search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu govt"

    • வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
    • கல்வித்துறையில் 1,847 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    துறைவாரியாக பணி நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.

    நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது. 

    அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இளைஞர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது.

    இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • ரூ.5.92 கோடியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உத்தரவு.
    • தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும்.

    அம்மோனியா வாயுக்கசிவு விவகாரத்தில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி," மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும்.

    ரூ.5.92 கோடியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாசு கட்டுபாடு வாரியம் நிபந்தனைகளை செயல்படுத்தாக தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலுக்கு அடியில் புதிய குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். குழாய்க்கு அருகில் அம்மோனியா சென்சார்கள் அமைக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் குழாயில் சேதம் ஏற்பட்டு அம்மோனியா கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

    தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும்.

    அரசின் தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும்.

    உடுமலை:

    தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.

    முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரிகளை பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன், ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாத புள்ளி விவர கணக்கின்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்பட்டுள்ளது.

    கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
    • 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

    மிச்சாங் புயல் வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். 6 ஆயிரம் பேருக்கு காய்ச்சல், 70 ஆயிரம் பேருக்கு சளி, இருமல் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அக்டோபர் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மழைக்கால காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் வருகிற 16, 23 மற்றும் 30-ந் தேதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள்.
    • தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சமீபகாலமாக இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வழக்கமான சென்னையில் உள்ள மயானங்களில் ஒரு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு 14 ஆண்டுகள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து அதில் மற்றொரு உடலை மறு அடக்கம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    மேலும் பலர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள். இதுபோன்ற நடை முறைகளால் இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் புதைக்க இடப்பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு செய்துள்ளது. ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு மற்றொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நடைமுறையை அமல்படுத்திய பிறகு இன்னும் ஒரு வருடம் கழித்து பெரிதாக கட்டப்பட்டு இருக்கும் கல்லறையை சுற்றி கட்டியுள்ள இடங்களை சிறியதாக மாற்றவும் அவர்களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மயானங்களில் அதிக இடவசதி கிடைக்கும், இறந்தவர்களின் உடல்களை எந்தவித சிரமமும் இல்லாமல் அடக்கம் செய்யலாம் என்று கருதப்படுகிறது.


    இது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது வெளிநாடுகளில் உள்ள கல்லறைகளை போல கட்டிடக்கலையுடன் கூடிய கல்லறைகளுக்கு கவுன்சிலர்கள் இடவசதி கோரி வருகின்றனர். ஆனால் சென்னையில் 208 மயானங்கள் உள்ள நிலையில் அதில் பெரும்பாலான மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்பதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மயானத்தில் மறு அடக்கம் செய்வது 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறையும். கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு வருடத்திலேயே மறு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த நடைமுறை சென்னையிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

    இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

     

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

    பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-

    படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

    மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

    ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.

    சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
    • மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.

    குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.

    மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.

    தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    • ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் பொது விடுமுறை.
    • 2024ம் ஆண்டு தீபாவளி அக்போபர் 31ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டுக்கான அரசு பொது விமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறையில் தமிழ்ப் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி ஆகிய 2 விடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளிலும், 5 விடுமுறை திங்கட் கிழமைகளிலும், 3 விடுமுறை வெள்ளிக் கிழமைகளிலும் வருகின்றன.

    மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் பொது விடுமுறையும், ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு தீபாவளி அக்போபர் 31ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. 

    • பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
    • மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.

    இதனை ஏற்று கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.09 அடியாக பதிவாகியது. 1,760 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வினாடிக்கு 220 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 54 சதவீதம் மட்டும் நிரம்பி உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 70 சதவீதமாக உள்ளது. எனவே குடிநீர் ஏரிகளில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தம் 6,866 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது(மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மி.கன அடி ஆகும். சென்னை யின் குடிநீர் தேவைக்காக தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை வருகிற நவம்பர், டிசம்பர் மாதம் தீவிரம் அடையும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை குடிநீரை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்யும் வகையில் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற தமிழக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 220 கன அடி மட்டுமே வருகிறது. கடந்த வாரத்தில் தண்ணீர் வரத்து 100 கனஅடிக்கும் கீழ் குறைந்தது. ஆந்திர விவசாயிகள் தங்களது விவசாயத்துக்கு அதிக அளவு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி காவல் ஆணையர் சத்யப்பிரியா, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.

    காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜீவ் குமார், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி காவல் ஆணையராக காமினி, மதுரை காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
    • நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது.

    சென்னையின் முக்கியமான அடையாளமான ஒன்று அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையில் உள்ள இந்த மேம்பாலத்தின் அருகில் 1976-ம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது. அதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த மேம்பாலம் அழைக்கப்படுகிறது.

    அண்ணா மேம்பாலம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. 1971-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24 லட்சத்தை கடந்தது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியது. சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

    குறிப்பாக அண்ணா சாலையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை- உத்தமர் காந்தி சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை சந்திப்பு பகுதியில் 1970-ம் ஆண்டுகளில் தினமும் 12 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதன் விளைவாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். 1971-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கின. 1,500 டன் எக்கு, 3,500 டன் சிமெண்ட் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் மேம்பாலம் இதுவாகும். மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களை தொடர்ந்து இந்தியாவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம் இதுவாகும். அதே நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது. இந்த மேம்பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த பாலத்தை கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.66 லட்சம் ஆகும்.

    இந்த மேம்பாலத்தை 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதற்கு 'அண்ணா மேம்பாலம்' என்றும் பெயர் சூட்டினார். மேம்பாலத்தின் அடியில் அண்ணா புத்தகம் வாசிப்பது போன்ற சிலையும் நிறுவப்பட்டது.

    பெரியார் மறைவுக்கு பிறகு 1974-ம் ஆண்டு அவரது பிறந்த நாளின் போது மேம்பால பகுதியில் அவரது சிலையை நிறுவ அப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். கோரிக்கை வைத்தார். அதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்தார். சென்னையில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பால பகுதியில் 2 பக்கங்களில் நிறுவப்பட்டன.

    இந்நிலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு நாளை (சனிக்கிழமை) 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆனாலும் இன்று வரை கம்பீரமாக காட்சியளிப்பதுடன், சென்னையின் அடையாளமாகவும் தொடர்ந்து திகழ்கிறது. சென்னை தற்போது மேம்பாலங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முதன் முதலில் வித்திட்டது அண்ணா மேம்பாலம் தான். அண்ணா மேம்பால சந்திப்பில் இன்று 3 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த மேம்பாலம் தற்போது ரூ.8.85 கோடி செலவில் சீரமைத்து வலுப்படுத்தப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிகள் விரைவில் முடிந்து விடும். அதன் பிறகு அண்ணா மேம்பாலம் சென்னையின் அடையாளமாக தொடர்ந்து புதுப்பொலிடன் காட்சியளிக்கும்.

    ×