search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sachin Tendulkar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2007-ல் பிசிசிஐ தனக்கு கேப்டன் பதவியை வழங்க தயாராக இருந்தது.
    • என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாருதீனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில், 1996-ல் இருந்து 1999 வரையிலான காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பணியாற்றினார்.

    ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரிவை கண்டது. இதனால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு சவுரவ் கங்குலி கேப்டன் பதவியை ஏற்று, அணியில் பல மாற்றம் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து எதிர்கால அணியை உருவாக்கினார்.

    அப்போதுதான் எம்.எஸ். டோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். குறுகிய வருடத்திற்குள் கேப்டன் பதவியை ஏற்று ஜொலித்தார்.

    எம்.எஸ். டோனியின் தலைமையின் கீழ் சச்சின் தெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எம்.எஸ். டோனியை கேப்டனாக்க பரிந்துரை செய்தது சச்சின் தெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது.

    டோனியுடன் மனநிலை மிகவும் நிலையானது. அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    • சச்சினின் 29 ஆண்டு கால சாதனைக்கு முஷீர் கான் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.
    • இந்த ஆட்டத்தை சச்சின், வெங்சர்க்கார் உள்ளிட்டோர் நேரில் பார்த்தார்.

    மும்பை:

    89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்னும், விதர்பா 105 ரன்னும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.

    முஷீர் கான் 51 ரன்னுடனும், கேப்டன் அஜிங்யா ரஹானே 58 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முஷீர் கான், ரஹானே தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரஹானே 73 ரன்னில் (143 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹர்ஷ் துபே பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அக்ஷய் வாத்கரிடம் சிக்கினார். இதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார்.

    மறுமுனையில் நிலைத்து நின்று பொறுமையாக ஆடிய முஷீர் கான் 255 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம், 19 வயதான முஷீர் கான் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார். இதற்கு முன்பு 1994-95-ம் ஆண்டு ரஞ்சி இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெண்டுல்கர் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 29 ஆண்டு கால சாதனைக்கு முஷீர் கான் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.

     

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தை டெண்டுல்கர் நேரில் பார்த்த காட்சி. அருகில் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் உள்ளார்.

    இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் உள்ளிட்டோருடன் அமர்ந்து நேரில் பார்த்தார். அவர் முன்னிலையிலேயே முஷீர் கான் சாதனையை தகர்த்தார். இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் அறிமுகமான சர்ப்ராஸ்கானின் தம்பியான முஷீர் கான் பரோடாவுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி இருந்தது நினைவிருக்கலாம். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார்.

    அணியின் ஸ்கோர் 332 ரன்னாக உயர்ந்த போது வேகமாக மட்டையை சுழற்றிய ஸ்ரேயாஸ் அய்யர் 95 ரன்னில் (111 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆதித்ய தாக்கரே பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சற்று நேரத்தில் முஷீர் கான் 136 ரன்னில் (326 பந்து, 10 பவுண்டரி) ஹர்ஷ் துபே பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    முடிவில் மும்பை அணி 130.2 ஓவர்களில் 418 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஷம்ஸ் முலானி 50 ரன்னுடன் (85 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. அதர்வா டெய்ட் 3 ரன்னுடனும், துருவ் ஷோரேய் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும். வலுவான நிலையில் இருக்கும் மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    • இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார்.
    • சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர்.

    இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அணியின் உரிமையாளர்களான சூர்யா, அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் கலந்து கொண்டு முதல் சீசனை தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ வைரலானது.

    இந்த நிலையில் தான் இந்த தொடக்க விழாவில் அமீர் ஹூசைன் லோனி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள வகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனி. தற்போது 34 வயதாகும் அமீர் ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரது அசாத்திய திறமை என்னவென்றால், இரண்டு கையும் இல்லை, ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது. எப்படி என்றால், தனது கழுத்தை பயன்படுத்தி கிரிக்கெட் பேட்டை பிடித்து அதனைக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.

    இந்த போட்டியில் சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர். நேற்று நடந்த சிறப்பு போட்டியில் கில்லாடி 11 மற்றும் மாஸ்டர்ஸ் 11 அணிகள் விளையாடின.

    இதில், சச்சின், அமீர், முனாப் படேல், யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாஸ்டர் அணிக்காக விளையாடினர். இதே போன்று அக்ஷய் குமார், நடிகர் சூர்யா, பிரவீன் குமார், ராபின் உத்தப்பா, இர்பான் பதான் ஆகியோர் கில்லாடி 11 அணிக்காக விளையாடினர்.

    முதலில் பேட்டிங் செய்த மாஸ்டர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக சச்சின் - அமீர் களமிறங்கினர். மேலும் இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார். மேலும் சச்சின் ஓவரில் கீப்பர் பின்னாடி அடிக்கப்பட்ட ஒரு பந்தை வேகமாக துரத்தி பிடித்தார். இந்த செயலை பார்த்த சச்சின் உள்பட பல வீரர்கள் அவரை பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மற்றொரு வீடியோவில் பேட்டிங் செய்த நடிகர் சூர்யாவிற்கு சச்சின் பவுலிங் செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கடைசி பகுதியான அமன் சேதுவுக்கு அருகில் ராணுவ வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கலந்துரையாடினார்.

    குல்மார்க்:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகும் ரசிகர்களின் அன்பும், பாசமும் மாறாமல் அப்படியே உள்ளது. அவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிடுவதுடன் அவருடன் புகைப்படம் எடுத்தும், கிரிக்கெட் விளையாடியும் மகிழ்கின்றனர்.

    இந்நிலையில், சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்ற அவர், உள்ளூர் ரசிகர்கள், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார். 

    அவ்வகையில், குல்மார்க் பகுதிக்கு சென்றபோது உள்ளூர் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடினார். சச்சினுக்கு ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசினார். முதல் 5 பந்துகளையும் சச்சின் சரியாக அடித்தார். பின்னர் மட்டையை தலைகீழாக பிடித்த சச்சின், கடைசி பந்தில் என்னை அவுட் ஆக்குங்கள் பார்க்கலாம், என சவால் விட்டார். ஆனால் இந்த முறையும் அவரை பந்துவீச்சாளரால் அவுட் ஆக்க முடியவில்லை. கடைசி பந்தை மட்டையின் கைப்பிடியால் துல்லியமாக தடுத்தார் சச்சின். பின்னர் உள்ளூர் ரசிகர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

    இந்த மகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோவை சச்சின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 'கிரிக்கெட் மற்றும் காஷ்மீர்: சொர்க்கத்தில் ஒரு போட்டி!' என அந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    நேற்று ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கடைசி பகுதியான அமன் சேது பாலத்தை சச்சின் பார்வையிட்டார். அமன் சேதுவுக்கு அருகில் உள்ள கமான் முகாமில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

    ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சுர்சூ என்ற இடத்திற்கு சென்ற சச்சின், கிரிக்கெட் மட்டை தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர். 

    இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    என்று சேவாக் கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார்.
    • 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார்.

    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார். 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 12 இன்னிங்சுகளுக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்துள்ளார்.

    இந்த நிலையில் சுப்மன் கில்லை தனித்துவத்தின் சகாப்தம் என டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    சுப்மன்கில்லின் இன்னிங்ஸ் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. சரியான நேரத்தில் இந்த சதத்தை அடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.
    • என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றியவர் சச்சின் டெண்டுல்கர்.

    இந்நிலையில் தனது பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து ஸ்கூட்டரில் சென்ற ரசிகரை சச்சின் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார்.

    என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. எதிர்பார்க்கபடாத இடங்களில் இருந்து கிடைக்கும் அளவற்ற அன்பு வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

    அந்த வீடியோவில், சச்சின் காரில் எங்கேயோ சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார்.

    சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு என்று கூறினார். மேலும் அந்த ரசிகர் சச்சினில் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருந்ததை எடுத்து காட்டினார்.

    அதை பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பிறகு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தீர்கள். அதை பார்த்தது தான் நான் உங்களை நிறுத்தினேன் என்று கூறி அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்தார்.

    மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவன் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் பாலோ செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    • ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
    • மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.

    இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. பீகார் சிறுவன் சூர்யவன்ஷி அதை முறியடித்துள்ளார்.

    கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிராவில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.
    • இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.

    கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய சுற்றுலாத்தினத்தை கொண்டாடும் வகையில் சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில், மராட்டியத்தில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.

    அங்கு 3 தலைமுறை புலிகள் நடந்து வரும் காட்சியை பார்த்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்த இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. தேசிய சுற்றுலாத்தினத்தை ஆரவாரத்துடன் கொண்டாடுகிறோம்! தடோபாவில் நான் 3 தலைமுறை புலிகளை பார்த்தேன். ஜூனோபாய் என்ற புலியின் குட்டி வீரா, வீராவின் குட்டிகள் என அனைவரையும் பார்த்தேன். இந்தியாவில் ஆராய்வதற்கு பல இடங்கள் உள்ளன என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோ வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். ஜோ ரூட் இதுவரை 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்னும், சுனில் கவாஸ்கர் 2,483 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • விழாவில் பங்கேற்க முக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    கிரிக்கெட் உலகின் முன்னணி வீரரான சச்சின் டெண்டூல்கருக்கு கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் சச்சின் பங்கேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனைதொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தோனியையும் அவரது மனைவியையும் நேரில் சந்தித்து விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் தோனி இந்த விழாவில் பங்கேற்பாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கிரிக்கெட் வீரர் விராட் கோலி-க்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோலி கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    ×