search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syllabus"

    • தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
    • தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.

    தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.

    தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.

    22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.

    ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.

    அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

    மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.

    • இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணி யிடங்களுக்கா ன அறிவிப்பு தொகுதி 1 மற்றும் 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

    மேலும், இந்த தேர்வுகள் குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் போன்ற இதர விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட அறிவிப்பை எதிர்நோக்கி இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழியாக தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 94990 55904 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    திருப்பூர் :

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.

    • 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
    • தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், 50 சதவீதத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. உள்பட) பொதுவான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

    அடுத்த மாதம் 1-ந் தேதி (அக்டோபர்) தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ -மாணவிகள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை வருகிற 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களிடம் தேர்வு கட்டணம் ரூ.50-வுடன் 9-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தேர்வு தொடர்பான அறிவிப்பை மாணவர்கள் அறியும் வண்ணம் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு தயார் செய்யும் விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணைய த்தால் நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது.

    இதற்கான கல்வித்குதி டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வு நவம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடத்தப்படுகிறது.

    அன்றையதினம் தேர்வு க்கு தயார் செய்யும்விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறு வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

    பெயரை பதிவு செய்யலாம் . மேலும் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பானது அனுபவிமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. எனவே போட்டித்தேர்வுக்கு தயாராகும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர், கல்வித்த குதியினை 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பிபெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×