search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivsena"

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
    • பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.

    அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
    • ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

    அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.

    இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.

    இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.

    உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.

    • 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவாக உள்ளது. இந்தநிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்ற 17 நாட்கள் ஆன பிறகும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

    இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "2½ லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 மந்திரிகள் உள்ளனர். ஆனால் 12 கோடி மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 மந்திரிகள் மட்டுமே உள்ளனர்.

    அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது?. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மந்திரி சபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 12 மந்திரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சொல்கிறது. எனவே கடந்த 2 வாரமாக 2 நபர் மந்திரி சபை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சட்டத்தின்படி செல்லாது. மரியாதைக்குரிய கவர்னரே, இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?" என கூறியுள்ளார்.

    • மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த மனுவை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மகாராஷ்ராவில் முதல்-மந்திரியாக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் கூறும்போது, ஜூலை 11-ந்தேதி பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிடப்படும் என்றனர்.

    சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் கூறும்போது, 11-ந்தேதி விசாரணைக்கு வரவிருக்கும் புதிய மனுவுடன் நிலுவையில் உள்ள மற்ற மனுக்களையும் பட்டியலிட கோரி இருக்கிறோம் என்றார்.

    • இது ஒரு சட்ட போராட்டம், சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன.
    • அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது.

    மும்பை :

    மகா விகாஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் காரணமாக சட்டமன்றத்தில் எங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிருப்தியாளர்கள் குழு தன்னிடம் தேவையான எண்ணிக்கையில் இருப்பதாகவும், ஜனநாயக முறையில் தாங்கள் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.

    ஆனால் இந்த எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதிருப்தியாளர்கள் திரும்பி வரும்போது, பாலாசாகேப் தாக்கரே மற்றும் சிவசேனா மீதான அவர்களின் விசுவாசத்தை அது சோதிக்கும்.

    இது ஒரு சட்ட போராட்டம், சில விதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சில உத்தரவுகள் உள்ளன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒன்றாக உள்ளது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மகா விகாஸ் அகாடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு திரும்புவதற்காக கட்சி காத்திருக்கிறது.

    பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். #shivsena #BJP

    மும்பை:

    பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று அமித் ஷாவும், அருண்ஜெட்லியும் கூறி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியோ, இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, “பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை” என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

    இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் முக்கிய இடம்பிடித்துள்ள சிவசேனா கட்சியும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை கூற தொடங்கியுள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-


    2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தடவை அதில் 40 இடங்கள் வரை குறையலாம். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது.

    இத்தகைய நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவும் ஆதரவும் நிச்சயம் தேவைப்படும். இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறிய கருத்துக்கள் முழுக்க, முழுக்க சரியானது. அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    பாரதிய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறாவிட்டாலும் கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சி அமைக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் சிவசேனா கட்சி மிகவும் மகிழ்ச்சி அடையும்.

    ராம் மாதவ் கருத்துப்படி பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி செய்யும். அந்த கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகிக்கும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார். #shivsena #BJP

    சரத்பவார் தேர்தல் டிக்கெட் வழங்கும்போது அவரது குடும்பத்தை மனதில் வைத்து கொண்டு செயல்பட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். #LoksabhaElections2019 #Uddhavthackeray #SharadPawar
    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பர்பானி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

    இதேபோல கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் மகனும், சரத்பவாரின் பேரனுமான பர்த் பவாருக்கு மாவல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவல் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங் பர்னேவை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    சரத்பவார் தேர்தல் டிக்கெட் வழங்கும்போது அவரது குடும்பத்தை மனதில் வைத்து கொண்டு செயல்பட்டு உள்ளார். தான் இல்லாவிட்டால் தனது மகன்.. மகன் இல்லாவிட்டால் தனது மருமகன்... இப்படி தான் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா?. சத்தாராவில் நாங்கள் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Uddhavthackeray #SharadPawar
    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு இந்த தேர்தலில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். மே 23-ம் தேதி மக்களின் ‘மன் கி பாத்’ வெளியாகிவிடும் என சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    மும்பை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா, அவ்வப்போது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சில கருத்துகளையும் வெளியிட்டு வருகிறது.

    அவ்வகையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக நம் நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளின் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இவற்றை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? என அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  



    காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றெல்லாம் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    (இதில் எதுவும் நிறைவேற்றப்படாததால்) இந்த தேர்தலில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களை நீண்டகாலத்துக்கு முட்டாள்களாக்க முடியாது என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.

    மக்கள் தங்களிடம் உள்ள கேள்விகளுக்கு வாக்குமுறையின் மூலம் பதிலும் வைத்திருக்கிறார்கள். வரும் மே மாதம் 23-ம் தேதி மக்களின் பதில்கள் ‘மன் கி பாத்’ ஆக வெளியாகிவிடும் என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரி, ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. #Shivsena #GeneralCategoryQuota #PMModi
    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, மராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர்-உஸ்மானாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை என்று பெருமிதத்துடன் கூறினார். 



    இந்நிலையில், இதுதொடர்பாக சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் பகுதியில் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

    அதில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரி, ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விளையாடுகிறது என தெரிவித்துள்ளது. #Shivsena #GeneralCategoryQuota #PMModi
    தேர்தல் தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை என்று சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது. #ShivSena

    மும்பை:

    மத்தியிலும், மராட்டிய மாநிலத்திலும் சிவசேனா கட்சி பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.

    ஆனால், பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் சமீப காலமாக சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படாமல் அதன் உறுப்பினர்கள் சபையை புறக்கணித்தனர்.

    அந்த விவகாரத்தின் போது, ராகுல்காந்தி அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து பேசியதை சிவசேனா பாராட்டியது.

    இதன் பிறகும் பாரதிய ஜனதாவை சிவசேனா ஒவ்வொரு வி‌ஷயத்திலும் விமர்சித்து வருகிறது. 3 மாநிலத்தில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததற்கு மோடியே காரணம் என்றும் சிவசேனா கூறி இருந்தது.

    இந்த நிலையில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    2014 பாராளுமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்தார்கள். அதனால்தான் ஆட்சிக்கும் வந்தார்கள்.


     

    ஆனால், ஆட்சி இப்போது முடிய போகும் நிலையில் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஏராளமான வெற்று வாக்குறுதிகளை கொடுத்தது. அதேபோல்தான் ராமர் கோவில் கட்டுவோம் என்றும் வெற்று வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.

    இப்போது தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே ஏன் ராமர் கோவில் கட்டவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் ராமர் கோவில் பற்றி பாரதிய ஜனதா ஏதேதோ சொல்லி கொண்டு இருக்கிறது.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறும்போது, நிதானமாக இருப்போம், சரியான நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று கூறுகிறார்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரி ராமர் கோவிலை அனைவருடைய ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் கட்டுவோம் என்று கூறுகிறார்.

    எப்போது கோவில் கட்டப்போகிறீர்கள்? ராமர் கிட்டத்திட்ட 25 ஆண்டுகள் காத்து இருந்து விட்டார். நீங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தும் கட்ட முடியவில்லை.

    எவ்வளவு காலம்தான் கும்பகர்ண தூக்கத்தில் இருக்க போகிறீர்கள்? 3 மாநிலத்தில் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு பிறகும் நீங்கள் பாடம் கற்கவில்லை.

    இதேநிலை நீடித்தால் பாராளுமன்ற தேர்தலிலும் அது தோல்வியை நோக்கி அழைத்து செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அவசர சட்டம் கொண்டு வரவில்லை. இதுபற்றி கேட்டால் இந்த வி‌ஷயத்துக்கு அவசர சட்டம் கொண்டு வர முடியாது என கூறுகிறீர்கள்.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பலர் சிக்கி உள்ள நிலையில் அந்த வழக்குகளை கூட அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மூத்த தலைவர் அத்வானியை ஜனாதி பதியாகத்தான் உருவாக்க வில்லை. குறைந்த பட்சம் அவர் மீது உள்ள வழக்குகளையாவது நீக்குங்கள்.

    இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது. #ShivSena

    ×