search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivalingam"

    • கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
    • ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இத்திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது.

    இதன் கர்ப்ப கிரகம் இலங்கையை சேர்ந்தது.

    பராக்கிரம பரகு என்ற மன்னனால் கி.பி.1173ல் கட்டியதாக கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

    ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இக்கோவிலின் கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    இக்கோவிலில் உள்ள நந்தி (செங்கற்சுண்ணாம்பு) அறையால் அமைக்கப்பட்டது.

    இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி). இது அழகிய வடிவில் அமையப் பெற்று பார்ப்பதற்கு அழகாக அமையப்பெற்றுள்ளது.

    இத்திருக்கோவிலில் உள்ள பிரகாரங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமையப் பெற்றுள்ளது.

    இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகத்திலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது.

    பக்தர்களுக்கு வசதி

    பக்தர்கள் தங்குவதற்கு தேவஸ்தானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் கிடைக்கும்.

    இவை தவிர தனியார் துறையில் தங்கும் விடுதிகளும் (லாட்ஜ்) ஏராளமாக உள்ளன.

    இவைகளில் நவீன வசதியுடன் கூடிய அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்.

    • ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)
    • மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    இத்திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்:

    1. மகா சிவராத்திரி திருவிழா (பிப்ரவரி, மார்ச்).

    2. வசந்த உத்ஸவம் (மே, ஜூன்)

    3. ராமலிங்கம் பிரதிஷ்டை (மே, ஜூன்) ராவண சம்ஹாரம், விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை.

    4. திருக்கல்யாண திருவிழா (17 நாட்கள்) (ஜூன், ஆகஸ்ட்). தபசு நாள் பல்லக்கில் சயன சேவை திருக்கல்யாண நாள்.

    5. நவராத்திரி விழா (10 நாட்கள்) (செப்டம்பர், அக்டோபர்)

    6. கந்த சஷ்டி விழா (6 நாள்) (அக்டோபர், நவம்பர்)

    7. ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)

    இவை தவிர மாத நாள், வார சிறப்பு விழாக்களும் உண்டு.

    1. மாத விழா (ஒவ்வொரு கார்த்திகை)

    2. பட்ச விழா : பிரதோஷம்

    3. வார விழா (வெள்ளிக்கிழமை) அம்பாள் புறப்பாடு.

    சிறப்பு விழாக்கள்

    1. சங்ராந்தி (தை மாத முதல் நாள்) பஞ்ச மூர்த்திகள் ரதவீதியில் வலம் வருதல்.

    2. சித்திரை மாத பிறப்பு (சித்திரை மாத முதல்நாள்) (பஞ்ச மூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    3. மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    4. தெப்போத்ஸவம் : தை மாத பவுர்ணமியில் பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வந்து லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.

    5. வைகுண்ட ஏகாதசியன்றும் ஸ்ரீராம நவமியன்றும் ராமர் புறப்பாடு நடைபெறும்.

    6. ஆடி அமாவாசை தை அமாவாசை நாளில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்கினி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

    • ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்
    • உற்சவ விஷேச அலங்காரங்கள் செய்ய, கோவில் முன்அனுமதி பெற வேண்டும்.

    ராமேஸ்வரம் ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்:

    1. சகஸ்ரகலச அபிஷேகம்

    2. சங்காபிஷேகம் (1008)

    3. அஷ்டோத்திர கலச அபிஷேகம் (1008)

    4. ருத்ராபிஷேகம்

    5. உபயாபிஷேகம் (பஞ்சாமிர்தம்)

    6. சங்காபிஷேகம் (108) நெய்வேத்தியத்துடன்

    7. கெங்காபிஷேகம்

    8. பால் அபிஷேகம்

    9. ஸ்படிகலிங்க அபிஷேகம் (சுவாமி சன்னதி)

    10. பன்னீர் அபிஷேகம் (பன்னீர் நீங்கலாக)

    11. கோடி தீர்த்த அபிஷேகம்

    12. விபூதி அபிஷேகம்

    உற்சவங்கள்:

    1. வெள்ளி ரத உத்ஸவம்

    2. பஞ்ச மூர்த்தி உத்ஸவம்

    3. ஸ்ரீஅம்பாளுக்கு அலங்காரம் செய்ய தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வருதல்

    4. தங்க ரத வீதி உத்ஸவம்

    உற்சவங்கள் விஷேச அலங்காரங்கள் செய்ய விரும்புகிறவர்கள் கோவில் முன் அனுமதி பெற்று சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    திருக்கோவிலாரின் சவுகரியத்தை அனுசரித்து இவைகள் நடத்தி வைக்கப்படும்.

    • ஆனால் இந்த ஊரில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
    • வடமாநில தலங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.

    பாறைகள் தண்ணீரில் விழுந்தால் அல்லது போடப்பட்டால் அவைகள் மூழ்குவதுதான் இயல்பு.

    ஆனால் இந்த ஊரில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன.

    ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு இலங்கை செல்ல ராமபிரான் பாறைகளை கடலில் தூக்கிப் போட்டு பாலம் அமைத்தார் என்று சொல்வார்கள்.

    இலங்கைக்கும், ராமேஸ்ரத்திற்கும் இடையே உள்ள ஆதம் பாலம் அதாவது

    தற்போது ராமர் பாலம் என்று கருதுவது ராமபிரான் அமைத்ததே என்ற கருத்து இப்போதும் உள்ளது.

    அவ்வாறு ராமர் அமைத்ததாகக் கூறப்படும் பாலத்திற்கும், இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன.

    அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.

    இன்னும் சில பாறைகளை அங்கே வருவோர் கைகளால் தொட்டுப் பார்ப்பதற்காக அருகே வைத்திருக்கிறார்கள்.

    இலங்கைக்கு செல்ல பாலம் கட்டிய போது ராமர் பயன்படுத்திய பாறைகள்தான் இவைகள் என அங்குள்ளவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

    சிறிதளவு கல்லை தண்ணீருக்குள் போட்டாலே அது மூழ்கிவிடும்.

    இவ்வளவு பெரிய பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன என்று ஆச்சரியத்தில் வியக்கும் பக்தர்கள் இந்த பாறைகளை தொட்டுப் பார்த்து பிரமிக்கிறார்கள்.

    மிதக்கும் பாறைகளை தூக்கிப் பார்க்க விரும்புபவர்களை மகிழ்ச்சிப்படுத்த தனியாக இன்னொரு சிறிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதிலும் இரு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.

    விரும்புவோர் அவற்றை தூக்கிப் பார்த்து மகிழலாம்.

    அந்தப் பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்று விசாரித்த போது "ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்ற போது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார்.

    அப்போது ஒரு கல்லைத் தூக்கி கடலில் போட்டார்.

    அவரைத் தொடர்ந்து லட்சுமணரும், ஆஞ்சனேயரும், வானரப்படைகளும் கற்களை தூக்கி போடவே அவைகள் யாவும் மூழ்காமல் மிதந்தன.

    மிதந்த பாறைகள் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்ததாக புராணம்.

    ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப் போட்ட பாறைகள் தான் இவைகள் என்றும்

    தற்போது இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவையே என்றும் தெரிவித்தனர்.

    1964இல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி சின்னா பின்னமானதற்குப் பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு சாதுக்கள்

    தனுஷ்கோடி கடலில் கரைப்பகுதியில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

    அந்த பாறைகளில் சுமார் இரண்டாயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்தனர்.

    அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள பாறைகளை வடநாட்டிற்கு கொண்டு சென்றனர்.

    இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரக கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ்,

    பத்ரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள்

    இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.

    புதுச்சேரி அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளைக் காணலாம் என்றும் தெரிவித்தனர்.

    ராமமேஸ்வரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலேயே இந்த துளசி பாபா மடம் அமைந்துள்ளது.

    இங்கே மிதக்கும் பாறைகளைக் காணலாம்.

    • பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.
    • பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.

    ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

    அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது.

    அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க சிவபெருமான் பைரவரை அனுப்பினார்.

    பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.

    பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.

    இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது.

    • பத்திரகாளி கோயிலுக்குக் கீழ்ப்புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.
    • அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே அகத்திய தீர்த்தம் அமைந்துள்ளது.

    ஒன்பது தீர்த்தங்கள்

    கந்த மாதன பர்வதத்திற்குச் செல்லும் வழியிலும், அதனருகிலும் சுக்கிரீவ தீர்த்தம், அங்கத தீர்த்தம், சாம்பவ தீர்த்தம், தரும தீர்த்தம், பீம தீர்த்தம், அருச்சுன தீர்த்தம், நகுல தீர்த்தம், சகா தேவ தீர்த்தம், திரௌபதி தீர்த்தம் என்னும் ஒன்பது தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

    பிரம தீர்த்தம்

    பத்திரகாளி கோயிலுக்குக் கீழ்ப்புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.

    அனும குண்டம்

    திருக்கோயிலின் வெளி வீதிக்கு வடக்கே இத்தீர்த்தம் அமைந்துள்ளது.

    அகத்திய தீர்த்தம்

    கோவிலுக்கு வெளியே ஈசான திசையில் அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே அகத்திய தீர்த்தம் அமைந்துள்ளது.

    நாக தீர்த்தம்

    ராமேசுவரம் கீழவீதியில், தேவஸ்தான கட்டிடத்தின் பின்புறமுள்ள தோட்டத்தில் நாக தீர்த்தம் அமைந்துள்ளது.

    கங்கை முதலிய எல்லா தீர்த்தங்களும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இங்கு உறைவதாகக் கூறப்படுகின்றது.

    சடாமகுட தீர்த்தம்

    இத்தீர்த்தம், ராமேசுவரத்திற்குக் கிழக்கே தனுஷ்கோடிக்குச் செல்லும் வழியில், கோதண்ட ராமசுவாமி கோயிலுக்கு அருகில் மணல் மேட்டில் உள்ள திருக்குளம்.

    ராம லட்சுமணர்கள் இத்தீர்த்தத்தில் தங்கள் சடை முடியைக் கழுவியதாகக் கூறப்படுகின்றது.

    இத்திருத்தலத்தில் மற்றும் தேவ தீர்த்தம், விபீடண தீர்த்தம், கஜ தீர்த்தம், சரப தீர்த்தம், குமுத தீர்த்தம், அர தீர்த்தம், பனச தீர்த்தம் ஆகியவையும் இருந்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

    • அரம்பை, கபி தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாள்.
    • இந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தியை நீக்கிக் கொண்டான்.

    சக்கர தீர்த்தம்

    இத்தீர்த்தம், தேவி பட்டினத்திலுள்ள திருக்குளம்.

    இங்குக் காலவ முனிவர் தவம் செய்ததாகவும், சக்கரத்தாழ்வார் சாப விமோசனம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

    வேதாளவரத தீர்த்தம்

    மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து வெற்றிலை மண்டபம் என்னும் ஊர் சென்று, அங்கிருந்து இரண்டு கல் தொலைவிலுள்ள வேதாளை என்னும் இடத்தில் இத்தீர்த்தம் உள்ளது.

    சுதரிசனன் என்னும் கந்தருவன் இத்தீர்த்தத்தில் நீராடி வேதாள உருவத்திலிருந்து நீங்கினான்.

    பாபவிநாச தீர்த்தம்

    மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து வெற்றிலை மண்டபம் சென்றால், அங்குள்ள கடலுக்கு அருகே இத்தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெறுவார்கள்.

    பைரவ, கபி தீர்த்தங்கள்

    பாம்பன் ரெயில் நிலையத்திலிருந்து இத்தீர்த்தங்கட்டுக்குச் செல்ல வேண்டும்.

    அரம்பை, கபி தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாள்.

    சீதா குண்டம் தீர்த்தம்

    கபி தீர்த்தத்திற்குக் கிழக்கே சீதா குண்டம் என்னும் தீர்த்தம் அமைந்துள்ளது.

    இந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தியை நீக்கிக் கொண்டான்.

    • இத்தீர்த்தம், வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சன்னதிக்கு அருகில் உள்ளது.
    • இதில் நீராடியவர் இட்ட சித்தியும், ஞான முத்தியும் பெறுவர்.

    இத்தீர்த்தம், வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சன்னதிக்கு அருகில் உள்ள கிணறு.

    இதில் எவரும் தாமே நீர் எடுத்து முழுக முடியாது.

    அதற்கென உள்ள பிராமணர் நீர் முகந்து ஊற்றியே பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

    இத்தீர்த்தம் பிற தீர்த்தங்கள் அனைத்தையும் விட மேலானது.

    இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகு ராமேசுவரத்தில் தங்கியிருத்தல் கூடாது என்பது ஐதிகம்.

    அதனாலேயே இதற்குக் கோடி தீர்த்தம் என்னும் பெயர் உண்டாயிற்று.

    இத்தீர்த்தத்து நீரையே மக்கள் கலசங்களில் கொண்டு செல்வது வழக்கம்.

    எக்காலத்தும் இந்நீர் கெடுவதில்லை.

    கிருஷ்ண பகவான் இத்தீர்த்தத்தில் நீராடி கம்சனைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

    இதில் நீராடியவர் இட்ட சித்தியும், ஞான முத்தியும் பெறுவர்.

    • இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.
    • பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார்.

    சிவ தீர்த்தம்

    இத்தீர்த்தம், சுவாமி சந்நிதிக்கும் அம்பிகை சந்நிதிக்கும் இடையே அமைந்த அழகிய திருக்குளம்.

    பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார்.

    இதற்கு சிவகங்கைத் தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு.

    சாத்தியாமிருத தீர்த்தம்

    இத்தீர்த்தம், அம்பிகை திருச்சன்னதியில் சுக்கிரவார மண்டபத்திற்குத் தென்கிழக்கில் உள்ள கிணறு.

    புரூரவச் சக்கரவர்த்தி இத்தீர்த்தத்தில் நீராடி தும்புரு சாபத்தைப் போக்கிக் கொண்டார்.

    மூன்று தீர்த்தங்கள்

    காயத்திரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரசுவதி தீர்த்தம் என்னும் மூன்று தீர்த்தங்களும், கிழக்குக் கோபுரத்துக்கு வடக்கே மூன்று கிணறுகளாக அமைந்துள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.

    • இத்தீர்த்தம், கிழக்கு இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
    • சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடிப் பொற்கை பெற்றான்.

    இத்தீர்த்தம், வடக்கு இரண்டாம் பிரகாரத்தில் கருவூலத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

    வத்சநாப முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி செய்ந்நன்றி மறந்த பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

    சக்கர தீர்த்தம்

    இத்தீர்த்தம், கிழக்கு இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது.

    இத்தீர்த்தத்திற்கு முனி தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு.

    சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடிப் பொற்கை பெற்றான்.

    பிரமஹத்தி விமோசன, சூரிய, சந்திர தீர்த்தங்கள்

    இத்தீர்த்தங்கள், வடக்கு உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடினால் கொலைப்பாவம் நீங்கும்; முக்கால ஞானப்பேறு உண்டாகும்.

    • ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.
    • இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், செல்வத்தையும்,பெறுவார்கள்.

    இத்தீர்த்தம், மேற்கு மூன்றாம் பிரகாரத்தில் சேதுமாதவர் கோயிலுக்குத் தென்புறமுள்ள அழகிய திருக்குளம்.

    இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் திருமகள் அருளும், சித்த சுத்தியும் பெறுவார்கள்.

    ஐந்து தீர்த்தங்கள்

    கந்தமாதன தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கவய தீர்த்தம், நளதீர்த்தம், நீல தீர்த்தம் என்னும் ஐந்து தீர்த்தங்களும் சேது மாதவர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

    இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், வறுமை நீங்கிச் செல்வத்தையும், வீடு பேற்றையும் பெறுவார்கள்.

    கங்கை, யமுனை, கயை தீர்த்தங்கள்

    இத்தீர்த்தங்களும் வடக்கு உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன.

    ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.

    • சில நூல்களில் 56 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.
    • வடமொழியில் `சேது’ என்றால், `பாலம்‘ என்று பொருள்.

    தலப் பெருமையும், மூர்த்தி மகிமையும் கொண்டு விளங்குகின்ற ராமேசுவரத்தலம், தீர்த்த விசேஷத்தையே முதன்மையாகக் கொண்டு விளங்குகின்றது.

    இத்தலத்தில் மொத்தம் 64 தீர்த்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

    சில நூல்களில் 56 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.

    `சேது புராணம்' என்னும் தல புராணமும், `தேவையுலா' என்னும் நூலும் 24 தீர்த்தங்களை மிகச் சிறந்தவையாகக் கூறுகின்றன.

    சேது தீர்த்தம்

    இத்தீர்த்தம், ராமேசுவரம் தீவின் தென் கிழக்குக் கோடியில் அமைந்துள்ளது.

    பாம்பன் சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் ரயில் பாதை வழியே 16 மைல் தூரம் சென்று தனுஷ்கோடி நிலையத்தை அடைந்து, அங்கிருந்து கடற்கரை யோரமாக இரண்டு மைல் தூரம் நடந்து சென்றால் சேது தீர்த்தத்தை அடையலாம்.

    இத்தீர்த்தத்தைப் புனித சேது என்றும், புண்ணிய சேது என்றும், ராமசேது என்றும் மக்கள் வழங்குகின்றனர்.

    ராமேசுவரத்திற்குப் போவதற்கு முன் சேதுவில் நீராடியே செல்லுதல் வேண்டும்.

    வடமொழியில் `சேது' என்றால், `பாலம்' என்று பொருள்.

    ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்கு இவ்விடத்தில் அணை கட்டிச் சென்றதால், `ராமசேது' என்னும் பெயர் உண்டாயிற்று.

    வங்காள விரிகுடாவும், இந்து மகா கடலும் சேருமிடத்தில் புண்ணிய சேது தீர்த்தக் கட்டம் அமைந்துள்ளது.

    ராமேசுவரம் தீவு, வில் போன்று நீண்டிருக்கின்றது.

    இதன் தென் கிழக்கு முனையில் இருப்பதால், `தனுஷ்கோடி' என்னும் பெயர் உண்டாயிற்று.

    இதனைக் `கோடி தீர்த்தம்' என்றும் அழைக்கிறார்கள்.

    இந்த இடத்தில் ராமபிரான் தம்வில்லின் நுனியால் அணையை உடைத்தார்.

    அதனால் இப்பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

    சேதுவின் ரத்தினாகரத்தில் முதலில் நீராடுவர்.

    இப்புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்குகள் செய்ய வேண்டும் என்பர்.

    மக்கள் இங்கே பிதுர்க்கடன்களையும் செய்கின்றனர்.

    ஆடி, தை மாத அமாவாசைகளில் இங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீராடுகின்றனர்.

    அர்த்தோதயம், மகோதயம் முதலிய புண்ணிய காலங்களில் ராமநாத சுவாமி இங்குப் பஞ்ச மூர்த்திகளோடு சென்று தீர்த்தம் கொடுத்தருளுகின்றார்.

    அப்போது லட்சக் கணக்கான மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    ×