search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub Inspector"

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    • உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேலும் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 

    • வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    சென்னை:

    சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் அது உறுதியானது. இதை தொடர்ந்து சென்னையில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள், 14 போலீசார் என 22 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதற்கான உத்த ரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறும்போது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார்.
    • போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கவுரி. இவர் சூளை குறவன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த ரவுடி கிஷோர் சப்-இன்ஸ்பெக்டர் கவுரியிடம் சென்று ரகளையில் ஈடுபட்டார். மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் எதிரில் நின்றபடியே அவதூறான வார்த்தைகளை பேசிய அவர் "நான் ஆம்பள... எனக்கு பயமே இல்ல... எத்தன பேர் வந்தாலும் சண்டை செய்வேன்" என்று பேசியபடியே அங்குமிங்கும் செல்கிறார்.

    இதனை மாடியில் இருந்து பொதுமக்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார். பி.வகை ரவுடியான கிஷோர் கால்வாய் கிஷோர் என்றும் அழைக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.

    • முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது.
    • 2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பணியி டங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் இருந்து 417 பேர் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் ஏற்கனவே பணியில் உள்ள போலீசார் ஆவர். அனைவரும் சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உடல் தகுதி தேர்வை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் பார்வையிட்டனர். முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது. பின்னர் 1500 மீ ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை வரை உடல் தகுதி தேர்வு நடந்தது.

    2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது. இதில் நீளம், உயரம் தாண்டுதல் , கயிறு ஏறுதல் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் சோதனையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் வழங்கப்படும்.

    • தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் கொடைக்கானல் விடுதியில் மாரடைப்பால் இறந்தார்.
    • கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் பாஸ்கரன் (வயது 56). இவருக்கு திருமணமாகி நாகஜோதி என்ற மனைவியும், ஜெகதீஸ் (23) என்ற மகனும், பிரியதர்ஷினி (22) என்ற மகளும் உள்ளனர்.

    பாஸ்கரன் தனது நண்பரான லெனின் என்ப வருடன் கொடைக்கா னலுக்கு சென்றார். இவர்கள் அங்குள்ள தனது நண்பர்களை சந்தித்து விட்டு நாயுடுபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார்.

    மறுநாள் காலையில் லெனின் எழுந்து தனது நண்பர் பாஸ்கரனை எழுப்பினார். அப்போது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே விடுதி ஊழியர்களுடன் சேர்ந்து பாஸ்கரனை கொடைக்கா னல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மார டைப்பால் உயிரிழந்திரு க்கலாம் என தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் ஆண்கள் 4,312 பேரும், பெண்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வுக்கு விண்ணப் பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று காவல்துறையில் முதல் நிலை மற்றும் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

    எஸ்.பி. ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 725 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு 170 பேர் வரவில்லை. தேர்வு பாளையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மையத்தில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.

    • எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
    • 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 750 பணியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் (தாலுக்கா, ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி, செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

    முன்னதாக தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்தனர். பின்னர் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தினர். தொடர்ந்து தேர்வு மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
    • தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக பாளை ஜான்ஸ் கல்லூரி, ஜான்ஸ் பள்ளி, சேவியர் பள்ளி உள்பட 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் இருந்து இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மெயின் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தேர்வும் நடைபெற்றது. தேர்வர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 மையங்க ளிலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர். கடுமையான பரிசோதனை களுக்கு பின்னரே தேர்வறை க்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையங்களில் இன்று காலை முதலே தேர்வர்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4,311 பேருக்கு தேர்வெழுத அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.

    தேர்வுக்காக வந்திருந்த தேர்வர்கள் அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தேர்வறைக்குள் செல்லும்போது புகைப்ப ட்டத்துடன் கூடிய அடையாள அட்டை, பரீட்சை அட்டை, ஊதா அல்லது கருமை நிற பேனாவை தவிர வேறு எந்த பொருளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வுக்காக 5,144 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. முன்னதாக நேற்று தேர்வு மையங்களை தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ள நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் எடுத்துச்செல்ல தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    • தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
    • தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள 621 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெறுகிறது.

    இதற்கான எழுத்து தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 3 மையங்களில் நடைபெற்றது.

    இதில் காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1075 ஆகிய இரண்டு மையங்களில் ஆண்களும், திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலை பள்ளியில் 558 பெண்களும் மொத்தம் 3 மையங்களிலும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 933 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். மேலும் ஆதார் அட்டையை சரிபார்த்து அனுமதித்தனர்.

    மேலும் தேர்வாளர்கள் கொண்டு வந்த கை பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    இந்த தேர்வு பணிக்காக 3 தேர்வு மையத்திற்கு அமலாக்கத்துறை காவல்துறை தலைவர் ராதிகா மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தன், கிரியாசக்தி உள்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடு களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான போலீசார் செய்து வரு கிறார்கள். இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியின் தேர்வு மையத்தை மாற்றி மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி சீட்டு பெற்ற 1000 விண்ணப்ப தாரர்களும் அம்மையத்தின் எதிரில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரி மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.

    எனவே மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் சின்னகவுண்டா புரத்தில் உள்ள ஏ.வி. எஸ். கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என சேலம் மாவட்ட போலீஸ் சூபப்பிரண்டு அருண்கபிலன் தெரிவித்துள்ளார்.

    • சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
    • சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். அவரது உடலுக்கு சேலம் மாநகர போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ×