search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Media"

    • 6 அடி 7 அங்குலம் உயரம் உள்ள ஒரு பெண் சாலையில் நடந்து சென்றால் இப்படித்தான் அனைவரும் பார்ப்பார்கள்.
    • வீடியோ 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    தனித்துவமான உடல் அமைப்பை கொண்டவர்கள் மற்றவர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்த வகையில், நடாலியா என்ற 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட பெண் ஒருவர் நெரிசல் மிகுந்த சாலையில் நடந்து சென்ற போது அவரை அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், நடாலியா மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள சாலையில் செல்கிறார். அப்போது அவரது எதிர்புறம் வரும் பலரும் அவரை கடந்து சென்ற போது நடாலியாவை ஆச்சரியமாக பார்க்கும் காட்சிகள் உள்ளது. 6 அடி 7 அங்குலம் உயரம் உள்ள ஒரு பெண் சாலையில் நடந்து சென்றால் இப்படித்தான் அனைவரும் பார்ப்பார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை? எல்லோரும் உங்களை பார்ப்பார்களா? அல்லது நீங்கள் அடுத்தவர்களை பார்ப்பீர்களா? நான் இரண்டுமே!! என அந்த வீடியோவுடன் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    • கருப்பு உடை அணிந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் சர்ச்சையான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மெட்ரோவில் அத்துமீறிய பயணிகள், அரைகுறை ஆடையுடன் பயணம் செய்த பயணிகள்.

    ஜோடிகளின் முத்தமழை, பயணிகள் இடையே சண்டை என பல வீடியோக்கள் வைரலாகி இருந்த நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு ஆணின் மடியில் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக அமரும் காட்சிகள் உள்ளது.

    கருப்பு உடை அணிந்த அந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. அப்போது யாரும் தனக்கு இருக்கை வழங்காத நிலையில், அந்த பெண் ஒரு வாலிபரிடம் தனக்கு அமர இருக்கை தருமாறு கேட்கிறார். அதற்கு அந்த வாலிபர் மறுத்தார். உடனே அந்த பெண் வாலிபரின் மடியில் அமர்ந்து கொள்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சமூக வலைதளங்களில் மாணவியை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
    • சாதனை படைத்த மாணவியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கேலி செய்யாதீர்கள் என பலரும் பதிவிட்டனர்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவியை சமூக வலைதளங்களில் உருவ கேலி செய்து பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தின் சீதாபூரில் உள்ள சீதாபால் வித்யா மந்திர் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிராச்சி நிகாம் ஆண்டு இறுதி தேர்வில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இதனால் மாணவியின் கல்வித்திறனை பாராட்டி பலரும் அவரை வாழ்த்தினர்.

    அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் மாணவி பிராச்சி நிகாமை உருவ கேலி செய்து பதிவிட்டனர். அந்த மாணவிக்கு முகத்தில் ஆண்கள் போன்று மீசை வளர்ந்திருக்கும் என குறிப்பிட்டு ஏராளமானோர் பிராச்சி நிகாமுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதால் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாணவியை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். எக்ஸ் தளத்தில் ஒரு பயனரின் பதிவில், மாணவி பிராச்சி நிகாமின் கல்வி, புத்திசாலிதனம் தான் கவனத்தை ஈர்க்க தகுதியானது. அவரது தோற்றம் அல்ல என மாணவிக்கு ஆதரவாக பதிவிட்டார். இதே போல சாதனை படைத்த மாணவியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கேலி செய்யாதீர்கள் என பலரும் பதிவிட்டனர்.


    • மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார்.
    • புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    மாமியார்- மருமகள் இடையேயான உறவு பெரும்பாலான குடும்பங்களில் எப்போதும் சண்டையாகவே இருக்கும். விதிவிலக்காக சில குடும்பங்களில் மட்டுமே மருமகள் மீது மாமியார் அதிக அன்பு காட்டுவார்.

    அந்த வகையில், சீனாவில் குழந்தை பெற்று வீடு திரும்பிய மருமகளை, லிப்ட் வசதி இல்லாததால் 7-வது மாடிக்கு அழைத்து செல்வதற்காக கிரேனை வாடகைக்கு எடுத்த மாமியாரின் செயல் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள சென்யாங் நகரை சேர்ந்தவர் வாங். இவரின் மருமகள் கர்ப்பம் அடைந்த நிலையில், சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதனால் வாங்கின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனை வாடகைக்கு வரவழைத்து அதில் மருமகளையும், புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் மாமியாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், திருடுவதற்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்பது புரியவில்லை என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    'இன்றைய காலகட்டத்தில், காவல்துறையினருக்கு சிசிடிவி முக்கியமான ஒரு கருவி'யாக பயன்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. சமீபகாலங்களில், சிசிடிவி உதவியோடு பல குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறது காவல்துறை. வீடு, தெரு, சாலை என பல இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், இப்போதெல்லாம், பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இல்லை. இது திருட்டு சம்பவங்களைத் தடுக்க அல்லது கண்டறிய உதவுகிறது.

    கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவால் கடையில் திருட முயல்வதும், அதனை கடை உரிமையாளர் கண்டுபிடித்து அது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு வீடியோ தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு நகைக்கடையில் ஏராளமான பெண்கள் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களுடன் 2 சிறுவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நகைகளை காட்டும்படி கடைக்காரரிடம் கேட்கின்றனர். கடைக்காரரும், ஒரு பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு நகைகளைக் காட்டுகின்றனர்.

    அப்போது சிறுவன் ஒருவன் கடைப்பெண்ணிடம் வேறு நகையை காட்டும்படி கூற அவரும் கடைக்குள் செல்கிறார். அப்போது அச்சிறுவன் அங்கு வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை திருடுகிறான். இதனை கவனித்த பெண் கடையில் இருப்பவரிடம் கூற அவர் வந்து சிறுவனை அடிக்க ஆரம்பித்தபோது அவர் ஒன்றும் தெரியாதது என்று கூற சிறிது நேரத்தில் மோதிரம் கீழே விழுகிறது. இதையடுத்து சிறுவனை உடன் வந்தவர்களும் அடிக்க வீடியோ முடிகிறது.

    இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், என்ன மாதிரியான திருடர்கள், அவர்கள் திருடுவதற்கு முன்பு கேமராவைக் கூட பார்க்க மாட்டார்களா? என்று கூற மற்றொரு பயனர் கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், திருடுவதற்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்பது புரியவில்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் பெண் பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.
    • பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். அங்கு பயணிகளும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் சென்ற போது ஒரு வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக ரிஷிகா குப்தா என்ற பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் ரிஷிகா தனது பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.

    அதில், அந்த வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக குறிப்பிட்டு இந்த வகையான மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒருவர் எவ்வளவு அழுக்காக இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் தனது செயலுக்காக வருத்தப்படவில்லை. அவரை போன்ற ஒரு வாலிபரை எந்த பெண்ணும் சந்திக்க கூடாது என ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.
    • இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    செம்மறி ஆடுகள் கூட்டமாக இருக்கும் போது சண்டையிட்டு காயம் அடைவது அதனை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகவே திகழ்கிறது. இதனை தடுக்க இங்கிலாந்தில் செம்மறி ஆடுகள் மீது பாடிஸ்பிரே தெளித்து விசித்திரமான தீர்வை கண்டுபிடித்துள்ளதாக சில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் நார்போக்- சபோல்க் எல்லையில் உள்ள பண்ணை விவசாயிகள் இது தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில், செம்மறி ஆடுகள் சண்டையை தடுக்க அவற்றின் மீது பாடிஸ்பிரே தெளித்தோம். இந்த சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    • மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
    • வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சீனாவின் தைஷான் பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை உள்ளது. 1,545 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

    இங்குள்ள கோவிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கிறார்கள். ஆனால் படியில் ஏறுவதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து சாதாரணமாக ஏற முடிவதில்லை. எனவே மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    அதில் சில வீடியோக்களில், படிகள் ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகளும் உள்ளது. சில பயணிகள் பாதி படி ஏறிய நிலையில், அவர்களின் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகின. இந்த வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • காரின் பின்சீட்டில் 2 வாலிபர்கள் அமர்ந்துள்ளனர்.
    • வீடியோ வைரலாகி 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் சில சாகசங்கள் விபரீதமாக உள்ளன. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் சுமித் துபே என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஓடும் காரின் கதவில் வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரை ஒருவர் ஓட்டுகிறார். காரின் பின்சீட்டில் 2 வாலிபர்கள் அமர்ந்துள்ளனர். டிரைவர் காரை மெதுவாக ஓட்டும் நிலையில் கார் கதவில் பிளாஸ்டிக் கவரால் உடலை சுற்றியவாறு ஒரு வாலிபர் படுத்த நிலையில் தொங்கியபடி செல்கிறார்.

    இந்த வீடியோ வைரலாகி 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் சாகச செயலை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.

    16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் நாய் மெட்ரோ ரெயில், படகில் ஒய்யாரமாக பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.
    • இஸ்தான்புல் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயின் அனைத்து பயணங்களையும் மைக்ரோ சிப் மூலம் பதிவு செய்தனர்.

    துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். கம்பீரமான அரண்மனை, அலங்கரிக்கப்பட்ட மர மாளிகைகள், பூங்காக்கள், படகு சவாரிகள் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்நகரத்தில் பஸ், ரெயில், மெட்ரோ ரெயிலில் தினமும் ஒரு தெரு நாய் ஒய்யாரமாக சவாரி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒரு காலத்தில் தெரு நாயாக இருந்த போஜி என்ற பெயர் கொண்ட அந்த நாய் தற்போது மெட்ரோ ரெயில்கள் மட்டுமல்லாது படகு, பஸ்சிலும் பயணம் செய்கிறது. தங்க பழுப்பு நிற ரோமங்கள், கருமையான கண்கள் மற்றும் நெகில் காதுகளுடன் அலைந்து திரியும் நாய் 'அனடோலியன் ஷெப்பர்டு' கலவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


    சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த நாய் மெட்ரோ ரெயில், படகில் ஒய்யாரமாக பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது. இஸ்தான்புல் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயின் அனைத்து பயணங்களையும் மைக்ரோ சிப் மூலம் பதிவு செய்தனர்.

    ஒரு நாளில் குறைந்தது 29 மெட்ரோ நிலையங்களில் இந்த நாய் பயணிக்கிறது என்றும், படகில் செல்லும் போதும் கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பிரபலமானதால் இந்த நாய்க்கு தனியாக ஒரு வலைதள கணக்கை உருவாக்கி உள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×