search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shortage"

    • போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
    • பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி, காட்டுப்பள்ளி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள்அதிகரித்து வரும் நிலையில் பொன்னேரி பகுதிகளில் வெளியூர்களில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தற்போது வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்றளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய கிராமங்கள், 22 சிறு கிராமங்கள் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப்பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வருகின்றன.

    பொன்னேரி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் என, மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீஸ் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங்கள், சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக்குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது.
    • நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்குட்பட்ட 9,10-வது வார்டு பகுதி மேடான இடம் ஆகும். அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும் போது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. பெரியநத்தம், தட்டான்லை பகுதி, காட்டான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது. இதனை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடி க்கை எடுப்ப தில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடைந்த குழாயை சரிசெய்ய 3 நாட்கள் வரை ஆவதால் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலை நீடித்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பழைய குழாய்களை அகற்றி விட்டு அனைத்து வார்டுகளிலும் தரமான குடிநீர் குழாய்கள் மற்றும் பழவேலி பாலாற்று பகுதியில் உள்ள நீர் இறைக்கும் எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளும், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணி புரியவில்லை.

    இதனால் பல இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு ஆஸ்பத்தி ரிக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. இது தவிர பல ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க போதிய அளவில் மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க வும், ேபாதிய அளவில் மகப்பேறு டாக்டர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசின் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பாக்கெட் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • ராதாபுரம் வட்டார பகுதிகளான பணகுடி, வள்ளியூர், வடக்கன்குளம் உட்பட பல இடங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது.

    பணகுடி:

    நெல்லையில் இயங்கி வரும் அரசின் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பாக்கெட் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    ராதாபுரம் வட்டார பகுதிகளான பணகுடி, வள்ளியூர், வடக்கன்குளம் உட்பட பல இடங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கப்பெறாமல் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

    ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலிற்கு குறைந்தபட்ச தொகை வழங்குவதாக கூறப்படுகிறது. இக்காரணத்தை முன்வைத்து கறவை மாடுகள் வளர்ப்போர் தனியாருக்கு பாலை விற்பனை செய்கின்றனர். இதன் எதிரொலியாக ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது.
    • இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

    சேலம்:

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேசன் கடை பணியில் போதுமான ஊழியர்கள் இல்லை. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரேசன் கடை, அங்கன்வாடி பணிக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி, ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த தேர்வில் லஞ்சம், முறைகேடு ஆகியவை விளையாடியது. இதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் ரேசன் கடைகளில் ஆட்கள் பற்றாக்குறையினால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க அமைப்புகள் இப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தன.

    இதையடுத்து ரேசன் கடைகளில் காலியாக உள்ள ஊழியர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி வருகிற நவம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்களை செய்து அரசாைண வெளியிடப்பட்டுள்ளன.

    இப்பணிகளுக்கு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. அதன் பிறகு நேர்முகத்தேர்வு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் 2-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 

    • கடந்த 2012-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • திருப்பணிக்கு நிதி பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பழைமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்கக் கோரி இந்து மகாசபை அமைப்பின் ஆலய பாதுகாப்புப் பிரிவு சார்பில் கோயில் முன்பு மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.

    அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    இக்கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் திருப்பணி மீண்டும் தொடங்கப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதையடுத்து, இக்கோயிலில் மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    மேலும் திருப்பணிக்கு நிதிப் பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மேலும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்படாததால், உபயதாரர்கள் நிதி அளிக்க முன்வந்தும், நிதியை பெற முடியாமல் திருப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றது.

    இந்நிலையில், கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமையில் கோயிலின் முன்பு அவ்வமைப்பினர் மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பணிக்கான செலவை முழுமையாக அரசே ஏற்று பணியை முடிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக பிச்சை எடுத்து நிதி திரட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவ்வமை ப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.

    தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்

    அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆலங்குளத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை உள்ளன.
    • ஆலங்குளம் போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமீப காலமாக போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிக்கப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை உள்ளன.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சனை

    ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் ஆலங்குளம் போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமீப காலமாக போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிக்கப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    புகார்

    இங்கு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தினேஷ் பாபு மீது லஞ்ச புகார் எழுந்ததை அடுத்து கடந்த மாதம் அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் சில தினங்களிலேயே கூடுதல் பணிக்காக திருச்செந்தூர் சென்று விட்டார்.

    இதனால் இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இல்லாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூலமாகவே பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் புகார்களும் சரிவர விசாரிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.


    ஆட்டோவில் செல்லும் இன்ஸ்பெக்டர்


    கடந்த 15-ந்தேதி மாயமான்குறிச்சி ஊராட்சி அலுவலத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தால் அ.தி.மு.க. பிரமுகரின் மண்டை உடைக்கப்பட்டது. போலீசார் அங்கு இருந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவர் இல்லாத காரணத்தால் அங்குள்ள இன்ஸ்பெக்டர் பணிகள் நிமித்தம் வெளியே செல்ல தனியார் ஆட்டோவையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் இல்லாத காரணத்தால் முக்கிய பணிகள் சுணக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த 2 போலீஸ் நிலையங்களுக்கும் கூடுதல் போலீசார் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்களும், போலீசாரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் பற்றாக்குறையால் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டது.
    • இதனால், திருட்டு சம்பவங்கள். திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போதுமான போலீசார் இல்லாததால் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கீழக்கரை பகுதியில் விரிவாக்க பகுதிகள் அதிகம் உருவாகின்றன. போலீஸ் நிலையத்தில் அதிகாரிகளை தவிர போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

    பணியில் உள்ள போலீசாரும் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு சென்று விடுவதால், இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட முடியவில்லை.முன்பு நகர் பகுதிகளில் தினமும் போலீசார் ரோந்து வந்தனர். இதனால், திருட்டு சம்பவங்கள். திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    தற்போது ரோந்து பணியில் போலீசார் ஈடுபடும் நாட்கள் குறைவாகவே உள்ளது. இதை சாதகமாக்கி வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பு சம்பவங்களும், சில நேரங்களில் கொலைகளும் நடக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கீழக்கரையில் போதுமான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனர்.

    பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை எடுத்து மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் காலி குடங்களுடன் மக்கள் தண்ணீர் லாரிக்காக வீதிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட திரிசூலம் அருகே உள்ள ஈஸ்வரி நகர் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு பைப்புகளில் தண்ணீர் வராததாலும், டேங்கர் லாரிகளில் நீர் சப்ளை இல்லாததாலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈஸ்வரி நகர் பகுதி மக்களின் ஒரே நம்பிக்கையாக அப்பகுதியில் உள்ள கிணறு உள்ளது. அதில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    நெரிசலை தடுப்பதற்காக பொதுமக்களே வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல் மூலம் தண்ணீர் எடுப்பவர்களின் வரிசை தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் மட்டும் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும். ஒரு குடும்பத்துக்கு 4 குடம் தண்ணீர் எடுக்கலாம்.

    இதற்காக கிணற்றை சுற்றி கம்பிகள் அமைத்து உள்ளனர். அதில் 13 கப்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

    தேர்ந்து எடுக்கப்படும் குடும்பத்தினரில் 60 பேர் காலை 6 மணிக்கும், 80 பேர் மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்த கிணறு 30 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டது.

    நாங்கள் இந்த கிணற்றை தூர்வாரி பயன்படுத்தி வருகிறோம். தற்போது கிணற்றில் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னை நகரில் சப்ளை செய்யப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வடசென்னையில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. 4 ஏரிகளிலும் சேர்த்து 956 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்) தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் உள்ள தண்ணீரை கொண்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    இதையடுத்து மாற்று வழியை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். சிக்கராயப்புத்தில் உள்ள கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்பும் பணி இப்போது நடந்து வருகிறது. தினமும் 3 கோடி லிட்டர் தண்ணீர் கல்குவாரியில் இருந்து எடுக்கப்படுகிறது.

    இன்னும் 3 மாதத்துக்கு தேவையான தண்ணீரை கல்குவாரியில் இருந்து எடுக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டும் அடியோடு குறைந்து வறண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஏரியில் 17 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி சேமித்து வைக்கலாம்.

    இன்னும் சில நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு விடும். ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னை நகரில் சப்ளை செய்யப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வடசென்னையில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

    கொருக்குப்பேட்டை, ஏழில்நகர், காமராஜ் நகர், பாரதி நகர், அம்பேத்கர் நகர், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பகுதிகளில் லாரிகள் மூலம் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.

    இதேபோல் ஆதம்பாக்கம், மாதவரம், போரூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நீலத்தடி நீரை எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


    சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #Drinkingwater #Shortage
    சென்னை:

    சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும்.

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது.

    இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும்.

    இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

    இப்போதே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டு விட்டது. தென்சென்னையில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இப்போது வரை சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டுமே உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,375 மி.கனஅடியை எட்டி நிரம்பி காணப்படுகிறது. அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #Drinkingwater #Shortage
    ×