search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smartphones"

    • வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர்.
    • பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    கொரோனா காலத்தில் உலகமே பொதுமுடக்கத்தை சந்தித்தது. அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், சிறிது காலத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.

    இதனால் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கினர். ஆரம்பத்தில் மாணவர்களின் கல்விக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை தற்போது மாணவர்கள் படிப்பை விட பொழுது போக்கிற்காக அதிகளவில் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த 8-ந்தேதி புதுடெல்லியில் ரூரல் இந்தியாவில் தொடக்க கல்வி குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கிராமப்புறங்களில் மாணவர்கள் படிப்பிற்காக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது தொடர்பான இந்த ஆய்வில் மாணவர்களின் பெற்றோர்களிடமும் பதில்கள் கேட்டு பெற்றுள்ளனர்.

    21 மாநிலங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் உள்ள 6 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களின் பெற்றோர் 6,229 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களில் 6,135 பேர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை கொண்டிருந்தனர். 56 பேர் பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் 36 பேர் பள்ளியை சேராத குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.

    இந்த ஆய்வில் இந்தியாவில் கிராமப்புறங்களில் 49.3 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் அதில் 34 சதவீதம் பேர் மட்டுமே அவற்றை படிப்பிற்காக பயன்படுத்துகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுமார் 76 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் வீடியோ கேம்கள் விளையாட மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதாக கூறி உள்ளனர். 56.6 சதவீதம் பேர் மாணவர்கள் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கும், 47.3 சதவீதம் பேர் அவற்றை பதிவிறக்கம் செய்து இசையை கேட்க பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    34 சதவீதம் பேர் மட்டுமே ஆய்வு பதிவிறக்கங்களுக்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதாகவும், 18 சதவீதம் பேர் மட்டும் டூட்டோரியல்கள் மூலம் ஆன்லைன் கற்றலை அணுகி இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெண் குழந்தைகளின் பெற்றோர்களில் குறைந்தது 78 சதவீதம் பேரும், ஆண் குழந்தைகளின் பெற்றோர்களில் 82 சதவீதம் பேரும் தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கான பயன்பாட்டை அதிகமாக பெற்றுள்ளனர்.

    வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர். ஒவ்வொரு நாளும் 40 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் கற்றல் பற்றி தாங்கள் குழந்தைகளுடன் உரையாடுவதும், 32 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுடன் கல்வி குறித்து உரையாடுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    மேலும் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது.
    • இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

    பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கும் வழிவகுக்கிறது.

    தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது. பின்னர் இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து விண்ணப்பம் அளித்தனர்.

     திருப்பூர் :

    காதுகேட்காத, வாய்பேசாத மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் கட்டமாக ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். பார்வையற்றோர் சங்க பிரதிநிதி சக்கரையப்பன், காதுகேளாதோர் சங்க பிரதிநிதி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து, ஸ்மார்ட் போனுக்கான விண்ணப்பம் அளித்தனர். மொத்தம் 100 பேர் ஸ்மார்ட் போன் கேட்டு விண்ணப்பித்தனர்.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #GalaxyMSeries #Smartphones

     

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வீடியோ மற்றும் புகைப்பட டீசர்களை வெளியிட்டுள்ளது. புதிய டீசர்களில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எம் (SM-M105F), கேலக்ஸி எம்20 (SM-M205F) மற்றும் கேலக்ஸி எம்30 (SM-M305F) என்ற மாடல் பெயர்களில் உருவாகி வருகிறது.



    இதுதவிர சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. சாம்சங் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் மேல்புறம் இயர்பீஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ஓரங்கள் வளைந்திருக்கிறது. பக்கவாட்டில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி எம்20 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர்
    - மாலி G71 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என்று பிரதமர் இம்ரான்கான் தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். நிதி மந்திரி ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.

    இதனால் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகி உள்ளது. அதை சரிகட்ட சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதை பிரதமர் இம்ரான்கான் விரும்பவில்லை. நாடு யாரையும் சார்ந்து இருக்க கூடாது என அவரும், கட்சி நிர்வாகிகளும் பேசி வருகின்றனர்.


    எனவே, சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் போன்கள், பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானில் ரூ.66 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளது. ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. #Pakistan #Smartphone #ImranKhan
    சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.
    முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.

    இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.

    அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.

    ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.



    ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.

    இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்! 
    பெற்றோர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #SmartPhones
    வாஷிங்டன்:

    உலகமெங்கும் ஸ்மார்ட் போன் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அதை அறிவுப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து தேவையற்றவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    குறிப்பாக பெற்றோர்களின் ‘ஸ்மார்ட் போன்’ செயல்பாட்டினால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் இல்லினாய்வ் மாகாண பல்கலைக் கழகம், மிக்சிகன் பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    பொதுவாக சில பெற்றோர்கள் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்தை டெலிவி‌ஷன், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர். அவற்றை குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், மற்றும் தூங்கும் நேரங்களிலும் பயன்படுத்துகின்றனர்.


    அதை பார்க்கும் குழந்தைகள் தாங்களும் பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர். படிப்பிலும், வேறு சில அறிவுப்பூர்வமான செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஸ்மார்ட் போன்கள், டெலிவி‌ஷன்கள் மற்றும் கம்ப்யூட்டரில் நேரங்களை செலவிடுகின்றனர்.

    இதனால் குழந்தைகளின் படிப்பும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. எனவே பெற்றோர்கள் குடும்ப நலனுக்கு செலவிடும் நேரங்களை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி பழக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த ஆய்வு 172 குடும்பத்தினரிடம் நடத்தப்பட்டது. அதில் பெற்றோருடன் 5 வயது மற்றும் அதற்கு குறைந்த வயது குழந்தைகள் பங்கேற்றனர். #SmartPhones
    ×