search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvAUS"

    • இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது.

    காலே:

    ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

    லபுசேன் சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேர அந்த அணி முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 84 ரன்களும் ,மேத்யூஸ் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெண்டிஸ் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சண்டிமால் 118 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரமேஷ் மெண்டீஸ் 29 ரன்னிலும் தீக்‌ஷனா 10 ரன்னிலும் ஜெயசூர்யா 0 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் இரட்டை சதம் விளாசினார். கடைசி விக்கெட்டாக ரஜிதா 0 ரன்னில் அவுட் ஆனார். சண்டிமால் 206 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. வார்னர் 24, கவாஜா 29, லபுசன் 32, ஸ்மித் 0, ஹெட் 5, கிரீன் 23, ஸ்டார்க் 0, கம்மின்ஸ் 16, நாதன் லயன் 5, ஸ்வெப்சன் 0 என வரிசைக்கட்டி வெளியேறினர். 151 ரன்கள் எடுப்பதற்க்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக லபுசன் 32 ரன்கள் எடுத்திருந்தார்.

    இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார். சிறப்பாக பந்து வீசிய ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இலங்கை அணி வருகிற 16-ந் தேதி பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

    காலே:

    ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சண்டிமால் 118 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரமேஷ் மெண்டீஸ் 29 ரன்னிலும் தீக்‌ஷனா 10 ரன்னிலும் ஜெயசூர்யா 0 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் இரட்டை சதம் விளாசினார். கடைசி விக்கெட்டாக ரஜிதா 0 ரன்னில் அவுட் ஆனார். சண்டிமால் 206 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இலங்கை -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 70-வது ரன்னில் 2-வது விக்கெட்டை இழந்து.

    இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித் - லபுசேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுசேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். 104 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஹெட் 12 ரன்னிலும் கிரீன் 4 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனது ஸ்டீவ் ஸ்மித் 28-வது சதத்தை பதிவு செய்தார். 18 மாதங்களுக்கு பிறகு இவர் சதமடித்துள்ளார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனையடுத்து 2-வது நாள் இன்று தொடங்கியது. ஸ்மித் - அலெக்ஸ் ஜோடி தொடர்ந்து ஆடினர். 28 ரன்னில் அலெக்ஸ் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். ஸ்டார்க் 1, கம்மின்ஸ் 5, லயன் 5, ஸ்வெப்சன் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித் 145 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பிரதாப் ஜெயசூர்யா முதல் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை கைப்பறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் ஆகியோர் சதமடித்தனர்.
    • இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கல்லே:

    ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய லபுசேன், ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடியது. லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லபுசேன், ஸ்மித் ஜோடி 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்து அசத்தினார்.

    முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுக்டன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பெர்னாண்டோ 12 மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிக்வெல்லா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
    • ஆஸ்திரேலியா அணி வீரர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கையில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்கா மற்றும் கேப்டன் கருரத்ணே களமிறங்கினர். நிசாங்கா 23 ரன் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டீஸ் (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    மேத்யூஸ்-கருரத்ணே ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடினார். 13 ஓவர்கள் விக்கெட் கொடுக்காமல் தாக்குபிடித்த அந்த ஜோடியை நாதன் லயன் பிரித்தார். கருரத்ணே 28 ரன்கள் இருந்த போது வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தனஞ்சய டி சில்வா 14, சண்டிமால் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    நிதானமாக ஆடி வந்த மேத்யூஸ் 71 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டிக்வெல்லா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 58 ரன்களை குவித்த அவர் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளையும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    • இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம்.
    • டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் மிகவும் முக்கியமானதாகும்.

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது.

    ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடரில் மீண்டும் இணைகிறார். வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் டி20 தொடரின் போது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

    உடல் தகுதியை இன்னும் நிரூப்பிக்காததால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம். இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் மிகவும் முக்கியமானதாகும்.

    • ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
    • முதலில் விளையாடிய இலங்கை 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

    இந்நிலையில்.இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் தனுஷ்க குணதிலக்க 8 ரன்னுக்கும், மற்றொரு வீரர் பாத்தும் நிசங்கா 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். குசல் மெண்டிஸ் 26 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக சாமிக கருணாரத்னே 75 ரன்கள் குவித்தார்.

    இலங்கை அணி 43.1 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 39.3 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிபட்சமாக அலெக்ஸ் கேரி 45 ரன்களும், மார்னஸ் லாபுசேன் 31 ரன்களும் குவித்தனர்.  

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
    • இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

    கொழும்பு:

    இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் இலங்கை 2-1 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த தனஞ்செய டி சில்வா அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ குனமென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

    இறுதியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணியின் அசலங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

    • 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    கொழும்பு:

    இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் கேரி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். குசால் மெண்டிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    • இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 விக்கெட் வீழ்த்திய இலங்கையின் சமீகா கருணரத்னே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    பல்லேகலே:

    ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 36 ரன், தனஞ்செய டி சில்வா, ஷனகா தலா 34 ரன்கள் எடுத்தனர்.

    அதன்பின், மழை நின்ற பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால், ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்தார்.

    இதனால் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இலங்கை சார்பில் சமீகா கருணரத்னே 3 விக்கெட், துஷ்மந்தா சமீரா, தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லலகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    பல்லேகலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.

    இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குசால் மெண்டிஸ் 86 ரன்களும், பதும் நிசாங்க 56 ரன்களும், குணதிலக 55 ரன்களும் எடுத்தனர்.

    பின்னர் 301 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    ×