search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu fishermen"

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி,பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

    ஆகஸ்ட் 20-ந் தேதி அதே வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்திய மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை நடத்துவது 6-வது முறையாக நடந்திருக்கிறது.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.

    இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை ராணுவம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு  நடத்தியுள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் ஆரோக்கிய ராஜ், விவேக், இளஞ்செழியன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
    மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேரை கடலோர காவல் படை விரைந்து சென்று மீட்டது. #TNFishermen #FishermenStranded #CoastGaurd
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர், விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது நடுக்கடலில் படகு பழுதடைந்தது. என்ஜின் அறையில் அதிக அளவு கடல் நீர் புகுந்ததால் மேற்கொண்டு படகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி கடலோர காவல் படைக்கு இன்று அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களை மீட்பதற்காக விரைந்தனர்.



    சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கடலோர காவல் படையினர் மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். #TNFishermen #FishermenStranded #CoastGaurd
    ×