search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher attack"

    • ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த பூதேரி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி பெண் ஆசிரியையை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் அத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 22) என்பவர் ஆபாசமாக பேசி உள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை தனது மகனுடன் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தகராறு முற்றி ஆசிரியை மற்றும் அவரது மகனை ராமகிருஷ் ணன் சரமாரியாக தாக்கி உள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் உடலில் காயம் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஜித்தின் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் ஏன் குழந்தையை அடித்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • அப்போது ஆசிரியைக்கும் ஜித்தினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ரேபள்ளியில் அரசு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மணி குமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவரது 8 வயது மகள் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுமி படிக்கும் 3-ம் வகுப்பிற்கு சுஜாதா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமி சரிவர படிக்காததால் சுஜாதா சிறுமியை பிரம்பால் அடித்து உள்ளார். இதனால் சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் தந்தையும் அதே பள்ளியில் வேலை செய்து வருவதால் அவர்கள் சிறுமியை சமாதானம் செய்தனர்.

    இருப்பினும் சிறுமி அவரது தாய் மாமாவான ஜித்தினிடம் தெரிவித்தார். மாணவியின் உடலில் காயம் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஜித்தின் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் ஏன் குழந்தையை அடித்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆசிரியைக்கும் ஜித்தினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜித்தின் ஆசிரியை மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த மற்றொரு ஆசிரியர் மற்றும் காவலாளி மீதும் தாக்குதல் நடத்தினார். கல்விசி தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜித்தின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனைக் கண்ட மற்ற ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு ரேபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரே பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரிய நாராயணா வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜித்தினை தேடி வருகின்றனர்.

    வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை சம்பவத்தில் பள்ளி ஆசிரியரை அடித்து உதைத்த மாணவனின் உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பொய்கை சத்தியமங்கலம் புது காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண் பிரசாத் (வயது 16). பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்துவந்தார். கடந்த 3-ந் தேதி மாணவன் அருண்பிரசாத் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தற்கொலைக்கு முன்பாக மாணவன் எழுதியதாக கடிதம் ஒன்று பெற்றோருக்கு கிடைத்தது. அதில் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.

    இதையடுத்து மாணவன் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த முதுநிலை ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் ஆசிரியர் நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியரை தாக்கிய மாணவன் உறவினர்களான கோவிந்தசாமி, ரஜினி என்கிற போஸ், முத்தமிழ்வாணன், குமார், ரகு ஆகிய 5 பேர் மீது விரிஞ்சிபுரம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை சம்பவத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அப்துல்லாபுரம் சத்தியமங்கலம் புதிய காலனியை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் அருண்பிரசாத் (வயது17). பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன் அருண்பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மாணவனின் பெற்றோர் அவனது புத்தக பையை சோதனையிட்டனர். அதில் மாணவன் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் “எனது சாவுக்கு கணிதம், வேதியியல், உடற்கல்வி ஆசிரியர்கள் தான் காரணம்” எனக்கூறி 3 ஆசிரியர்களின் பெயர்களை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

    கடிதத்தை எடுத்து கொண்டு மாணவனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியில் திரண்டனர். அப்போது பள்ளி வளாகத்தில் நின்றிருந்த கணித ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் ஒரு ஆசிரியரை அறையில் தள்ளி பூட்டினர்.

    தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியர் கண்ணப்பனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாணவனின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×