search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tata punch"

    • தேர்ந்தெடுத்த ஊழியர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பணியாற்றுகிறார்கள்
    • என் பணியாளர்கள் எனக்கு ஊழியர்கள் அல்ல; நட்சத்திரங்கள் என்றார் பாடியா

    அரியானாவின் பஞ்ச்குலா (Panchkula) நகரில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம், மிட்ஸ்கார்ட் (MitsKart). அதன் நிறுவனர் எம்.கே. பாடியா (M.K. Bhatiya).

    தீபாவளி நெருங்கும் நேரத்தில் தனது ஊழியர்களுக்கு சிறப்பாக பரிசளித்து அவர்களை மகிழ்விக்க நினைத்தார் பாடியா. இதற்காக பணியாளர்களில் 12 பேரை தேர்வு செய்தார். அதில் 3 வருடங்களுக்கு முன் "ஆஃபீஸ் பாய்" (office boy) எனப்படும் கடைநிலை ஊழியராக சேர்ந்தவரும் ஒருவர். நிறுவனத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இவர்கள் அனைவரும் பாடியாவின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இவர்களை மகிழ்விக்க நினைத்த பாடியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் டாடா பன்ச் (Tata Punch) காரை பரிசளித்தார். இந்த டாடா பன்ச் காரின் ஆரம்ப மாடலின் விலை ரூ.6.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



    "என்னை பொறுத்தவரை என் பணியாளர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல; அவர்கள்தான் நிறுவனத்தின் நட்சத்திரங்கள். கடுமையாக உழைத்து, நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவுகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம்" என அவர்களுக்கு பரிசளிப்பது குறித்து பாடியா கூறினார்.

    பாடியா பரிசாக காரை வழங்கும் வீடீயோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
    • டாடா நிறுவன கார்களில், CNG கிட் பெறும் நான்காவது மாடல் இது ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்கள் வரிசையில் CNG கிட் பெறும் நான்காவது கார் மாடலாக பன்ச் மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    அல்ட்ரோஸ் CNG மாடலில் உள்ளதை போன்றே புதிய பன்ச் CNG மாடலிலும் டூயல் சிலின்டர் செட்டப் வழங்கப்படுகிறது. இது காரின் பூட் பகுதியை அதிகளவில் ஆக்கிரமிக்காது. புதிய பன்ச் CNG மாடலிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     

    இந்த என்ஜின் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பன்ச் CNG வேரியன்டை நேரடியாக CNG மோடிலும் ஸ்டார்ட் செய்ய முடியும். பல்வேறு CNG கார்களிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காரின் வெளிப்புறம் i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றும் மேற்கொள்ளப்படலில்லை.

    புதிய பன்ச் CNG மாடலின் உள்புறம் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 16 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை 0.55 சதவீதம் வரை உயர்த்துவதாக இந்த மாத துவக்கத்தில் அறிவித்து இருந்தது. விலை உயர்வு ஜூலை 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அப்போது கார் மாடல்கள் விலை அதிகபட்சமாக ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    இந்த வரிசையில், தற்போது டாடா நெக்சான் விலை ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதே போன்று டாடா சபாரி மாடலின் விலை ரூ. 15 ஆயிரமும், அல்ட்ரோஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. டாடா பன்ச் மற்றும் டாடா ஹேரியர் மாடலின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.


    டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலே தற்போது நெக்சான் EV பிரைம் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி சலுகைகள் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எளிய மாத தவணையில் கார் வாங்கிக் கொள்ள முடியும்.

    ×