search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special camp"

    • கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியலில் புதிததாக 85 ஆயிரம் புதுவாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 950 வாக்காளர்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 538 பெண் வாக்காளர்கள், 124 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. தமிழகத்திலேயே 2-வது பெரிய தொகுதியாகவும் இந்த தொகுதி உள்ளது.

    மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503 வாக்காளர்களுடன் வால்பாறை தொகுதி சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 93 ஆயிரத்து 443 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 38 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

    கோவை வடக்கு தொகுதியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். 697 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். மற்ற 9 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    40 ஆயிரத்து 469 ஆண் வாக்காளர்கள், 45 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்கள், 52 மூன்றாம் பாலினத்தவர்கள் என 85 ஆயிரத்து 680 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் 27 ஆயிரத்து 333 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்கள் 26 மூன்றாம் பாலினத்தவர்கள் என 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அப்போதிருந்த வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 20.83 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக ஓட்டுச்சாவடி எண்ணிக்கையும் 2,048 என கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் 329, கவுண்டம்பாளையம் 435, கோவை வடக்கு 298, கோவை தெற்கு 251, சிங்காநல்லூர் 323, பல்லடம் 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தேர்தல் தேதி அறிவித்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தேவையான வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்டு அவற்றினை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.

    • கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
    • முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் சேதமானது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதமான ஆவணங்களை பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பழைய தாசில்தார் அலுவலகம், தாசிதார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரல் வட்டத்தில் பழையகாயல் மரிய அன்னை மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம், ஆழ்வார்திருநகரி கிராம நிர்வாக அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலகம், ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் வட்டத்தில் ஆத்தூர் சமுதாயநலக்கூடம், புன்னைக்காயல் புனித வளனார் திருமணமண்டபம், சுகந்தலை சமுதாய நலக்கூடம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, மானாடு தண்டு பத்துக்கு வெள்ளாளன் விளை சர்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமி புரம், செட்டியா பத்து, உடன்குடிக்கு உடன்குடி வருவாய் அலுவலகம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, விதவை, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்டவைகள் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்சு, பத்திர ஆவணங்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இன்றும், நாளையும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
    • மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டிசம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.

    இதேபோல், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூன்று மாவட்டங்களில் வரும் 11ம் தேதி சிறப்பு முகாம்.
    • சென்னையில் வரும் 12ம் தேதியும் சிறப்பு முகாம்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம் தேதியும், சென்னையில் வரும் 12ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • அட்டை உடனடியாக வழங்கப்பட்டது
    • வரிசையில் காத்திருந்து பதிவு செய்து பெற்றனர்

    வேலூர்:

    வேலூர் அரசினர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் சிறப்பு பதிவு முகாம் இன்று நடந்தது.

    மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இதுவரை முதல் அமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்களுக்கு ஒரே இடத்தில் சான்றுகளை சரிபார்த்து காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மக்கள் வரிசையில் காத்திருந்து பதிவு செய்து, காப்பீடு அட்டையை பெற்றுச் சென்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர்.
    • கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர். இவர்களில் 19,410 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 18,924 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சிரமம் இல்லாமல் கிடைக்க பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் (தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும், ஏப்ரல் மாதம் 1-ந் தேதி, ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே கொடுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, புகைப்படத்தை திருத்தம் செய்ய படிவம்-8 விண்ணப்பிக்க வேண்டும்.பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர்.
    • ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 22 வங்கிகள் பங்கேற்றன.

    300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். நடப்பு கல்வியாண்டில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.64 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிவகங்கையில் நாளை, நாளை மறுநாள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தும் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தின் அறிவுரையின்படி வருகிற ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்க ளுக்கான சிறப்பு முகாம்கள் நாளை 25-ந் தேதி (சனிக்கிழமை), 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்படி இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.கோட்டாட்சியர் சிவகங்கை, தேவ கோட்டை அலுவலகத்தில் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக் கலாம்.

    எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • சிறுதானிய உணவு திருவிழாவும் நடைபெற்றது
    • 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

    அரவேணு, 

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்துக்கு உட்பட்ட அரக்கோடு, கடினமால் மற்றும் குமரமுடி கிராமத்தில் தேயிலை வாரியம் மற்றும் யூ.என்.சி.எஸ் ஆகியவை சார்பில் பழங்குடியினர் பாரம்பரிய விழா அனுசரிக்கப்பட்டது.

    இதில் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தருமன், ஹேமா மற்றும் யூ.என்.சி.எஸ் அமைப்பினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பின்னர் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டைவழங்குதல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகை உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. பின்னர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • விண்ணப்பதாரர்களை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த மாற்றுத்திறனாளிகளின் வயதினை தளர்வு செய்து மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பொருட்டு வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் கலெக்டர் தலைமையில்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக அடங்கிய குழுவினர் விண்ணப்பதாரர்களை நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    எனவே விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×