search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tambaram accident"

    • மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும்.
    • பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    தாம்பரம்:

    நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பொழிச்சலூர் அருகே சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய பிளஸ்-2 மாணவி பஸ்மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    தாம்பரம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ(வயது17). சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சுதந்திரதின விழாவையொட்டி பள்ளியில் நடந்த விழாவில் லட்சுமி ஸ்ரீ பங்கேற்க சைக்கிளில் வந்தார். அவர் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

    விழா முடிந்ததும் காலை 11 மணியளவில் மாணவி லட்சுமி ஸ்ரீ வீட்டுக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் புறப்பட்டார்.

    அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்(எண்52எச்) திடீரென முன்னால் சென்ற மாணவி லட்சுமிஸ்ரீயின் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய லட்சுமிஸ்ரீ சைக்கிளோடு கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பஸ்மோதி மாணவி பலியானது பற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்தில் மாணவி பலியாகி விட்டதாக குற்றம் சாட்டினர்.

    போலீசாரின் சமாதான பேச்சுவார்தைக்கு பின்னர் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பலியான மாணவி லட்சுமிஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுதந்திரதின விழா முடிந்ததும் மாணவி லட்சுமிஸ்ரீ தனது பள்ளி தோழியான மற்றொரு மாணவியுடன் தனித்தனியாக சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சாலையோரத்தில் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும். பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    பல்வேறு ஆசை, எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவியின் வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து போனது அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுக்கியது.

    மாணவி லட்சுமிஸ்ரீ பலியானது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியான சம்பவம் அவருடன் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சக மாணவிகள் மற்றும் பள்ளி தோழிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம்.
    • போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது மகன் லட்சுமிபதி (வயது 16). மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இன்று காலை லட்சுமிபதி வழக்கம்போல் பள்ளிக்கு தனது சைக்கிளில் முடிச்சூர் சாலை- மதுரவாயல் சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    அப்போது பொதுமக்கள் கூறும்போது, கடந்த வாரத்தில் இதே பகுதியில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது 2-வது விபத்து நடந்து உள்ளது. காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை என்று குற்றம் சாட்டினர்.

    விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவன் லட்சுமிபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

    தாம்பரம் அருகே மணல் லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29).

    இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் ரஞ்சித் குமாருடன் படப்பைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கரசங்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மணல் லாரி வேகமாக வந்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆசிரியர் சந்தோஷ் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

    படுகாயம் அடைந்த ரஞ்சித் குமார் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். அவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தேடி வருகிறார்.

    விபத்தில் மரணம் அடைந்த ஆசிரியர் சந்தோஷ் மனைவி பெயர் பார்கவி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள்தான் ஆகிறது.
    ×