search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN governer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
    • பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் இன்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 1166 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.

    கேரளாவை சேர்ந்த டிரைவர் விஷ்ணுவிற்கு 13 விருதுகளை அவர் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் வரவேற்றார். பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்வதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதால் அரசு பணிகள் முடங்கி உள்ளதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 30-ம் தேதி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு மனுவில், 'தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுகிறார். இதனால் அரசு பணிகள் முடங்கி உள்ளன. மேலும் அரசியல் சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

    எனவே மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினார்கள். அவர்கள் தங்கள் வாதத்தின் போது கூறியதாவது:

    தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆர்.என்.ரவி முடக்குகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கூட அவர் கையெழுத்திடவில்லை. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க கவர்னர் மறுப்பு தெரிவிக்கிறார். 2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் தமிழக அரசின் உரிமை மட்டுமல்ல, தனி நபரின் உரிமையும் பறிக்கப்படுகிறது. அரசின் முக்கிய பணியிடங்களை முடக்குவதற்கான மசோதாக்களை கூட கவர்னர் கண்டு கொள்ளவில்லை.

    தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை கவர்னர்களால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் வகையில் வழக்கை தொடர்ந்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் வாதாடினார்கள்.

    அவர்களிடம் நீதிபதி, 'தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறோம். கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாமா' என்று கேட்டனர்.

    பின்னர் இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கவர்னரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதன்பின் இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்று மத்திய அரசு வக்கீல்கள் ஆஜராக உத்தரவிட்டனர்.

    • ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் நடைபெற்றது.
    • சனாதன தர்மத்தின் ஒளியாலேயே இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமான பாடலான ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மீகப் பெரியோர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

    இசைஞானி இளையராஜா, நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாடகி சித்ரா, நடிகர் ஜெயராம், பி.வாசு, நடிகர் அஜய் தேவ்கன், உள்ளிட்டோர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது. அரசுகளால் உருவாக்கப்படவில்லை. மக்கள் உழைப்பால் உருவானது தான் நம் நாடு. அரசுகள் அதனை வடிவமக்க மட்டுமே செய்தன.

    ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம். 2047-ல் உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என குறிப்பிட்டார்.

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கொடநாடு வீடியோ தொடர்பான விஷயங்களை விவரித்தனர்.

    அதன்பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார். 

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம்சாட்டி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளார் என தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    ×