search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tank"

    • அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
    • நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த நாகூர் காரைக்கால் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் வாகனத்தின் ஒளியை சத்தத்தை கேட்டு மிரண்ட பசுமாடு ஒன்று நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பா ராத விதமாக விழுந்தது.

    தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது.

    உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

    • பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
    • நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாச்சிகுளம் கிராமத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.

    அவரிடம் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக நாச்சிகுளம் பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வில்லை.

    இதனால் நாச்சிகுளம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இந்நிலையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, கிராமமக்கள் நலனை கருத்தில் கொண்டு நாச்சிக்குளம் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் அருகே இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிைய சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது, மதுைர ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    திருவாடானை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டு களுக்கு முன்பு 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த நீர் தேக்க தொட்டி தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    அதன் தூண்களில் உள்ள கம்பிகள் பலமிழந்து வெளியே தெரிகின்றது.இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் எதிரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகமாக சென்று வரும் பகுதி என்பதால் நீர்நிலை தொட்டி இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகவே இதனை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அரசு தரப்பில் அளித்த பதிலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. அதனால் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீர்நிலை தொட்டியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அதனை 6 மாதத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் தொட்டியில் இறங்கி பார்வதி யானை உற்சாக குளியல் போட்டது.
    • இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் பார்வதி என்ற பெண் யானை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு பார்வதி யானைக்கு கண்களில் வெண்புரை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை குறைபாடு உருவானது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதன் விளைவாக கண்புரை நோய் முற்றிலும் குணமாகி, பழைய நிலைக்கு வந்தது. மேலும் பார்வதி யானைக்கு மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி தரப்பட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானை நீச்சல் அடித்து குளிக்க வசதியாக, குளியல் தொட்டி (தெப்பம்) கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் வளா கத்தில் யானை தெப்பம் கட்டப்பட்டது.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது பார்வதி யானைக்காக கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள யானை தெப்பம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் பார்வதி யானையை அழைத்து வந்தனர்.

    தண்ணீரைப் பார்த்ததும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது. தொட்டியில் இறங்கிய பார்வதி யானை உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி உற்சாக குளியல் போட்டது. இது பார்வை யாளர்களை கவர்ந்தது.

    • தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி, தேவங்குடியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

    இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் வருகிறது.

    இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

    இந்த தொட்டியின் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்கள் காய்ச்சல் விவரங்களை சேகரித்தினர்.
    • தொட்டிகளில் குளோரினேஷன் செய்து சுத்தம் செய்து தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி டாக்டர்.நமசிவாயம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அறிவுறுத்தல் படியும் வட்டார மருத்துவர் டாக்டர் மு.அகிலன் தலைமையில் வல்லம் வட்டார மருத்துவ பணியாளர்கள் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யா ணசுந்தரம் மற்றும் செயல் அலுவலர் பிரகந்தநாயகி மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் "ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு பணிகள்" விரிவாக செயல்படுத்தப்பட்டது.

    வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வல்ல வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் பேரூராட்சி அலுவலகமும் இணைந்து சுமார் 150 பணியாளர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    வீதி வீதியாக ஒவ்வொரு வீடு வீடாக 24 கிராம சுகாதாரசெவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ தன் ஆர்வலர்கள் காய்ச்சல் விவரங்களை சேகரித்தினர்.

    40 களப்பணியாளர்கள் 30 தூய்மை பணியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் வீடு விடாக சென்று ஆய்வு செய்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்களை கண்டறிந்து அழித்தனர்.

    தண்ணீர் தேங்கும் கொட்டாங்குச்சி பிளாஸ்டிக் பெட்டிகள் தண்ணீர் தொட்டிகள் மூடி இல்லாத பாட்டில்கள் டயர்கள் போன்றவற்றை கண்டறிந்து அகற்றினர்.

    வீட்டிற்குள் இருக்கும் ப்ரிட்ஜ் போன்றவற்றில் கொசு உற்பத்தியாகும் பகுதிகளில் கொசுப்புழுக்கள் கண்ட றிந்து சுத்தப்படுத்தினர்.

    பொது மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை சேமிக்கும் மேல் தொட்டிகள் போன்றவற்றில் குளோ ரினேஷன் செய்துசுத்தம் செய்து தண்ணீர் பொதும க்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. வடக்கு செட்டி தெரு, மூப்பனார் தெரு, அண்ணா நகர், ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து ராட்சச புகை மருந்து அடிப்பான் மூலம் அடிக்கப்பட்டது.

    வல்லம் பெரியார் பல்கலை கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அம்மாண வர்களும் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த ப்பட்டனர்.

    வல்லம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, வல்லம் சமுதாய செவிலிய ர்ரேணுகா, வல்லம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ், வல்லம் சுகாதார ஆய்வாளர் அகேஸ்வரன், பெரியார் பல்கலை நாட்டு நலப்பணி த்திட்ட அலுவலர் நரேந்தி ரன் மற்றும் வல்லம் வட்டார அனைத்து மருத்துவ பணியாளர்கள், தன்னா ர்வலர்கள் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது-டாக்டர்.மு.அகிலன், வட்டார மருத்துவ அலுவலர்-வல்லம், தஞ்சாவூர்.

    • புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
    • முதல்-அமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    திருமருகல் ஒன்றியம் கொ த்தமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடத்தினையும், 15 நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அறைக்கும் ஆலையினையும், ஏனங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    முதல மைச்சர் பொதுமக்களின் நலனை கருதி இலவச பஸ் பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி போன்ற பல்வேறு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

    அதனைத் தொடர்ந்து கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும், நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியும், 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளையும் வழங்கியுள்ளார்.

    மேலும் மாணவர்களின் நலன் கருதி நேற்றைய தினம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    நம் முதலமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பொதுமக்கள் அனைவரும் அவ்வாறு அறிவிக்கும் திட்டங்களை பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
    • மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது இதனை அடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி மாநில பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் காரை க்கால் பகுதியைச் சுற்றியுள்ள தமிழக எல்லையோர கிராமங்களில் நோய் பரவல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அந்த வகையில் காரைக்கால் மாவட்ட எல்லை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உள்ள திருக்கடையூரில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

    அவர் கூறுகையில் காரைக்காலில் காலரா பரவி வருவதால் காரைக்காலை சுற்றியுள்ள நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடி க்கை குறித்து அமைச்சர் மற்றும் துணை செயலாளர் அறிவுரைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். எல்லையோரம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நீரேற்று நிலையங்களிலும் ஆய்வு செய்துள்ளேன். மேலும் மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    மேலும் காரைக்காலை சுற்றியுள்ள மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நம்மிடம் போதிய மருந்து கையிருப்பு வார்டு வசதிகள் உள்ளன. காரைக்காலில் பணிபுரிபவர்கள் தமிழக பகுதியில் இருந்தால் அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் சோதனைகள் மேற்கொண்டுள்ளோம்.

    நடமாடும் மருத்துவக் குழு மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எட்டு பிளாக்குகளிலும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர கிராமங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்து தேவை இருப்பின் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    ×