search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
    • நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.

    "எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.

    இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

    அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.

    இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.
    • நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.

    இன்றுடன் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா அணி பிடித்தது.

    இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்து தகுதியும் உள்ளது.

    பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறைதான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

    முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கிராமபுற ஏழை, எளிய மாணவர்களை கண்டறிய வாய்ப்பாக அமைந்தது.

    சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறும். விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது.

    அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

    பங்கு கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகள்.

    கிராமங்களில் இருந்தும் வீரர்கள் வரவேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
    • முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    அதனைத்தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜன.25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் கூறியதாவது, " நாட்டிற்காக எப்போதும் விளையாடுவது தான் என்னுடைய பணி. இருப்பினும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவிற்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
    • சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.

    டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்

    ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட விளையாட்டு போட்டியில் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார்.

    Virudhunagar News Rhythm Special School students achievement

    ராஜபாைளயம்

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளியை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி கனிமொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் கவுரி முதலிடமும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான கிரிக்கெட் பந்து எரிதலில் சுஹேல் முதலிடமும், மற்றும் தடை தாண்டி ஓடுதல் பெண்கள் பிரிவில் அமலா முதலிடமும், ஆண்கள் பிரிவில் நந்தகுமார் முதலிடம் வெற்றி பெற்றனர். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவிதா மூன்றாம் இடமும், ஓடி நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில். தீபக் மூன்றாம் இடமும், தடைகளை தாண்டி ஓடுதல் ஆண்கள் பிரிவில் சிவகுருநாதன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டியில் வென்ற மாணவர்களை ரிதம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங்டிரஸ்டி கதிரேசன், செகரட்டரி,பால்ராஜ் மற்றும் டிரஸ்டிகள் கோடியப்பன், ,கவுதமன், இளங்குமரன் ஆகியோர் பாராட்டினார்கள். முதல்வர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்..முன்னதாக ஆசிரியை கிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்..

    • மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி சாதனை
    • மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவர் சிறந்த வீரராக தேர்வு

    புதுக்கோட்டை,

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி மண்டல அளவில் கால்பந்து போட்டி பிஷப் தேவ தாஸ் அம்புரோஸ் வித்யாலயா சீனியர் செ கண்டரி பள்ளியில் நடை பெற்றது.இதில் 39 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மவுண்ட் சீயோன் சர்வ தேசப் பள்ளி மாண வர்கள், கலந்து கொண்டு, மூன்றா மிடம் பிடித்து சாதனை படைத்தனர். 9-ம் வகுப்பு மாணவன் விஜய் மல்லை யப்பன் இந்த தொடரில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார்.இப்போட்டிக்கு பள்ளி யில் இருந்து 16 மாண வர்களை கொண்ட குழு விற்கு குறுகியகாலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்க ளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும்,பயிற்சியாளருமான ரூடவ்ஸ்வரன்யும், பள்ளி யின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்த லைவர் ஏஞ்சலின் ஜோ னத்தன், பள்ளியின் முதல்வர் ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர்.

    • அரியலூரில் தேசிய கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
    • விளையாட்டுத் திறன்அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்

    அரியலூர்,

    இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடத்தப்படவுள்ள 17 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கோ-கோ போட்டியின் தமிழக அணிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றறது.அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர், கடலூர் என 8 மண்டலங்களில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் உடன் திறன், விளையாட்டுத் திறன், முழு விளையாட்டு அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்.உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில் , உறுப்பினர்களாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, பொய்யாதநல்லூர் ரவி, கௌரவப்பாளையம் செல்வகுமார் ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் செய்திருந்தார். 

    • அரியலூரில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
    • 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் டெல்லியில் நடத்தப்படவுள்ள 14 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கைப்பந்து போட்டிக்கு தமிழக அணிக்கானத் தேர்வு அரியலூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வீரர் தேர்வு க்கான போட்டியில் 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தமிழக அணிக்காக விளையா டவுள்ளனர்.முன்னதாக போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்பரப்பி திருமூர்த்தி, விளாங்குடி வீரபாண்டி யன்,கல்லாத்தூர் விஜய்ஆனந்த், ஆண்டிமடம் நிர்மலா மேரி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் த. ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், கீழப்பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ,சேகர் ,இளங்கோவன், குமார், ராஜசேகர், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
    • 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

     உடுமலை

    உடுமலையைச் சோ்ந்த டா்எப்-2022 என்ற அமைப்பு சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி பாலப்பம்பட்டியில் உள்ள செயற்கை புல் மைதானத்தில் நடைபெற்றது. 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில், 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

    மணவா்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆா்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் (சமநிலை) முடிந்ததால் பெனால்டி ஸ்ட்ரோக் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இதில், 5-3 என்ற கோல் கணக்கில் ஆா்ஜிஎம் பள்ளி அணி வெற்றிபெற்றது.

    மாணவிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெதப்பம்பட்டி என்.வி. உயா்நிலைப் பள்ளி, குறிச்சிக்கோட்டை ஆா்விஜி மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இதில், என்.வி. உயா்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

    வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    உடுமலை வட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளில் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

    உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நகரமன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமை வகித்தாா். திமுக., நகரச் செயலாளா் சி.வேலுசாமி போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

    இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் குறிச்சிக்கோட்டை ஆா்விஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

    போட்டிகளை உடற்கல்வி ஆசிரியா் விஜயபாண்டி ஒருங்கிணைத்திருந்தாா்.

    • பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி துணைமாலை–யம்மன் சமேத திருமேனி–நாதர் சுவாமி கோவிலில் பிட்டுத்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெற்றது. வந்தியம்மை என்ற பிட்டு பலகாரம் விற்கும் மூதாட் டிக்கு உதவி செய்ய எண்ணி மனித உருவில் வந்த சிவ–பெருமான், மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக் கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார்.

    ஆனால் பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம் பால் அடித்த திருவிளையா–டலை உணர்த்துவதே இந்த பிட்டுக்கு மண் சுமந்த பட–லம் ஆகும். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடி–யாக உதவ வருவேன் என் பதை உணர்த்தவும் ஒவ் வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அனைத்து சிவாலயங்களி–லும் விமரிசையாக கொண் டாடப்படுகிறது.

    அந்த வகையில் இந்த திருமேனிநாதர் சுவாமி கோவிலிலும் பிட்டுத்திரு–விழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடை–பெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவை நூற்றுக்க–ணக்கான பக்தர்கள் கண்டு களித்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த பிட்டுத் திருவிழாவில், திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

    ×