search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strength"

    • தி.மு.க.-அ.தி.மு.க.விற்கு இணையாக பலத்தை நிருபிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
    • 25 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துக் கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி தலைவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் உழைப்பை காட்ட வேண்டும். மூன்று மாதம் கெடு. உழைப்பில் திருப்தி இல்லையெனில் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். பா.ஜ.க. கட்சியில் காங்கிரஸ் கட்சியை போன்று பொறுப்புகளை அள்ளி தெளிக்கமாட்டார்கள். நிர்வாகிகள் கட்சியையும் வளர்க்க வேண்டும், தங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கால் ரயிலில் இருக்க வேண்டும், ஒரு கால் ஜெயிலில் இருக்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுபயணம் செய்வதை ரயில் குறிக்கும், மக்கள் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை செல்ல தயாராக இருக்க ஜெயில் குறிக்கும். வருகிற 2024 நாடாளுமன்ற ேதர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் 25 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகும் பட்சத்தில் 2026ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு இணையாக அல்லது கூடுதலாக பலத்தை நிரூபிக்க வேண்டும். வாக்கு சாவடி மையங்களில் பொறுப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை தக்க வைத்து கொள்ள உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணை பொது செயலாளர் புரட்சி கவிதாசன், அமைப்பு செயலாளர் செல்வம், மாவட்ட பொது செயலாளர்கள் கணேசன், குருஸ்ரீராம், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், மாவட்ட பொருளாளார் தொழிலதிபர் முருகானந்தம், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
    • வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வல்லம் பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்போடு சிறப்பு தூய்மை பணி இயக்கம் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் தலைமையில் மேற்கொள்ளபட்டது.

    பேரூராட்சி 2-ம் வார்டில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது . வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    இம்முகாமில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் , மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று ‘பாரத் பந்த்’ என்னும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், லோக் தந்திரிக் ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுகேந்து சேகர் ராய் மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.



    முன்னதாக கயிலாய மானசரோவர் புனித யாத்திரை முடிந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்தி நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மானசரோவர் ஏரியின் நீரை தெளித்து மரியாதை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக ராம் லீலா மைதானத்துக்கு வந்தார்.

    அங்கு அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசியதாவது:-

    4 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமர் பதவி ஏற்றபோது கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அதை நாங்கள் 4 ஆண்டுகளில் முடித்துக் காட்டுவோம் என்றார். அவர் சொன்னது உண்மைதான். ஆம் கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள அனைத்தும் அதற்கு முந்தயை 70 ஆண்டுகளில் எப்போதும் நிகழ்ந்திடாதவை ஆகும்.

    இந்த 4 வருடங்களில் நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை உங்களால் காண முடிகிறது. நீங்கள் எங்கே சென்றாலும் மத ரீதியாக, சாதி ரீதியாக மக்கள் பிளவுபட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக செயல்படுவதையும் காணலாம்.

    எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கிறார். இதேபோல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் பற்றி வாய்திறக்க மறுக்கிறார். விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், வேலைவாய்ப்பு பிரச்சினை ஆகியவை குறித்தும் எதுவும் பேசுவதில்லை.

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. ஆனால் இதுபற்றி மோடி எதுவும் கூற மறுக்கிறார். 4 வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக கண்டித்துப் பேசினார். இப்போதோ மவுனமாக இருக்கிறார்.

    இங்கே அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறோம். இது எங்களிடையே இருக்கும் ஒற்றுமையை காட்டுகிறது. எங்களிடையே உள்ள சித்தாந்தங்களை பகிர்ந்து கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும்.

    நாட்டு மக்களின் துயரங்களையும், வேதனையையும் எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. ஆனால் மோடி இதுபற்றி எதையும் அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதுதான் எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். இந்த இடத்தில் இருந்து நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, பொதுமக்கள் இந்த அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், சிறு வணிகர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் கவலையோடு காணப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள சிறுசிறு கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட ஒருங்கிணையவேண்டும். நாட்டுக்கு நிறைய செய்து இருக்கிறோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் அது நாட்டின் நலன்களுக்கானது அல்ல. இந்த அரசு அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் தயாராவோம். இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய சரியான நேரம் விரைவில் வரும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டாலும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பேசவில்லை.

    கூட்டம் தொடங்கியபோது 20 கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகோர்த்து மோடி அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காண்பித்தது, குறிப்பிடத்தக்கது.  #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    ×