search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRajendar"

    • டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

    இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் கடந்த 14-ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.

    உஷா - சிம்பு -  டி.ராஜேந்தர்

    உஷா - சிம்பு -  டி.ராஜேந்தர்

    இந்நிலையில் டி.ராஜேந்தர் அமெரிக்கா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை நிம்மதி அடையவைத்துள்ளது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் டி ராஜேந்தர் குணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவுடன் டி.ராஜேந்தர் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் டி.ராஜேந்தரை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.

    இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், மேல் சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக டி.ராஜேந்தர் அமெரிக்க செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று(14.6.2022) இரவு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

    டி.ராஜேந்தர் - கமல்ஹாசன் - குரலரசன்

    டி.ராஜேந்தர் - கமல்ஹாசன் - குரலரசன்

    இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் டி.ராஜேந்தரை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்துள்ளார். இதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. டி.ராஜேந்தருடன், சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினரும் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் டி.ராஜேந்தர், இன்றைய காதலை பற்றி சொல்லும் விதமாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். #TRajendar
    ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை;, வீராசாமி ஆகிய பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படைப்பு டி.ராஜேந்தரின் ‘இன்றையக் காதல் டா..!

    இதில் நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் பிரபல நட்சத்திரங்கள், நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இளம் நகைச்சுவை நடிகர்கள் ஆக பல புதிய முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். மற்றும் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், உள்ளிட்ட பல நகைச்சுவை பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.



    முழுக்க, முழுக்க இளமை சொல்லும் காதல் கதையாகவும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், காதல்... காதல்... காதலை தவிர வேற ஒன்றும் இல்லை என்றும் உருவாக்க இருக்கிறார் டி.ராஜேந்தர். 
    நேற்று நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
    என் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.

    நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே சரியாக இருக்கும்’ இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
    ×