search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taj Mahal"

    • டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் பனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    லக்னோ:

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.

    டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார்.

    இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    • தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர்.
    • பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர். அங்குள்ள சிவப்பு மணற்கல் மேடையில் நான்கு பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்ய அதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    இதையடுத்து அந்த பெண்களிடம், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்களை எச்சரித்து, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை அதிகாரிகள் பெற்றனர்.

    • ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால்.
    • இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால்.

    சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம் காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.

    முகலாய மன்னரான ஹாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டியதாகத்தான் நாம் படித்து வந்தோம்; வருகிறோம்.

    ஆனால், இதைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாக்கல் செய்துள்ளார் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ்.

    இதுதொடர்பாக, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சுர்ஜித் யாதவ், முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டவில்லை. ராஜா மான் சிங்கின் அரண்மனையையே ஷாஜஹான் சீரமைத்துள்ளார். எனவே வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என கோரியுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

    • டென்மார்க் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசி இந்தியா வந்தடைந்தனர்.
    • டென்மார்க் அரச குடும்ப தம்பதிகள் தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.

    புதுடெல்லி:

    டென்மார்க் நாட்டின் இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்காக அவர்கள் நேற்று காலை புதுடெல்லி வந்தடைந்தனர்.

    டென்மார்க் நாட்டு அரச குடும்பத்தில் இருந்து அரச தம்பதி வருவது 2 தசாப்தங்களில் இது முதன்முறை ஆகும். கடந்த 2003-ம் ஆண்டில் கடைசியாக டென்மார்க் இளவரசர் வந்து சென்றார். அதற்கு முன் 1963-ம் ஆண்டு டென்மார்க் அரசி 2-ம் மார்கரெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் அழைப்பின் பேரில் அரச குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்காரை, டென்மார்க் இளவரசர் ஹென்ரிக் கிறிஸ்டியன் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அவர் நேரில் சந்தித்து பேசுகிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், டென்மார்க் அரச குடும்ப தம்பதிகள் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் அவர்கள் ஆக்ரா கோட்டைக்கும் சென்றனர்.

    • 2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர்.
    • டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹாலும் ஒன்று. இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்கிற பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்டார்.

    அதில் 2021-2022-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னங்களில் தாஜ்மஹால் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ் மஹாலில் கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். #TajMahal
    ஆக்ரா:

    உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது.  முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான  கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண வசூல் முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.



    இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.

    ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும்.  பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.

    கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது.  இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
    பனை தொழில் நசிவடைந்து வரும் நிலையில் பனை ஓலையின் மூலம் 3 அடி உயரத்தில் தாஜ்மஹாலை ஸ்ரீவைகுண்டம் தொழிலாளி உருவாக்கி உள்ளார். #TajMahal #PalmTree
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 65). பனைஏறும் தொழிலாளி. இவர் கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயமும் செய்தும் வந்தார். இவருக்கு பனை ஓலையில் பலவிதமாக பொருள்கள் செய்வதில் ஆர்வம். பனை நாரில் கட்டில் முடைவது, பனை ஓலையில் பாய் முடைவது, நார் பெட்டி செய்வது உள்பட தொழிலை செய்து கொண்டிருந்தார்.

    இவர் கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பலவிதமான பொருள்களை செய்ய ஆசைப்பட்டார். இதன் பயனாக தாஜ்மஹால் செய்வதற்கு இவர் பல ஸ்தூபிகளை அமைத்து அதன் மேலே ஓலையை கொண்டு பல வேலைபாடுகளை செய்துள்ளார். பளிங்கு மாளிகை என்பதை குறிக்கும் வண்ணத்தில் இதற்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தாஜ்மஹால் சுமார் 3 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக காணப்படுகிறது.

    ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடை மற்றும் குதிரை பொம்மைகள்.

    மேலும் ஏரோபிளேன், சர்ச், ஆலய கோபுரம், வில்லு வண்டி, யானை, நார் பெட்டி, கல்லாபெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை செய்தார். பின் அதற்கு வர்ணம் தீட்டினார். இந்த பொருள்கள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

    இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, தற்போது பனை தொழில் நசிவடைந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கும் பொருள்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் போலி பெருத்துக் கொண்டிருக்கிறது. பனை ஏறும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பனையின் பயன்பாடு எல்லோருக்கும் தெரிய வேண்டும் இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தேன்.

    பனை ஓலை மற்றும் நார் மூலமாக பொருள்களையெல்லாம் உருவாக்கி எனது வீட்டில் காட்சிக்கு வைத்துள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு இந்த பொருள்களை கொண்டு போய் கண்காட்சியாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதோடு அரசு நலிந்து இருக்கும் இந்த தொழிலை மேலும் வலுப்படுத்த அரசு உதவிகள் செய்ய வேண்டும். இதை இந்த கண்காட்சி மூலமாக அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TajMahal #PalmTree


    இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று ஆக்ரா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை கண்டு களித்தார். #KimJungSook #TajMahal ##KimJungSookinTajMahal
    லக்னோ:

    இந்தியாவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

    அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் நேற்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி  கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.


    பின்னர், அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவ நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.

    இன்று ஆக்ரா நகருக்கு வந்த கிம் ஜங்-சூக், மொகலாய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கப்பட்ட பளிங்குக்கல் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலை கண்டு களித்தார்.

    தென்கொரியாவில் இருந்து தன்னுடன் இந்தியா வந்துள்ள அதிகாரிகள் மற்றும் உ.பி. மந்திரிகளுடன் தாஜ் மஹால் எதிரே அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். #KimJungSook #TajMahal #KimJungSookinTajMahal
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். #TajMahal

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள்.

    மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது.

    இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முதல் தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

    வெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். #TajMahal 

    தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர். #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என எச்சரித்தனர்.



    “தாஜ்மகாலை பாதுகாப்பதற்கான பல்வேறு விஷயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; பசுமை திட்டத்தின் கீழ் கொண்டு வருதல், தாஜ்மகால் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், உணவுவிடுதிகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர். உத்தரபிரதேச மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கீல் ஐஸ்வர்யா பதி ஆகியோர் வாதிடும்போது, “ தாஜ்மகால் பாதுகாப்பு குறித்த தொலைநோக்கு ஆவணத்தை டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்லூரி தயாரித்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி வாதிடும்போது, “சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ஆகா கான் பவுண்டேசன், கலை மற்றும் கலாசாரத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை, நினைவுச்சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச கவுன்சில் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளிடம் இருந்து தாஜ்மகால் பாதுகாப்புக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. தாஜ்மகால் அமைந்து உள்ள ஆக்ரா நகரத்தை கலாசார நகரமாக அறிவிப்பது குறித்து ஒரு திட்டம் தீட்டி அனுப்புமாறு உத்தரபிரதேச மாநில அரசை கேட்டு இருக்கிறோம்” என குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #TajMahal #SupremeCourt 
    வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதித்துள்ளது. #protectingTajMahal #ASITajMahalmaintenance
    புதுடெல்லி:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி, பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாஜ் மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தாஜ் மஹாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது.

     தாஜ் மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


    மிக முக்கியமாக, தாஜ் மஹாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆக்ரா, பைரோஸாபாத், மதுரா, ஹத்ராஸ், உத்தரப்பிரதேசத்தின் எட்டா நற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் ஆகிய பகுதிகளில் கான்பூர் ஐ,ஐ.டி. மாணவர்களை கொண்ட குழுவினர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து சுமார் 10,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

    இன்னும் 4 மாதங்களுக்குள் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் மத்திய அரசின் சார்பில் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தாஜ் மஹாலை பராமரிப்பது தொடர்பாக ‘யூனெஸ்கோ’ அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டில் வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து அளித்ததாக தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    தாஜ் மஹால் மீது சர்வதேச அமைப்பான ‘யூனெஸ்கோ’ கொண்டுள்ள அக்கறையைவிட நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதனையடுத்து, தாஜ் மஹால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பராமரிக்கும் பொறுப்புகளை தொல்லியல் துறை இயக்குனர்,  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர், ஆக்ரா வட்டார கமிஷனர் ஆகியோர் ஏற்பார்கள் என சுப்ரீம் கோர்ட்டிடம் தொல்லியல் துறை உறுதியளித்துள்ளது.  #protectingTajMahal #ASITajMahalmaintenance
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யப்படும் என உ.பி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
    லக்னோ:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு இன்று தாக்கல் செய்தது.



    அந்த அறிக்கையில், தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருப்பதாகவும், இதன்மூலம் காற்று மற்றும் சத்தத்தினால் ஏற்படும் மாசுவை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    மிக முக்கியமாக, தாஜ்மகாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
    ×