ்.பிக்கள் கனகேஸ்வரி, ஜானகிராமன், டவுன் டி. எஸ்.பி ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ×