search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamanna"

    • லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் பையா திரைப்படம் வெளியானது
    • இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது

    லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.

    இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் 'பையா' திரைப்படம் ரீரிலீஸை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி தமன்னாவை சந்தித்து பையா பட அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா.
    • இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது.

    லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.

    இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளம் வயதிலேயே எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை.
    • முன்பு திரைப்படத்தை அனுபவித்து ரசித்து பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கம் சென்று தான் பார்க்க வேண்டும்.

    தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாத்துறையில் பிரபல நடிகையாக திகழ்பவர் தமன்னா. சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்று தனது அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-

    இளம் வயதிலேயே எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அப்போது நான் சந்தித்த நபர் என்னுடைய பெயரில் ஏ மற்றும் எச் எழுத்தை கூடுதலாக சேர்த்தால் நன்றாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார் என்றார்.

    மேலும் டிஜிட்டல் வளர்ச்சி பற்றி தமன்னா கூறும் போது, திரைப்படங்களை பார்க்க விரும்பினால் ஓ.டி.டி. மூலமும் செல்போனிலும் எங்கிருந்து வேண்டு மானாலும் பார்க்கலாம். முன்பு திரைப்படத்தை அனுபவித்து ரசித்து பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கம் சென்று தான் பார்க்க வேண்டும்.

    ஆனால் இப்போது அப்படி இல்லை. இறப்பு என்பதை மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும் என்னுடைய அன்புக்குரியவர்கள் இழப்பு பற்றிய பயம் எனக்கு உள்ளது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வதை பார்ப்பது எளிதான விஷயம் அல்ல என்று கூறினார்.

    • இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
    • இப்படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் நல்ல வரவேற்பை பெற்றதாலும் லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்ததாலும் இதில் தமன்னாவை நடிக்க வைக்கு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • தமன்னா தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு நடனமாடிய தமன்னாவுக்கு ரசிகர்கள் பட்டாளமே குவிந்துள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.



    இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.



    அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் தமன்னா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற உடையில் இருக்கும் தமன்னாவின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    இந்த சிவப்பு நிற உடையை தமன்னா ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவுக்கு அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா.
    • இவர் திரையுலகில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. சிம்ரனுக்கு அடுத்து இடையழகி என்று தமன்னா ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர். தமிழ் பட உலகின் தங்க நிறத்தழகிகளில் ஒருவரான இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

    தமன்னா 

    தமன்னா 

     

    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார்.

    தமன்னா

    தமன்னா

     

    மேலும் அவர் பேசுகையில், ''கதாநாயகிகளின் புகைப்படம் பட 'போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ..." என்று ஆதங்கப்பட்டார்.

    2019-ம் ஆண்டில் வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்துக்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டரா என்று தனது திருமணம் பற்றிய வதந்திக்கு ஆவேசமாக கூறியிருக்கிறார் தமன்னா. #Tamanna
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் விரைவில் டாக்டர் ஒருவரை தமன்னா திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூகவலைத்தளத்திலும் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது. 

    இதையறிந்த தமன்னா, தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர். இந்த வதந்திகள் நான் ஏதோ கணவரை தேடி கடைகடையாக அலைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆதாரமற்ற செய்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.

    நான் இப்போது மகிழ்ச்சியாக தனியாக இருக்கிறேன், என்னுடைய பெற்றோரும் மாப்பிள்ளை தேடும் படலத்தில் இல்லை. இப்போதைக்கு என் காதல் எல்லாம் என்னுடைய சினிமா பணிகள்தான். நான் பட ஷூட்டிங்கில் தீவிரமாக இருக்கும் போது எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.



    இது மரியாதைக் குறைவானது. நான் எப்போது அந்தப் பாதையில் செல்வேன் என்பதை நானே உலகிற்கு அறிவிப்பேன். திருமணம் புனிதமானது. எனவே, இது பற்றி இத்தனை யூகங்கள் தேவையில்லை. நான் மீண்டுமொருமுறை உறுதியாகக் கூறுகிறேன்.

    என் திருமணம் இப்போதைக்கு இல்லை, இவை அனைத்தும் யாரோ ஒருவரது கற்பனையாகும். வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமன்னா பதிவு செய்திருக்கிறார். #Tamannah
    உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தில் இருப்பவர்கள், அதிலிருந்து விடுபட நடிகை தமன்னா ஐடியா கொடுத்திருக்கிறார். #Tamanna
    தமன்னா 2006–ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் வந்து திறமையான நடிகை என்றும் பெயர் எடுத்து இருக்கிறார்.

    சினிமாவுக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்திலேயே இப்போதும் இருக்கிறார். அவரை ‘மில்க் பியூட்டி’ என்று அழைக்கின்றனர். அழகு ரகசியம் குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

    ‘‘அழகு, அமைதி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியம். அதற்கு நான் நம்புவது யோகா. எனது ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் யோகாவிலேயே கழிகிறது. வெதுவெதுப்பான நீரில் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு விட்டு தினசரி பணிகளை தொடங்குவேன். 

    காலையில் 1 மணிநேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவேன். அதில் அரைமணி நேரம் சாதாரண உடற்பயிற்சிகள் செய்வேன். கடைசி அரைமணி நேரத்தில் யோகா, தியானம் செய்வேன். எனது ஜிம்மிலேயே இந்த பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். என்னிடம் யாராவது யோகா பற்றி சொன்னால் அவர்களிடம் மணிக்கணக்கில் பேசுவேன். யோகாவால் உடலில் இருக்கும் வி‌ஷ பொருட்கள் வெளியேறும். சருமம் அழகாகும். மனநெருக்கடி, மன உளைச்சல் விரட்டப்படும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது. சினிமா என்பது நெருக்கடி, சவால்கள் நிறைந்த தொழில். சரியான தூக்கம் இருக்காது. நேரத்துக்கு சாப்பிட முடியாது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அழுத்தம் இருக்கும். 



    இதில் இருந்து விடுபட ஒரே மருந்து யோகாதான். உணவு வி‌ஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தயிர் சாப்பிடுகிறேன். தண்ணீர், பழசாறுகள், இளநீரும் முக்கியம். நொறுக்குத்தீனிகளை தொடுவது இல்லை. சர்க்கரையை விரோதியாக கருதி அதில் இருந்து தள்ளியே இருப்பேன்.’’

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    சமீபத்தில் தமன்னாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் சௌந்தராஜா, தன் மனைவியுடன் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். #Vijayakanth #Soundararaja
    நடிகர் சௌந்தரராஜாவிற்கும் தமன்னாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, விஷால், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் சௌந்தரராஜா. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், ‘தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். 

    அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய விஜயகாந்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.
    ×