search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey Vessel"

    • கப்பல் தயாரிப்பு நிறுவனம், ஒரே ஆண்டில் 3வது பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது.
    • 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது.

    மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜி.ஆர்.எஸ்.இ., இந்திய கடற்படைக்காக 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையை சேர்ந்த மனைவியர் நலச் சங்கத் தலைவர் மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பல் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் ஹம்பிஹோலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 


    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ். இக்சாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும்.

    கடந்த 60 ஆண்டுகளில், ஜிஆர்எஸ்இ நிறுவனம் 800க்கும் மேற்பட்ட கப்பல்களை உருவாக்கி உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டவை இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கப்பல்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, நட்பு நாடுகளான மொரீஷியஸ், சீஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×